சிறுகதை – VSKDTN News https://vskdtn.org Tue, 20 Jul 2021 11:39:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விடுதியும் விருதும் https://vskdtn.org/2021/07/20/viduthiyum-viruthum/ https://vskdtn.org/2021/07/20/viduthiyum-viruthum/#comments Tue, 20 Jul 2021 11:39:04 +0000 https://vskdtn.org/?p=7774 ஆடியோ வடிவில்;

வசந்த காலம் தெருக்களில் மரங்கள் பூத்து குலுங்குகின்றன. மாணவ மாணவிகள் பட்டப்படிப்பிற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அன்னை சாரதா கல்லூரியில் மாணவிகள் புதிதாக சேருகிறார்கள். வெவ்வேறு துறையை சேர்ந்த மாணவிகள் ரமா, விமலா , கீதா மூன்று பேரும் மாணவிகள் விடுதியில் ஒரே அறையில் தங்கி படிக்கிறார்கள். விடுமுறை நாளில் மூன்று பேரும் தங்களுக்குள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். நேரம் போவதே தெரியாது. ரமா மற்றும் விமலா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். கீதா வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். விமலாவும் கீதாவும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். ரமா அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாள். கீதா எப்பொழுதும் விலை உயர்ந்த ஆடை அணிவாள்.

ஒரு விடுமுறை நாளில் ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்கோவில், சமயபுரம் கோவில்களுக்கு சென்றுவரும் வழியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஐாதி மறுப்பு கூட்டம் நடந்தது. அந்த பேச்சுக்களை இவர்கள் பேருந்தில் ஏறுவதற்காக நிற்கும் போது கேட்டார்கள். விடுதியில் வந்த உடன் கீதா விமலாவிடம் அவர்கள் பேச்சு சரியாகத்தான் தோன்றுகிறது. கருவறைக்குள் பிராமணர்கள் மட்டும்தானே உள்ளே போக முடிகிறது. மற்ற ஜாதிக்காரர்கள் போக முடியாதே என்றெல்லாம் பேச்சு நடக்கும் ரமா அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாள். விமலா பதில் கூறுவாள். எல்லா பிராமணர்களும் கருவறைக்குள் போகமுடியாது. அதற்கு சில வழிமுறைகள் உண்டு. அவர்கள் மட்டும்தான் போக முடியும். கீதா இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இப்படியாக இவர்களுடைய கல்லூரி வாழ்க்கை இரண்டு வருடம் முடிந்து விட்டது.

மூன்றாம் வருடம் நடந்து கொண்டிருக்கிறது. சில சமயம் அவர்களுக்குள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள். கீதா நான் திருமணம் பண்ணாமலேயே சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவேன். என்னுடைய வீட்டில் என் தங்கை இருக்கிறாள். அவள் வேண்டுமானால் திருமணம் பண்ணட்டும் நான் பண்ணமாட்டேன் என்பாள். ரமாவும் விமலாவும் வீட்டில் பெற்றோர் பார்த்துவைக்கும் வரனைத்தான் திருமணம் செய்வோம் என்பார்கள். விமலா நன்றாக ஓவியம் வரையக்கூடியவள். மாவட்ட அளவில் முதல் பரிசுகளைப் பெறுவாள். ஓவியத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பாள். ரமா அமைதியாக இருப்பாள். பிறருக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் உடையவள். ஆனால் மூன்று பேரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்துவிட்டது. விடுதியை காலி செய்ய போகிறார்கள்.

மூன்று பேரும் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டார்கள். விமலாவும், கீதாவும் ஒரே ரயிலில் கோவை நோக்கி போகிறவர்கள். ரமா மதுரை நோக்கி போகிறவள். கோவைக்கு இரவு 8.30மணிக்கு ரயில், ரமாவிற்கு இரவு 10.30 மணிக்கு. மாலை 5.00 மணிக்கு விமலாவும் கீதாவும் பொருட்கள் வாங்க பஜார் செல்கிறார்கள். வழியில் ஒரே கூட்டம், ஒரு பிச்சைக்காரி இறந்து கிடக்கிறாள். அருகில் 2வயது சிறுவன் அம்மா இறந்தது தெரியாமல் பசியோடு பால் குடிக்க அம்மாவின் சேலையை இழுத்துக்கொண்டு இருக்கிறான், 3வயது சிறுமி அம்மாவை கட்டிபிடித்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த உடன் விமலா உடனே அருகில் இருக்கிற கடையில் இருந்து பேப்பர் வாங்கி அந்த காட்சியை படம் வரைந்தாள். பிறகு இருவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இதைப்பற்றி ரமாவுடன் பேசுகிறார்கள். இதைக் கேட்டவுடன் ரமாவிற்கு அங்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். உடனே புறப்பட்டு அந்த இடத்திற்கு செல்கிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் அகிலபாரத அளவில் ஓவியப்போட்டி. தெரு எங்கும் விளம்பரம். ரமா டில்லியில் வந்து இறங்குகிறாள். ஓவியப்போட்டி விளம்பரம் பார்க்கிறாள். நடைபெறுகின்ற கல்லூரி வளாகத்திற்கு போகிறாள். வரிசையாக ஓவியங்களை பார்க்கிறாள். ஒரு இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து அங்கே செல்கிறாள். முதல்பரிசு பெற்ற படம் வைக்கப்பட்டுள்ளது. விமலா அங்கே நிற்கிறாள். பார்த்த உடன் 5 வருடத்திற்கு பிறகு பார்த்த சந்தோசத்தில் இருவரும் கட்டிப்பிடிக்கிறார்கள். பிறகு விமலா ரமாவிடம் இந்த குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறாள். ரமா உடனே ஓவியத்தை காண்பித்து சைகை மூலம் இவர்கள்தான் இந்த குழந்தைகள் என்றாள். விமலாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ரமா நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான் என்ன நடந்தது என்று கேட்கிறாள். விமலா மனதிற்குள் ஓவியம் மூலம் நாமும் ஏதாவது உதவி செய்யலாமே என்ற் எண்ணம் தோன்றுகிறது. உடனே ரமா அன்றிலிருந்து இன்றுவரை நடந்த விசயத்தை விமலாவிடம் கூறுகிறாள்.

நான் அங்கே போயிருந்தேன். எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே. தங்களுக்குள் இந்த குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒரு தம்பதி நமக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. இந்த குழந்தையை எடுத்துச் செல்லலாமா? என்று மனைவி கணவரிடம் கேட்கிறாள். இரண்டு குழந்தையையும் எப்படி எடுத்து செல்வது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பிச்சைக்கார குழந்தையை எடுத்து வந்திருக்கிறார்கள் என்று ஏளனமாக பேசுவார்கள் என்றார். இன்னொரு நபர் இந்த குழந்தைகளை நாம் எடுத்துச்செல்வோம். ஏதாவது பிச்சைக்காரர்களுக்கு விற்றுவிடுவோம். நமக்கு காசு கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் கேட்ட உடன் நான் நேராக சென்றேன். இரண்டு குழந்தையையும் என்னுடனேயே அழைத்துவந்துவிட்டேன். அம்மாவை மாநகராட்சிகாரர்கள் எரியூட்டினார்கள்.

இரவு 9.00 மணி ஆகிவிட்டது. நீங்கள் சென்றுவிட்டீர்கள். முகவரி வாங்கி கொள்ளவில்லை. விடுதிக்கு வந்த உடன் இரண்டு குழந்தையையும் குளிப்பாட்டி புதிய ஆடை அணிந்து என்னுடன் அழைத்து சென்றேன். ரயில் வந்தது. ரயிலில் மூன்று பேரும் ஏறினோம். இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. வீட்டிற்கு போனவுடன் அம்மா அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வது இதே இறந்து கிடக்கிறாள். அருகில் 2வயது சிறுவன் அம்மா இறந்தது தெரியாமல் பசியோடு பால் குடிக்க அம்மாவின் சேலையை இழுத்துக்கொண்டு இருக்கிறான், 3வயது சிறுமி அம்மாவை கட்டிபிடித்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த உடன் விமலா உடனே அருகில் இருக்கிற கடையில் இருந்து பேப்பர் வாங்கி அந்த காட்சியை படம் வரைந்தாள். பிறகு இருவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இதைப்பற்றி ரமாவுடன் பேசுகிறார்கள். இதைக் கேட்டவுடன் ரமாவிற்கு அங்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். உடனே புறப்பட்டு அந்த இடத்திற்கு செல்கிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் அகிலபாரத அளவில் ஓவியப்போட்டி. தெரு எங்கும் விளம்பரம். ரமா டில்லியில் வந்து இறங்குகிறாள். ஓவியப்போட்டி விளம்பரம் பார்க்கிறாள். நடைபெறுகின்ற கல்லூரி வளாகத்திற்கு போகிறாள். வரிசையாக ஓவியங்களை பார்க்கிறாள். ஒரு இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து அங்கே செல்கிறாள். முதல்பரிசு பெற்ற படம் வைக்கப்பட்டுள்ளது. விமலா அங்கே நிற்கிறாள். பார்த்த உடன் 5 வருடத்திற்கு பிறகு பார்த்த சந்தோசத்தில் இருவரும் கட்டிப்பிடிக்கிறார்கள். பிறகு விமலா ரமாவிடம் இந்த குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறாள். ரமா உடனே ஓவியத்தை காண்பித்து சைகை மூலம் இவர்கள்தான் இந்த குழந்தைகள் என்றாள். விமலாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ரமா நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான் என்ன நடந்தது என்று கேட்கிறாள். விமலா மனதிற்குள் ஓவியம் மூலம் நாமும் ஏதாவது உதவி செய்யலாமே என்ற் எண்ணம் தோன்றுகிறது. உடனே ரமா அன்றிலிருந்து இன்றுவரை நடந்த விசயத்தை விமலாவிடம் கூறுகிறாள்.

நான் அங்கே போயிருந்தேன். எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே. தங்களுக்குள் இந்த குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒரு தம்பதி நமக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. இந்த குழந்தையை எடுத்துச் செல்லலாமா? என்று மனைவி கணவரிடம் கேட்கிறாள். இரண்டு குழந்தையையும் எப்படி எடுத்து செல்வது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பிச்சைக்கார குழந்தையை எடுத்து வந்திருக்கிறார்கள் என்று ஏளனமாக பேசுவார்கள் என்றார். இன்னொரு நபர் இந்த குழந்தைகளை நாம் எடுத்துச்செல்வோம். ஏதாவது பிச்சைக்காரர்களுக்கு விற்றுவிடுவோம். நமக்கு காசு கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் கேட்ட உடன் நான் நேராக சென்றேன். இரண்டு குழந்தையையும் என்னுடனேயே அழைத்துவந்துவிட்டேன். அம்மாவை மாநகராட்சிகாரர்கள் எரியூட்டினார்கள்.

இரவு 9.00 மணி ஆகிவிட்டது. நீங்கள் சென்றுவிட்டீர்கள். முகவரி வாங்கிகொள்ளவில்லை. விடுதிக்கு வந்த உடன் இரண்டு குழந்தையையும் குளிப்பாட்டி புதிய ஆடை அணிந்து என்னுடன் அழைத்து சென்றேன். ரயில் வந்தது. ரயிலில் மூன்று பேரும் ஏறினோம். இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. வீட்டிற்கு போனவுடன் அம்மா அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வது இதே அவனிடம்‌ ‌தன்னை‌ ‌இழந்து‌ ‌விட்டேன்.‌ ‌திருமணம்‌ ‌செய்ய‌ ‌வேண்டும்‌ ‌என‌ வற்புறுத்துகிறான்.‌ ‌விதவிதமாக‌ ‌பைக்கில்‌ ‌என்னை‌ ‌வெளியே‌ ‌அழைத்துச்‌ செல்வான்.‌ ‌

இந்த‌ ‌நேரத்தில்‌ ‌வீட்டில்‌ ‌திருமண‌ ‌பேச்சு‌ ‌வந்தது.‌ ‌நான்‌ ‌அவனைத்தான்‌ திருமணம்‌ ‌செய்வேன்‌ ‌என்றேன்.‌ ‌முடியாது‌ ‌என்றார்கள்‌ ‌ஒரு‌ ‌நாள்‌ ‌அவனோடு‌  ஓடிவிட்டேன்.‌ ‌அவன்‌ ‌என்னை‌ ‌அழைத்துக்கொண்டு‌ ‌போலீஸ்‌ ‌ஸ்டேசனிற்கு‌ சென்று‌ ‌எங்கள்‌ ‌இருவருடைய‌ ‌உயிருக்கும்‌ ‌ஆபத்து‌ ‌இருக்கிறது‌‌என்று‌ ‌மனு‌ கொடுத்தான்‌ ‌என்னுடைய‌ ‌அப்பா‌ ‌அம்மா‌ ‌இருவரையும்‌ ‌கைது‌ ‌செய்து‌ ‌போலீஸ்‌ ஸ்டேசனுக்கு‌ ‌அழைத்து‌ ‌வந்தார்கள்‌ ‌என்னுடைய‌ ‌அம்மா‌ ‌என்னுடைய‌ ‌காலில்‌  விழுந்து‌ ‌அவனை‌ ‌விட்டுவிடு‌ ‌நம்முடைய‌ ‌குடும்ப‌ ‌மானம்‌ ‌போய்விட்டது.‌ ‌அவன்‌ வேறு‌ ‌சமுதாயத்தைச்‌ ‌சேர்ந்தவன்.‌ ‌அதைக்‌ ‌கூட‌‌நான்‌ ‌ஏற்றுக்கொள்கிறேன்.‌ ஆனால்‌ ‌அவன்‌ ‌நல்லகுடும்பத்தில்‌ ‌பிறந்தவன்‌ ‌இல்லை.‌ ‌படிப்பும்‌ ‌இல்லை.‌

வெளியூராக‌ ‌இருந்தாலும்‌ ‌பரவாயில்லை.‌ ‌திருட்டு‌ ‌குடும்பம்.‌ ‌நம்முடைய‌ தோட்டத்தில்‌ ‌வேலை‌ ‌செய்தவனின்‌ ‌மகன்‌ ‌என்று‌ ‌கூறி‌ ‌அவன்‌ ‌வேண்டாமென்று‌ கதறி‌ ‌அழுது‌ ‌நான்‌ ‌இறந்து‌ ‌விடுவேன்‌ ‌என்று‌ ‌கூறினாள்.‌ ‌நீ‌ ‌வேண்டுமானால்‌  இறந்து‌ ‌போ‌ ‌நான்‌ ‌அவனோடு‌ ‌தான்‌ ‌இருப்பேன்‌ ‌என்றேன்.‌ ‌எனக்கு ‌உன்னுடைய‌ சொத்து‌ ‌எதுவும்‌ ‌தேவை‌ ‌இல்லை, ‌அவன்‌ ‌மட்டும்‌ ‌போதும்‌ ‌என்றேன்.‌ ‌நீ‌ ‌நாசமா‌ ‌ போ, ‌நீ‌ ‌பின்னாடி‌ ‌வருத்தப்படுவாய்‌ ‌என்று‌ ‌சாபம்‌ ‌விட்டு‌  ஸ்டேசனில்‌ ‌எழுதி‌  கொடுத்து‌ ‌சென்று‌ ‌விட்டார்கள்.  ‌ ஒரு‌  மாதம் ‌கழிந்தது.  ‌வீட்டில்‌  இருந்து‌ ‌பணம்‌ ‌வாங்கி‌ ‌வா.‌  சொத்தை‌ ‌எழுதி‌ ‌வாங்கி‌ ‌வா‌ ‌என்று‌ ‌கூறி‌ ‌என்னை ‌அடிக்க‌ ‌ ஆரம்பித்தான்.‌ ‌தினசரி‌  மது‌ ‌அருந்திவிட்டு ‌வருவான். ‌ஏதாவது‌  கேட்டால்‌ ‌அடிப்பான்.‌ ‌இரவில்‌ ‌தூங்கவே‌ ‌முடியாது,‌ ‌நரக‌ வேதனை‌ ‌அனுபவித்தேன்.‌ ‌அவனுடைய‌‌ சகோதரி‌ ‌கூட‌  திட்டுவாள்.‌ ‌எனக்கு‌ ‌விறகு‌ ‌அடுப்பில்‌ ‌சமைக்கவே‌ ‌தெரியாது.‌  விறகே‌ ‌இருக்காது.‌ ‌எங்கேயாவது‌ ‌போய்‌ ‌விறகு‌ ‌கொண்டு‌ ‌வந்து‌ ‌

சமைத்து‌ ‌கொடு‌ ‌என்பார்கள்.‌ ‌இந்த‌ ‌செய்தி‌ ‌எல்லாம்‌ அம்மாவிற்கு‌ தெரியவருது.‌ ‌குடும்பத்திற்கு‌ ‌அவமானம்‌  ஏற்படுத்தி‌ ‌விட்டாள்‌ ‌வெளியே‌ ‌இறங்க‌ ‌முடியவில்லை‌ ‌காரணம் பக்கத்து‌  தெரு‌  வேறு.‌  அவமானம்‌  தாங்கமுடியாமல்‌ வீடு‌  மற்றும் ‌சொத்துக்கள்‌ ‌எல்லாம்‌  அருகில ‌உள்ள‌  மாரியம்மன்‌ கோவிலுக்கு‌ ‌எழுதி‌ ‌வைத்துவிட்டு ‌மூன்று‌ ‌பேரும்‌  விசம்‌ ‌அருந்தி‌ தற்கொலை‌ ‌செய்து‌ ‌கொண்டார்கள்.‌ பின்னால்‌  விஜய்‌  ரௌடியாக‌ ‌மாறுகிறான்.‌ ‌தினசரி‌ ‌வீட்டில்‌ ‌போலீஸ்‌ வரும். பணத்திற்காகவும், பெண்ணிற்காகவும்‌ பல‌ ‌பேர்களை ‌கொலை‌ செய்தான். வேறு ‌வழியில்லாமல் ‌போலீஸ் ‌என்கவுண்டர்‌ ‌செய்தார்கள்.‌

இப்பொழுது‌ ‌எனக்கு‌ ‌வீட்டிற்கும்‌ ‌போகமுடியாது.‌ ‌இங்கேயும்‌ ‌இருக்க‌ முடியாத‌ ‌நிலைமை‌ ‌என்ன‌ ‌செய்வது‌ ‌என்னுடைய‌ ‌தலையெழுத்து.‌ ‌நீங்கள்‌ இருவரும்‌ ‌அப்பொழுதே‌ ‌சொல்வீர்கள்‌ ‌இந்த‌ ‌அமைப்பை‌ ‌நம்பாதே‌ இவர்களிடம்‌ ‌பேச்சு‌ ‌மட்டும்‌ ‌தான்‌ ‌இருக்கும்.‌ ‌இதுவரைக்கும்‌ ‌அவர்கள்‌ சமுதாயத்திற்காக‌ ‌எதுவுமே‌ ‌செய்ததில்லை‌ ‌காசு‌ ‌வசூல்‌ ‌செய்து‌ மேடையில்‌ ‌பேசுவார்கள்.‌ ‌மது‌ ‌அருந்துவார்கள்.‌ ‌சமுதாயத்தை‌ முன்னேற்றுவதற்காக‌ ‌எதுவுமே‌ ‌செய்யமாட்டார்கள்.‌ ‌சமுதாயத்தில்‌ எப்பொழுதும்‌ ‌ஜாதி‌ ‌பெயர்‌ ‌சொல்லி‌ ‌கலவரத்தை‌ ‌ஏற்படுத்துவார்கள்‌ என்று‌ ‌கூறியும்‌ ‌நான்‌ ‌கேட்கவில்லை.‌ ‌அன்றே‌ ‌கேட்டிருந்தால்‌ ‌எனக்கு‌ இன்று‌ ‌இந்த‌ ‌நிலை‌ ‌வந்திருக்காது‌ ‌என்று‌ ‌அழுதாள்.‌ ‌டீ‌ ‌கூட‌ ‌போட்டுக் கொடுக்க‌ ‌முடியவில்லையே,‌ உடனே ரமாவும் விமலாவும், கீதா நீ கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம். சரி அது இருக்கட்டும் உங்களைப்பற்றி விசாரிக்கவில்லையே என்றாள் கீதா. ரமா உனக்கு எத்தனை குழந்தைகள் என்றாள். எனக்கு இரண்டு குழந்தைகள் என்று கூறினாள் ரமா. விமலா எனக்கும் ஒரு குழந்தை என்று கூறி தன்னைப்பற்றியும் நாங்கள் இருவரும் சந்தித்தது பற்றியும் கூறினார்கள்.

நான் அன்று திருமணம் செய்யமாட்டேன், புரட்சி ஏற்படுத்துவேன் என்றேன். ஆனால் நீயோ எதுவுமே கூறாமல் அமைதியாக இருந்து எந்த பெண்ணாலும் செய்ய முடியாததை நீ சாதித்து விட்டாயே என்றாள் கீதா. உடனே ரமா எனக்கு வீட்டில் பிரச்சனை ஏற்பட்டபோது என்னுடைய பெரியப்பா மகன் கேசவன் (அண்ணன்). ஜாதி வேறுபாடு பார்க்காமல் தன்னுடைய சொந்த வேலை முடிந்த பிறகு எப்பொழுதும் சமுதாய வேலையில் ஈடுபடுவான். நாட்டிற்காக உயிர்விடுவதை விட நாட்டிற்காக வாழ்ந்து காட்டுவதே மேல் என்று கூறுவான் அவனால்தான் நான் நம்பிக்கையோடு வேலை செய்கிறேன் என்றாள் ரமா. செலவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு நான் அமெரிக்கா செல்வதற்குள் வந்து போகிறேன் என்று கூறி இருவரும் திரும்பிவிட்டார்கள்.

ஒரு மாதம் கழித்து இரண்டு பேரும் வருகிறார்கள். தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து. அங்கே கீதாவை தங்கவைத்து மாதாமாதம். பணம் கொடுத்து உதவி செய்கிறாள். கீதா சேரி பகுதியில் உள்ள மக்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கிறாள். அக்கம் பக்கத்து தெருவில் உள்ளவர்கள் வந்து படிக்கிறார்கள் ஊரில் மரியாதை ஏற்படுகிறது. பஞ்சாயத்து தேர்தல் வருகிறது. ஊர் மக்கள் தேர்தலில் போட்டியிட சொல்கிறார்கள், சுயேட்சையாக போட்டியிடுகிறாள். எதிர்த்து வேறுயாரும் நிற்கவில்லை. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறாள். பாரதத்தில் முன்னுதாரணமான பஞ்சாயத்தாக மாற்றுகிறாள். இரண்டு வருடம் கழித்து அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளுக்கு ஐனாதிபதி விருது வழங்க இருக்கிறார். நீங்களும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி டில்லி வரவேண்டும் என்று இருந்தது. அன்றைய தினம் சிறந்த ஓவியத்திற்காகவும், அதிகமான நபர்களுக்கு இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்ததற்காகவும் விமலாவிற்கு அழைப்பு வந்தது. இருவரும் டில்லி செல்கிறார்கள். விருது வாங்குகிறார்கள். அதே நாளில் அமெரிக்காவில் சிறந்த சேவை செய்ததற்கான விருதை அங்குள்ள அதிபரிடம் ரமாவும் வாங்குகிறாள். இவ்வாறு வாழ்கையில் மூன்று பேரும் விருது வாங்குகிறார்கள். விடுதியில் ஏற்பட்ட நட்பு விருது வாங்குவதில் முடிந்தது.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/07/20/viduthiyum-viruthum/feed/ 2
தாயன்பு https://vskdtn.org/2021/07/18/thaynbu/ https://vskdtn.org/2021/07/18/thaynbu/#respond Sun, 18 Jul 2021 08:21:17 +0000 https://vskdtn.org/?p=7710 ஆடியோ வடிவில்.

வேலம்மா, வேலம்மா என்ன ரொம்ப சந்தோசமாக இருக்கிறாய். இல்ல வசந்தி மாமி சனி ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் பெங்களூரில் வேலை பார்க்கும் என் பொண்ணை பார்க்க போறேன். போகக்கூடிய நேரத்தில் அவளுக்கு பிடித்த ஓமபொடி செஞ்சிட்டு போறேன் ஆகையால் இன்று சீக்கிரமாக பாத்திரம் கழுவி விட்டு போகிறேன் மாமி என்று கூறிவிட்டு புறப்படுகிறாள். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வசந்தி மாமி வீட்டிற்குள் வேலம்மா போகிறாள். மாமி ஆச்சரியத்தோடு பார்க்கிறாள். என்னம்மா இரண்டு நாள் விடுமுறை கேட்டுட்டு போனாய் ஒரு மாதிரியா முகம் இருக்கு என்ன ஆயிற்று.

ஒன்றும் இல்லை அம்மா. நீ பல நாள் பட்டினியாக இருந்தபோது கூட வெளியே காட்டிக்காம சந்தோசமாக இருப்பாய், சொல்லு. ஏன் வருத்தத்தோடு இருக்கிறாய் சொல் என்றாள் மாமி. நான் வெள்ளிக்கிழமை மாலை இங்கிருந்து வீட்டிற்குப் போய் பலகாரம் செஞ்சிட்டு, காலை சீக்கிரம் திருச்சியிலிருந்து புறப்பட்டு பெங்களூர் போனேன். மதியம் ஒரு மணி பஸ் ஸ்டாண்டில் இருந்து இறங்கி ஐடி கம்பெனிக்கு போனேன். வழியில் மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்று சாப்பிடலாம் என்ற எண்ணத்தோடு போனேன். வாசலில் செக்யூரிட்டி தடுத்து நிறுத்தினான். யாரைப் பார்க்கப் போகிறீர்கள். இங்கு வேலை பார்க்கிற மகேஸ்வரியை பார்க்க போகிறேன். இந்த புக்கில் கையெழுத்து போட்டுட்டு போங்க என்றார். நான் படிக்கவில்லை. எனக்கு கையெழுத்து போட தெரியாது கைநாட்டு வைத்துவிட்டு உள்ளே போனேன்.

அலுவலகத்தின் அறைக்கு வெளியே நாற்காலியில் உட்கார்ந்து இருந்தேன். அங்கு இருந்தபோது வழியில் இரண்டு மூன்று பேர் விசாரிக்கிறார்கள். மகேஸ்வரியை பார்க்க வேண்டும் என்றேன். சரி அம்மா உட்காருங்க. நாங்க போய் சொல்கிறோம் என்றார்கள். இதற்கிடையில் வெயிலில் நடந்து போனதால் தண்ணீர் தாகம். அங்கு விசாரித்து அதோ அங்கே இருக்கிறது. போய் குடிங்க அம்மா என்றார். ஜன்னல் பக்கம் போனேன். அங்கே இரண்டு பேர் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆகையால் அங்கே நின்று கொண்டிருந்தேன். ஜன்னலின் மறுபுறம் மகளின் பேச்சு கேட்டது. மகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அப்பொழுது ஒரு பெண் அவளிடம் உன்னை பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார்கள். அம்மாவா அவர் எப்படி இருப்பாள் என்றாள் மகேஸ்வரி. அவர்கள் பாவம் முகத்தில் தீக்காயம் பட்டு, முகம் ஒரு மாதிரியா இருக்கிறது என்றாள். ஓ அவளா? எங்க சொந்தக்காரங்க என்றாள்.

இவள் ஏன் இங்கு வந்தாள் என்று புலம்புகிறாள். இருப்பிடத்தை விட்டு எழுந்தாள். உடனே இன்னொரு அம்மா மகேஸ்வரி உன்னைத்தேடி ஒரு அம்மா வெளியே உட்கார்ந்து இருக்கிறாள் என்றாள். அவங்க என் பக்கத்து வீட்டு அம்மா. ஏதோ இங்கு வந்த இடத்தில் என்னை பார்க்க வேண்டும் என்று வந்திருப்பார்கள். மகேஸ்வரி மெல்ல நடந்து வருகிறாள் வழியில் ஒரு பையன் சொன்னான். உன்னை விசாரித்து ஒரு அம்மா வந்திருக்கிறாள் என்றான். அவர்களா? எங்க வீட்டு வேலைக்காரி. எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியவில்லை. போய் பார்க்கிறேன் என்று வருகிறாள். இதெல்லாம் கேட்டு விட்டு தண்ணீர் குடித்து விட்டு வாசல் பக்கம் வந்தேன். உடனே மகேஸ்வரி சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே, ஏன்? இங்கு வந்தாய் எனக்கு இரண்டு நாள் இங்கு வேலை அதிகம்.

உங்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லை. கேன்டீன் போய் சாப்பிட்டு விட்டு போ என்றாள். கையில் இருந்த பொட்டலத்தையும் கொடுத்துவிட்டு எனக்கு பசிக்கவில்லை என்று கூறி விட்டு புறப்பட்டு போய்விட்டாள். எனக்கு பசி தாங்க முடியவில்லை ஆதலால் அங்குள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். மனதில் தீக்காயம் ஏற்பட்டது நினைவிற்கு வந்தது. அவளுடைய அப்பா இறந்து ஒரு மாதம் ஆனது. வீட்டில் நானும் அவளும் மட்டும் தான் இருந்தோம். அவளுக்கு அப்போது ஆறு வயது இருக்கும். பார்ப்பதற்கு என்னைப் போல அழகாக இருந்தாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணியிருக்கும் அவளுக்கு இருந்த சாதம் ஊட்டிவிட்டு நான் தண்ணீர் குடித்துவிட்டு படுத்திருந்தேன்.

திடீரென்று அலறும் சத்தம் கேட்டது பார்க்கும் போது எரிந்துகொண்டிருந்த சிம்னி விளக்கு சாய்ந்து கிடக்கிறது. அங்கிருந்து மண்ணெண்ணெய் கீழே சிந்தி, அதுவும் எரிந்து மகேஸ்வரி பாவாடை எரிந்து கொண்டிருந்தது. உடனே தீயை போராடி அணைத்தேன் ஆனால் அந்த தீ என் மீது பட்டு நான் எரிந்து கொண்டிருக்கிறேன். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தீயை அணைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள். அவளை காப்பாற்ற போனதில் என்னுடைய முகம் எல்லாம் எரிந்து நான் இன்று இப்படி அருவருப்பாக இருக்கிறேன். நான் இவளை விட அழகாக தான் இருந்தேன். எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தேன். தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலம் ஆண்டாள் கல்லூரியில் எம் எஸ்சி படிக்க வைத்தேன். எத்தனையோ நாள் அவளுக்கு உணவு கொடுத்துவிட்டு சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட மகள் இன்று இப்படி சொல்லி விட்டாளே. தீக்காயத்தினால் இப்படி அழகில்லாமல் இருக்கிறேன் அவளுக்கு அம்மா என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. நான் யாருக்காக வாழ்கிறேன். எங்கேயாவது போய் இறந்து விடுவோமா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பக்கத்து மரத்தடியில் ஒரு ஆண், பெண் பேசிக்கொண்டிருந்தார்கள். தீபக், போரடிக்கிறது நாளைக்கு விடுமுறை நாம் இன்று ஜாலியாக வெளியே எங்கேயாவது போவோம். ஹோட்டல் போய் சாப்பிட்டு விட்டு தங்கிவிட்டு திங்கள் காலையில் வேலைக்கு போவோம் என்றாள். அவனோ வேண்டாம் மகேஸ்வரி, என்றான். வலுக்கட்டாயமாக நீ வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினாள்.

என்னிடம் காசு இல்லை என்றான். அவள் நான் உன்னிடம் காசு கேட்டேனா என்றாள். சரி என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் போகிறார்கள். இதைக் கேட்டவுடன் எனக்கு பசி நீங்கியது. கடவுளே! இதற்காகத்தான் இவளை கஷ்டப்பட்டு வளர்த்தேனா? என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டு, நேராக வீட்டிற்கு இரவே வந்து சேர்ந்தேன். இரவில் தூக்கம் இல்லை. என்ன வாழ்க்கை இது. ஏன்? வாழ வேண்டும் என்று தோன்றுகிறது மாமி என்றாள். காலம் மாறிவிட்டது அப்படித்தான் இருக்கும். என்றைக்காவது அவளுக்கு புத்தி வந்து வருந்துவாள் என்றாள் மாமி. வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் வேலம்மாள். சிறிது நேரத்தில் மாமி வீட்டிற்கு போன் வந்தது. உங்கள் வீட்டில் வேலை செய்யக்கூடிய வேலம்மாள் மகள் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டாள். பெங்களூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐசியூவில் இருக்கிறாள் என்று சொல்லி கட் பண்ணினாள். இந்த செய்தி வேலம்மாளிடம் தெரிவிக்கப்படுகிறது. அதுவரைக்கும் மகள் மீது பயங்கரமான கோபத்தில் இருந்தாள். செய்தி கிடைத்தவுடன் பெங்களூரு இரவோடு இரவாக புறப்படுகிறாள். அங்கே செல்கிறாள். மரத்தடியில் நேற்று பார்த்த பையன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவள், அவனிடம் விசாரித்தாள். நாங்கள் இருவரும் பைக்கில் போய்க் கொண்டு இருந்தோம். ஸ்பீட் பிரேக்கில் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தாள். பின்னால் வந்த வண்டி ஏறி இறங்கி வலது கைவிரல் இரண்டு துண்டாகி விட்டது மற்றும் தலையிலும் அடிப்பட்டது. அதனால் ஐசியூவில் இருக்கிறாள் 24 மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும் என்றார்.

வேலம்மாள் எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள். கடவுள் அருளால் நினைவு வந்தது. 10 நாளில் டிஸ்சார்ஜ் ஆகி திருச்சிக்கு வந்தாள். மீண்டும் பழைய ஓலைக் குடிசையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. அடிக்கடி கம்பெனி ஞாபகம் வருகிறது. அம்மா அன்று என்னை பார்க்க வந்தபோது, அம்மா அழகாக இல்லையே என்று, சக ஊழியரிடம் உறவினராகவும், பக்கத்து வீட்டுக்காரியாகவும். அதைவிட வேலைக்காரியாகவும் தவறுதலாக சொல்லிவிட்டேனே, என்று அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

இது எல்லாம் கடவுள் தண்டனை. எனக்கு இப்பொழுது வலது கையில் இரண்டு விரல் இல்லாமல் ஆகிவிட்டது என்று மீண்டும் அழுகிறாள். அம்மா, நீ கவலைப்படாதே நான் அதை அன்றே மறந்து விட்டேன். நீ உன் உடம்பை கவனித்து வேலைக்கு போய் நன்றாக இரு, என்றாள். இல்லை அம்மா, நான் இனி உயிரோடு இருக்கும் வரை நீ என்னோடு தான் இருக்க வேண்டும். எனக்கு திருமணம் ஆனாலும் நீ எங்களோடு தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெங்களூரில் வீடு பார்த்து அம்மாவையும் அழைத்து செல்கிறாள்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/07/18/thaynbu/feed/ 0
விவசாயியின் வாழ்க்கை https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/ https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/#comments Mon, 14 Jun 2021 12:58:25 +0000 https://vskdtn.org/?p=6629 விவசாய கிராமம். தினசரி மக்கள் வானத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள். மழை எப்பொழுது பெய்யும் என எதிர்பார்த்து இருப்பார்கள். மழை பெய்தால் தான் விவசாயம் செய்யமுடியும். விவசாயம் ஆரம்பித்தாலும் தண்ணிருக்காக காத்திருக்க வேண்டும். கிணறு தோண்டினாலும் தண்ணிர் தேவையான அளவு இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் மாடசாமி தம்பதிகள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் வயலிலே தான் இருப்பார்கள். ஒழுங்காக சாப்பிடுவதில்லை. மூன்று குழந்தைகள். வனஜா, குமார் மற்றும் ரவி மூன்றுபேரும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். படிக்க வைப்பதே கஷ்டமாக இருக்கிறது.

இந்த சூழலில் வனஜா நன்றாக படிக்கிறவள். 10ம் வகுப்போடு நின்றுவிடுகிறாள். அப்பா நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். தம்பிகள் படிக்கட்டும். இல்லை அம்மா நி 10ம் வகுப்பில் 90சதவிதம் மார்க் வாங்கியிருக்கிறாய். நாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நீ படியம்மா என்றார். வீட்டு சூழ்நிலையை புரிந்து கொண்டு பிடிவாதமாக படிக்க மறுத்து அப்பாவிற்கு விவசாயத்தில் உதவி செய்கிறாள். மூன்று பேரும் கஷ்டப்பட்டு இருவரையும் படிக்க வைக்கிறார்கள். சில நாட்களில் 2பேரும் குடும்ப கஷ்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். உடனே குழந்தைகள் அப்பா நாங்கள் பெரிய ஆள் ஆனபிறகு உங்கள் இருவரையும் கஷ்டப்படாமல் காப்பாற்றுவோம் என்பார்கள். இருவரும் படித்து அரசாங்க வேலை கிடைத்தது.

உடனே அக்காவிற்கு ஒரு விவசாயியை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள் அதே ஊரைச் சேர்ந்த விவசாயிக்கு. உழைத்து உழைத்து அப்பா, அம்மா உடம்பு பலகீனமாகிறது. இருந்தாலும் மனதில் ஒரு சந்தோஷம். பசங்க இரண்டு பேருக்கும் வேலை கிடைத்ததே என்று. பெரிய பையன் குமாருக்கு வேலைக்கு ஏற்றவாறு பணக்கார வீட்டில் பெண் கிடைக்கிறது. ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்பா என் மனைவிக்கு இந்த வீட்டு சூழ்நிலை பிடிக்கவில்லை. நாங்கள் தனிக்குடித்தனம் போகிறோம் என்றார். சரி பரவாயில்லை. நீ சந்தோஷமாக இரு என்றார்.

ஒரு வருடம் முடிந்தது. ரவிக்கு திருமணம் ஏற்பாடு. பெண் பார்க்கும் வேலை ஆரம்பித்தது. அண்ணனுக்கு பெரிய இடத்தில் திருமணம் நடந்தது. அவா;கள் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள். நம்ம அளவில் பார்ப்போமே என்றார். ரவி பேங்கில் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்கிற பெண்ணையே திருமணம் செய்ய முடிவு செய்கிறார். வீட்டில் பேசி திருமணம் நடக்கிறது. வீட்டில் இருந்து வேலைக்கு போவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஆதலால் பேங்க் அருகிலேயே வீடு பார்ப்போம் என்று ஒரு வாரத்திலேயே. இந்த சூழலில் சொத்தை பாகப்பிரிவினை செய்து கேட்கிறார்கள். அப்பா வேண்டாம் என்றார். அம்மா பரவாயில்லை நம்ம பிள்ளைகள் தானே என்றாள். விருப்பம் இல்லாமல் பிரித்து கொடுக்கிறார். மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆள் வைத்து விவசாயம் செய்து வருமானத்தை அவரவர்கள் பிரித்து எடுக்கிறார்கள். சாப்பிட வழியில்லை. இரண்டு மகன்களும் ஒருவேளை கூட அம்மா அப்பாவிற்கு உணவு கொடுக்க தயாரில்லை.

இந்த நேரத்தில் அம்மா வருத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள். ஆடம்பரமாக வெளி உலகிற்கு தெரியும் படி இறுதிசடங்குகள் மற்ற சடங்குகள் நிறைவு பெறுகிறது. அவா;கள் இருவரும் சென்றுவிட்டார்கள். உணவிற்கு வழியில்லை. வனஜா கூப்பிடுகிறாள். அப்பா என்னுடைய வீட்டிற்கு வாருங்கள். நாங்கள் சாப்பிடுவதில் ஒரு பங்கு உனக்கு தருகிறேன். அப்பா கவலைப்படாதே என்னுடன் வாருங்கள் என்றாள். பரவாயில்லை அம்மா நீ அழைத்ததே சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டார். குமார் மற்றும் ரவி கவலைப்படவில்லை. ஆனால் வனஜாவிற்கு வருத்தம். எப்படி கஷ்டப்பட்டு பலநாள்கள் அவர்கள் சாப்பிடாமலே எங்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள் என்று பள்ளிப்பருவத்தை நினைத்து பார்க்கிறாள். ஒரு வருடம் ஆகிவிட்டது.

பலபேர்கள் அப்பாவை கேரளத்தில் பார்த்தேன். கோவிலில் பிச்சை எடுக்கிறார் என்று செய்தி மகன்களுக்கு கிடைக்கிறது. மேலும் 6 மாதம் ஆகிவிட்டது. கேரளா பம்பர் லாட்டரி பிச்சைக்காரனுக்கு 10 கோடி பரிசு கிடைத்தது என்ற செய்தி விசாரித்து குமார் மற்றும் ரவி இரண்டு பேரும் கேரளம் செல்கிறார்கள். விசாரிக்கிறார்கள். கோவிலில் இருந்த பிச்சைக்காரன் இப்பொழுது அங்கு இல்லை. எங்கு போயிருக்கிறான் என்று தெரியவில்லை. 6 வருடம் கழித்து கையில் ஒரு கமண்டலத்தோடு வருகிறார். தோளில் ஒரு தோள்பை. எங்கு சென்றாலும் இந்த இரண்டையும் யாரிடமும் கொடுக்கமாட்டார். பக்கத்து தோட்டக்காரன் விட்டிற்கு போகிறார். அவர்கேட்கிறார். உங்களுக்கு கேரளா பம்பா; லாட்டரி பரிசு 10 கோடி கிடைத்ததா? பேப்பரில் செய்தி வந்தது என்றார். அப்படியா நடந்த விவரத்தை சொன்னார் மாடசாமி. நான் கேரளாவிற்கு போனது உண்மைதான் கோவிலில் இருந்தேன். ரிஷிகேஷில் இருந்து ஒரு சன்னியாசி வந்தார். அவர்என்னை அழைத்து சென்றார். நான் ஆஸ்ரமத்தில் இருந்தேன். சன்னியாசியிடம் என்னுடைய வாழ்க்கையைப்பற்றி சொன்னேன். நீ கவலைப்படாதே நான் ஒரு கமண்டலம் தருகிறேன். அதை நீ எங்கு சென்றாலும் கொண்டு செல்ல வேண்டும். யாரிடமும் கையில் கொடுக்கக்கூடாது என்றார். நீ ஊருக்கு போய்வா என்றார். அதன்படி வந்தேன் என்றார். அப்பா வந்த செய்தி மகன்கள் காதிற்கு எட்டுகிறது. அப்பாவைத்தேடி வருகிறார்கள். அப்பாவிடம் பேசுகிறார்கள். என்னுடன் வாருங்கள் என்றான் குமார். ரவி என்னுடன் வாருங்கள் என்றான். இரண்டு மகன்களும் பேசி ஒரு மாதம் ஒரு வீட்டில், ஒரு மாதம் இன்னொரு விட்டில் இருங்கள். நாங்கள் உங்களை கவனிக்கிறோம் என்றார்கள். பக்கத்து தோட்டக்காரரிடம் போய் சொல்கிறார். அவர்கள் விருப்பப்படியே போகிறேன். ஆனால் நான் இறந்தபிறகு என்னுடைய இறுதி சடங்கு எல்லாம் முடிந்த பிறகு ஊர் தலைவன் முன்னிலையில்தான் இந்த கடிதத்தை பிரிக்க வேண்டும் என்ற கண்டிசனோடு போகிறார்.

மாதத்தில் ஒரு நாள் மகள் வீட்டிற்கு போவார். மகன்கள் கொடுக்கக்கூடிய காசை சேமித்துவைத்து மகளுக்கு கொடுப்பார். திடீரென்று ஒரு நாள் இறந்து விடுகிறார். காரியங்கள் முடிந்துவிட்டது. ஊர் கூடியது. கமண்டலம் இரண்டு கவா; இருக்கிறது. ஒன்று வனஜாவிற்கு. இன்னொன்று குமார் மற்றும் ரவிக்கு. ஊர் தலைவருக்கு ஒரு கடிதம். அதில் இதைத்தான் முதலில் பிரிக்க வேண்டும். இன்னொன்று பொதுவாக எல்லோர் மத்தியிலும் வாசிக்க வேண்டும் என்று அதன்படி வனஜாவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அவள் பிரித்து தனியாக மனதுக்குள் படிக்கிறாள். வனஜா நீ கவலைப்படாதே நீ ஏழ்மையானாலும் என்னை, அப்பா என் வீட்டில் இருங்கள் நான் உங்களை காப்பாற்றுகிறேன் என்றாயே. அந்த வார்த்தையே நீ என்னை காப்பாற்றியது போல் ஆகிவிட்டது. உனக்கு கடவுள் எல்லா ஆசியும் அளிப்பார்.

உனக்காக ஒரு 20 ஆயிரம் காப்பீட்டு பத்திரம் பக்கத்து தோட்டக்காரரிடம் கொடுத்திருக்கிறேன். அதை நீ வாங்கிக்கோ என்று எழுதியிருந்தார். கடிதத்தை மூடிக்கொள்கிறாள் அமைதியாக இருக்கிறாள். ஊர் மத்தியில் இன்னொரு கடிதம் பிரிக்கப்பட்டு வாசிக்கப்படுகிறது. ஊர் மக்களுக்கு ஒரு செய்தி எனக்கு ஏற்பட்ட ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எந்த காரணத்தைக்கொண்டும் உயிரோடு இருக்கும்போது சொத்தை பிரித்துக்கொடுக்ககூடாது. எதுவாக இருந்தாலும் தங்களுடைய காலத்திற்கு பிறகு தான் கொடுக்கவேண்டும். ஆகையால் இந்த கமண்டலத்தில் உள்ளதை குமார் மற்றும் ரவிக்கு சமமாக பிரித்து கொடுக்கவும். அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி ஒரு வேளை உணவுகூட கொடுக்கவில்லை என்றாலும் கடைசிநேரத்தில் அவா;களுக்காக சம்பாதித்து கமண்டலத்தில் வைத்திருக்கிறேன். இருவருக்கும் கொடுக்கவும் என்று எழுதியிருந்தது. மருமகள்கள் மாறிமாறி பார்க்கிறார்கள். நாம் எவ்வளவு கொடுமைபடுத்தியும் நமக்காக அவருக்கு கிடைத்த லாட்டரி தொகையை நிதியாக மாற்றி கமண்டலத்தினுள் வைத்து இருக்கிறார் என்று சுத்தியல் கொண்டு வரப்படுகிறது. கமண்டலத்தின் வாய் பகுதி வெட்டி திறக்கப்படுகிறது. அதில் கங்கை தீர்த்தம் வைக்கப்பட்டுள்ளது. தலைவர் எடுத்து குமாருக்கும் ரவிக்கும் கொடுத்துவிட்டு ஊர் மக்கள் கலைந்து செல்கிறார்கள். இரண்டு மருமகளும் சேர்ந்து மாமனாரையும் கணவனையும் குடும்பத்தையும் திட்டிவிட்டு கோவத்தில் வீட்டில் இருந்து வெளியே போகிறார்கள். குமாரும், ரவியும் சிரிக்கிறார்கள். வனஜா கேட்கிறாள். என்ன தம்பி சிரிக்கிறாய் என்று, உடனே குமார் சொன்னான். அக்கா நாங்கள் அப்பா கேரளாவில் பிச்சை எடுக்கிறார் என்ற செய்தி கேட்ட அன்று எனக்கு இரவில் தூக்கமே இல்லை. அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நம்மை வளர்த்தார். நாம் இப்படி ஆயிட்டோமே என்ற வருத்தம் இரவில் தூக்கம் வரவில்லை. மறுநாள் காலையில் ரவிக்கு போன்செய்து நாம் அப்பாவை போய் பார்ப்போம் என்றேன்.

அவனும் சம்மதித்தான். இரண்டு பேரும் கேரளா சென்றோம். அங்கு அப்பா கோவிலில் உட்கார்ந்திருந்தார். இதை பார்த்ததும் இரண்டு பேரும் அப்பாவை கட்டிப்பிடித்து அழுதோம். எங்களுக்கு குடும்பத்தில் நிம்மதியாக இருக்கமுடியாது. அதனால் தான் மனைவி சொன்னதை கேட்டு உங்களை துரத்தி விட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள் அப்பா என்றார்கள். நீ அக்கா விட்டில் இருங்கள். நாங்கள் செலவிற்கு காசு தருகிறோம் என்றோம். அதனால் என்ன? பரவாயில்லை அப்பா. நீங்கள் மூவரும் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். நான் தீர்த்த யாத்திரை முடித்துவிட்டு வருகிறேன. எனக்கு எப்பொழுது காசு தேவைப்படுமோ அப்பொழுது நான் கேட்கிறேன் என்றார். அவர்கையில் ஒரு போன் கொடுத்துவிட்டு திரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து போன் வந்தது. நான் இந்த ஆஸ்ரமத்தில் இருக்கிறேன் என்றார்.

அதன்படி நாங்கள் அடிக்கடி போன் செய்து விசாரிப்போம். தேவையான காசு அனுப்பி கொடுப்போம். ஒரு நாள் உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. டிக்கெட் எடுத்து அனுப்பு என்றார். நாங்களும் அனுப்பி வைத்தோம். நாங்கள் சொன்னபடிதான் அப்பா இங்கு வந்து கமண்டலத்தையும் பையையும் கீழே வைக்காமல் இருந்தார். நாங்கள் உனக்கு காசு கொடுப்பதற்கு அப்பாவிற்கு பணம் கொடுப்போம். அதைத்தான் அப்பா உன்னிடம் வந்து கொடுப்பார். இப்பொழுது அப்பாவை கடைசிவரைக்கும் கவனித்த சந்தோஷம். வேறுயாருக்கோ கிடைத்த லாட்டரி பரிசுத்தொகையை அப்பாவிற்குதான் பரிசு கிடைத்தது என்று மனைவியை நம்ப வைத்தோம். அதனால் வீட்டில் நிம்மதி மட்டுமல்ல, காசுக்காக போட்டிபோட்டு கவனித்தார்கள் என்று கூறினார். குமார் ஏதோ நாம் மூவரும் சொன்னபடி அப்பாவை கடைசி வரைக்கும் கவனித்தோம். சந்தோஷம் என்று கூறி மூவரும் கிளம்பிவிட்டார்கள்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/feed/ 2
தர்மம் காத்த தனயன் https://vskdtn.org/2021/06/12/dharman-kaaththa-thanayan/ https://vskdtn.org/2021/06/12/dharman-kaaththa-thanayan/#comments Sat, 12 Jun 2021 13:09:14 +0000 https://vskdtn.org/?p=6485 ஆன்மீக குடும்பம், காலையில் சாமி கும்பிட்டுவிட்டு ராம்நாத் குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு போகிறார். சரியாக 10.35 மணிக்கு , தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் அருகிலுள்ள கனரா  பேங்கில் நுழைகிறார். மாற்றலாகி ஜாயின்ட்  செய்த முதல் நாளே ஐந்து நிமிடம் தாமதமாக வந்திருக்கிறாயே என்றார் மேனேஜர். சரியாக நாளையிலிருந்து வருகிறேன் என்றார் ராம்நாத். சரி என்றார் மேனேஜர். வேலையை சரியாகவும் வேகமாகவும் செய்கிறார் அதுமட்டும் அல்ல. சகஊழியர்க்கும் உதவி செய்கிறார்.

கணினியை கையாளுவதில் திறமைசாலி. ஒவ்வொரு நாளும் தாமதமாகத்தான் வருகிறார். மேனேஜர் ஒருமாதம் சொல்லி பார்த்தார் கேட்கவில்லை. 15 நிமடம் தாமதமாக வந்தால் அரைநாள் விடுமுறை. இப்படி மாதத்தில் 10 நாள் விடுமுறை ஆகிறது. பலநாள் சம்பளம் இல்லாத அரைநாள் விடுமுறை. பலநாட்கள் மதியம் சாப்பிடுவதில்லை. சக ஊழியர் ஏன் சார் உங்கள் மனைவி சமைத்து தரமாட்டாளா?. இல்லை அவள் அம்மாவீட்டிற்கு போகியிருக்கிறார். என்பார். மற்றும் பல நாட்கள் வெறும் சாதம் ஊறுகாய் மட்டும் தான் இருக்கும். அப்பொழுது சக ஊழியர் யாராவது கேட்கும் போதும் ஏதேதோ காரணம் சொல்வார்.

இப்படி 6 மாதம் மேல் ஆகிவிட, சகஊழியர் தேவகி அம்மா கேட்பார், உங்கள் வீட்டில் சார் யார் இருக்கிறார்கள் என்று. நான் மனைவி, அம்மா, குழந்தை. ஏன்சார் அம்மாவும் உங்களுக்கு உதவி செய்யமாட்டார்களா? அப்பொழுதும் ஏதேதோ காரணம் சொல்வார். தினசரி 5.30 மணிக்கு புறப்பட்டுவிடுவார். ஒரு நாள் 5 மணிக்கே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அன்றைய தினம் மாலையில் பேங்க் பூட்டுவதற்கு முன்னால் ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சார் ராம்நாத் சார் மட்டும் எவ்வளவு சொல்லியும் தாமதமாகத்தான் வருகிறார். ஏதோ காரணம் இருக்கும் என்றார்கள் தங்களுக்குள். ஒருமாதத்தில் மூன்றுநாள் தொடர்ந்து விடுமுறை கேரளா சுற்றுலா போவதற்கு திட்டமிடுகிறார்கள். ராம்நாத் சாரிடம் கேட்கிறார்கள். அவர் சார் என்னுடைய அம்மாவினுடைய 84 வது பிறந்தநாள். அதனால் வரமுடியாது சார் என்றார். சரி பரவாயில்லை என்று சொல்கிறார் மேனேஜர். சுற்றுலா முடிந்து. குற்றாலத்தில் குளித்து வருவதாக திட்டம்.

மூன்றாம் நாள் குற்றாலத்திற்கு வந்த உடன் தேவகி அம்மா மேனேஜர் சாரிடம்: சார் ராம்நாத் சார் வீடு இங்கு பக்கத்தில்தான் இருக்கும். நாம் அவர் வீட்டுக்கு போய்விட்டு போகலாம், என கூறிவிட்டு ராம்நாத்திற்கு போன் செய்து சார் எங்கே இருக்கிறீக என்று கேட்டார் மேனேஜர். சார் நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்றார். அப்படியானால் நாங்கள் வரும் வழியில், உங்கள் வீட்டிற்கு வந்து டீ குடித்து செல்கிறோம் என்றார். இதை ராம்நாத் எதிர்பார்க்கவில்லை. சார் நாங்கள் கோவிலுக்கு போயிருக்கிறோம். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றார்.
உடனே சரி இன்னொரு நாள் வருகிறோம் என்றார்.

தேவகி அம்மா, மேனேஜர் சார் இரண்டு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை. அவர் வீட்டிற்கு போய்தான் பார்ப்போம். இந்த இரண்டு மணி நேரத்தை அவர் வீட்டுபக்கம் ஏதாவது கோவில் இருக்கிறதா என்று கூகிள் சர்ச் (Google search) பண்ணுவோம் என்று கூறி தேவகி அம்மா செல்லில் பார்த்துவிட்டு, சார் அவருடைய வீட்டு முகவரி பக்கத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அங்கு போய்விட்டு அவருடைய வீட்டிற்கு போகலாம் என புறப்பட்டு அந்த தெருநோக்கி போகிறார்கள். அப்பொழுது கையில் பையுடன் தெருவில் ஒருவர் போய் கொண்டிருக்கிறார். வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. திரும்பி பார்த்தவுடன் ராம்நாத் சார் தான் கையில் பையுடன் சென்று கொண்டிருக்கிறார். அவரை பார்த்ததும் வண்டி நிற்கிறது. சார் என்று கூறி வண்டி டோர் திறக்கிறார். உடனே ராம்நாத் சார் இது தான் என் வீடு என்று காட்டுகிறார். உடனே எல்லோரும் இறங்கி வீட்டிற்குள் போகிறார்கள். வீடு அமைதியாக இருந்தது. குழந்தை எங்கே சார் என்றுன் கேட்கிறார். ஒருவித தயக்கத்துடன் அறையை காண்பிக்கிறார். நான்கு வயது குழந்தை, அறைக்குள் படுத்துக்கிடக்கிற ஒரு அம்மாவிற்கு வாயில் உணவு ஊட்டுகிறாள்.

இதற்கிடையில் மேனேஜர் சார் உங்க அம்மாவிற்கு 84 வயது என்றீர், ஆசிர்வாதம் வாங்குகிறேன் என்றார். உடனே இன்னொரு ரூம் காட்டுகிறார். அங்கேயும் ஒரு முதுமை பெண் படுத்துகிடக்கிறாள். அங்கே போகிறார்கள். அங்கே பார்க்கிற காட்சி எலும்பும் தோலுமாக முதுகில் புண்ணுடன். மேனேஜர் விசாரிக்கிறார். ராம்நாத் 4 வருடமாக அம்மாவிற்கு பக்கவாதம். இடது கை, கால் அசைக்கமுடியாது. படுத்த படுக்கையிலே தான் சிறுநீரும் மலமும் கழிக்கிறார். நான்தான் தற்பொழுது எல்லாம் கவனிக்கிறேன் என்றார். நேரம் ஆகிவிட்டது. புறப்படுகிறார்கள்.

மறுநாளும் வழக்கம் போல் தாமதமாக வருகிறார். இப்பொழுது யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. வந்த உடன் வேலைக்கு போகிறார். மனதில் நேற்று வீட்டில் யாரும் இல்லை என்று மேனேஜரிடம் கூறியது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. மதியம் வழக்கம் போல் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சக ஊழியர் தேவகி அம்மா, மனைவியை பற்றி விசாரிக்கிறார்கள். அன்பான மனைவி திருமண நாள் அன்றே அவர்களுடைய அம்மா இனி ராம்நாத் அம்மா தான் உனக்கு அம்மா மாமியார் என்று பார்க்க கூடாது. அந்த வீட்டில் எந்த கஷ்டம் இருந்தாலும் நீ அங்குதான் இருக்கணும் உன்னுடைய வீடு அதுதான் என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்கள்.

வழக்கம் போல் ஆரம்பத்தில் சிறுசிறு சண்டைகள் நடக்கும், அம்மா எப்பொழுதும் கண்டிப்பாக இருப்பாள். எந்த பொருளை எடுத்தாலும் திருப்பி அதே இடத்தில் வைக்கணும், சுத்தமாக இருக்கணும். இது தான் அம்மா எதிர்பார்ப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி ரொம்ப பாசமாகிவிட்டாள். அம்மா மாதிரி சரியாக இருப்பாள். சொந்த மகள் கூட இப்படி கவனிக்க மாட்டாள். அந்த மாதிரி நன்றாக கவனிப்பாள்.

ஆரம்பத்தில் என் அம்மாவின் சிறுநீர் மலம் மற்றும் துணிகள் சுத்தம் செய்வது அம்பாவை குளிப்பாட்டி உணவு ஊட்டுவது இதை எல்லாம் சந்தோஷமாக கவனித்து வந்தாள். எட்டுமாதத்திற்கு முன்பு சொந்தகாரர் வீட்டிற்கு போய்விட்டு வரும் போது பின்னால் வந்த கார் இடித்து இடுப்பு எலும்பு முறிந்து விட்டது, ஆஸ்பத்திரியில் காண்பித்தோம், டாக்டர் ஒருவருடம் ஆகும் சரியாவதற்கு. அசையாமல் படுத்து இருந்தால் போதும் தானாக எலும்பு சேர்ந்து விடும் என்றார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் என் அம்மா,மனைவி குழந்தையை குளிப்பாட்டி ஆடை மாற்றுவது சமைப்பது குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது எல்லாம் நான்தான்.

ஆரம்பத்தில் எனக்கு கஷ்டமாக தோன்றவில்லை. இரண்டு பேரையும் நன்றாக கவனித்து வந்தேன். திடீரென்று என்னை குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு மாற்றிவிட்டார்கள். அந்த நேரத்தில் தொழிற்சங்க தலைவர் செயலாளரிடம் போய் அழாத குறையாக சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை.

ஏதோ காசு வாங்கிகொண்டு என்னை தென்காசிக்கு மாற்றிவிட்டார்கள். இதனால் வீட்டையும் கவனித்து அலுவலகத்துக்கு வந்து போவதில் கொஞ்சம் சிரமம். சில நேரம் வீட்டு வேலையில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் அந்த பஸ்ஸை பிடிக்கமுடியாது. அடுத்த BUS-க்காக காத்திருந்து வரவேண்டியிருக்கிறது. அதனால் தான் இன்னும் தாமதமாக வருகிறேன். வேண்டுமென்று நான் தாமதமாக வரவில்லை. காலை 4.30 மணிக்கு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு 10 மணிவரைக்கும் தொடர்ந்து வேலை சார். இதெல்லாம் எப்படிதான் செய்கிறீர்கள் என்று கேட்க நான் கடவுளிடம் கடைசிவரைக்கும் உடல் நலமும் மனவலிமையும் தரவேண்டும் என்று வேண்டுவதாக சொல்லிக்கொண்டே பாத்திரம் கழுவ சென்றுவிட்டார். தேவகி அம்மா, நான் என் கணவரையே இப்படி கவனித்திருக்கமாட்டேன் என்று மேனேஜரிடம் கூறினார். உடனே மேனேஜர் என்னுடைய அம்மா அப்பா ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். இவ்வளவு வசதி இருந்தும் கவனிக்க ஆள் இல்லாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளேனே கூறி தேவகி அம்மாவிடம் என வருத்தப்பட்டார்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/06/12/dharman-kaaththa-thanayan/feed/ 4