புத்தக விமர்சனம் – VSKDTN News https://vskdtn.org Fri, 29 Apr 2022 06:33:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 இந்தியாவின் ஒரே பாம்பு கோயில்! https://vskdtn.org/2022/04/29/indias-only-snake-ka/ https://vskdtn.org/2022/04/29/indias-only-snake-ka/#respond Fri, 29 Apr 2022 06:29:50 +0000 https://vskdtn.org/?p=14521 இந்தியாவில் பாம்பையே ­மூலவராகக் கொண்ட ஒரே கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில் தான்.

நாக பிரதிஷ்டையும், சர்ப்பக்காவும் கேரளாவிற்கு உரிய சிறப்பம்சங்களாகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கேரளாவில் 15 ஆயிரம் சர்ப்பக்காவுகள் இருந்தன.

இன்று மன்னார் சாலை, வெட்டுக்காடு, பாம்பன் மேக்கோடு ஆகியவை பிரசித்தி பெற்ற சர்ப்பக்காவுகளாகும்.

மன்னார்சாலையில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து நாகபூஜை செய்யும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் திருவேற்காட்டில் எழுந்து அருளியுள்ள கருமாரியம்மன் கருநாகமாக தோன்றினார் என்று தலபுராண வரலாறு கூறுகிறது.

இங்கு கருமாரியம்மன் ஐந்து தலை நாகத்தின் குடை நிழலில் அமர்ந்து காட்சி தருகிறார்.

திருச்செங்கோடு மலைச் சரிவில் 60 அடி நீளத்தில் பாம்பு புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தை குலதெய்வமாக கொண்டு ஒடுப்பறை என்ற இடத்தில் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.

இப்படி நாக வழிபாட்டுக்காக பல கோயில்கள் இருந்தாலும் நாகர்கோவில் நாகராஜா கோயில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

இந்த கோயிலின் பெயரை கொண்டுதான் நாகர்கோவில் விளங்குகிறது.

மிக பழமையான இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பது பற்றி தகவல் இல்லை.

எனினும் ஒரு பழமையான கதை இந்த கோயில் பற்றிய தோற்றம் பற்றி கூறப்படுகிறது.

தலவரலாறு

கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் புல்லும், புதரும் நிறைந்த இடமாக இருந்தது.

இங்கு இளம்பெண் ஒருவர் புல் அறுத்து கொண்டிருந்த போது அவரது அரிவாள் ஐந்து தலை நாகத்தின் தலையில் பட்டு இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது.

இதை கண்டு அஞ்சிய பெண் கிராம வாசிகளை அழைத்து வந்தார். மக்கள் உடனே அங்கு கோயில் கட்டி வணங்கியதாகவும், பிற்காலத்தில் களக்காடு மன்னரின் தீராத தொழு நோய் இந்த கோயில் வழிபாட்டின் ­மூலம் குணம் அடைந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.

இந்த கோயிலின் உள்ளே செல்லும் போது உள்வாசலின் இருபுறமும் அமைந்திருக்கும் ஐந்து தலை நாகத்தின் படம் எடுக்கும் வடிவிலான சிலை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

இவை தர்னேந்திரன் என்ற நாகராஜன் என்றும், பத்மாவதி என்ற நாகராணி எனவும் நம்பப்படுகிறது.

இந்த கோயிலின் கருவறை இன்றும் ஓலை கூரையின் கீழ்தான் உள்ளது. இந்த கூரையில் ஒரு பாம்பு காவல் புரிவதாக நம்பப்படுகிறது.

இந்த ஓலைக்கூரை மாற்றி கட்டும் போது ஒரு பாம்பு வருவது வழக்கமாக உள்ளது. ­

மூலவர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாக இருக்கும். ­மூலவர் இங்கு தண்ணீரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றில் இருந்து எடுக்கப்படும் மண்தான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

இது ஆறு மாதகாலம் கறுப்பாகவும், ஆறு மாதகாலம் வெள்ளையாகவும் காட்சி தருகிறது. இங்கிருந்து மண் எடுக்க எடுக்க குறையாமல் இருப்பது அதிசயமாகும்.

திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பெண்கள் இங்கு நாகருக்கு பால் அபிஷேகம் நடத்துகின்றனர்.

பால் பாயாச வழிபாடு இங்குள்ள முக்கிய வழிபாடு ஆகும். பால், உப்பு, நல்ல மிளகு, மரப்பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் இங்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

ஓம் நமோ நாராயணாய :

]]>
https://vskdtn.org/2022/04/29/indias-only-snake-ka/feed/ 0
பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை – நூல் அறிமுகம் https://vskdtn.org/2022/04/29/virtue-temple-worship-pakistan-partition-of-india-introduction-to-the-book/ https://vskdtn.org/2022/04/29/virtue-temple-worship-pakistan-partition-of-india-introduction-to-the-book/#respond Fri, 29 Apr 2022 06:13:31 +0000 https://vskdtn.org/?p=14518 இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்துத் தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். மிகச் சிறந்த வழக்கறிஞர் என்பதால் இந்துக்கள் தரப்பு நியாயங்களாக டாக்டர் அம்பேத்கர் பட்டியலிட்டிருப்பதைப் படிக்கும்போது பாகிஸ்தான் என்ற தேசம் பிரிக்கப்படக் கூடாது என்று தோன்றும்; பாகிஸ்தான் தரப்பு ‘நியாயங்களாக’ அவர் சொல்லியிருப்பவற்றைப் பார்க்கும்போது பிரிப்பதுதான் சரி என்று தோன்றும்.

சந்திர குப்த மௌரியர் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதிகள் இந்தியாவின் அங்கமாகத்தான் இருந்திருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்தபோதும் இந்தப் பகுதிகள் இந்தியாவின் அங்கமாகவே இருந்திருக்கின்றன என்றெல்லாம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

கி.பி. 711-ல் முஹம்மது பின் காசிம் தொடங்கி 1761-ல் அஹமத் ஷா அப்தாலி வரை படையெடுத்து வந்து அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் படையெடுப்பு நடந்த காலத்தில் நடந்த வன்முறைகளை மிகுந்த வேதனையுடன் விரிவாகப் பட்டியலிட்டுவிட்டு பாகிஸ்தானாக உருவாகப் போகும் அந்த வட இந்தியப் பகுதியானது முழுக்க முழுக்க இஸ்லாமியமயமாகிவிட்டது. பிரிவினை நடக்கவேண்டுமென்ற அவசியமே இல்லை. அது பிரிந்துதான் இருக்கிறது என்று அவர் சொல்லும்போது யார்தான் மறுத்துச் சொல்ல முடியும்?

அதைவிட அடுத்ததாக அவர் கேட்கும் கேள்வி மிகவும் முக்கியமானது. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு வலிமையான, விசுவாசமான ராணுவம் அவசியம். பாகிஸ்தான் என்று தனி நாடு பிரித்துக் கொடுக்காவிட்டால், ஆஃப்கானில் இருந்து இஸ்லாமியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தால், இந்திய ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் வீரர்கள் இந்தியாவுக்காகப் போரிடுவார்களா… இஸ்லாமியப் படைகளுடன் கை கோர்ப்பார்களா?

தனி நாடு கேட்டும் தராமல் வலுக்கட்டாயமாக அவர்களைப் பிடித்து வைத்தால் ஆட்சி நிர்வாகம் நல்லபடியாக நடக்குமா என்று கேள்வி எழுப்பிவிட்டு, அவர்கள் பக்கம் எந்த நியாயமும் இல்லாவிட்டாலும் தனி நாடு கேட்டால் கொடுத்துவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு வருகிறார்.

ஹிந்துக்கள் தரப்பு நியாயமாக அவர் என்ன சொல்கிறாரென்றால், ஹிந்து ராஜ்ஜியத்தில் வாழ முடியாது என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எண்ணமா? வெறும் அரசியல் தரப்பின் எதிர்ப்புதானா? ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அப்படி நினைக்கிறார்கள் என்று சொன்னால் அது ஒரு விசித்திரமான மனோபாவம் என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள், சுதந்தரமான ஹிந்து அரசர்களின் சமஸ்தானங்களில் ஹிந்து ராஜ்ஜியத்தில்தான் வாழ்ந்து வருகிறார்கள். முஸ்லிம்களோ முஸ்லிம் லீகோ அது தொடர்பாக எந்த எதிர்ப்பையும் இதுவரை எழுப்பியதில்லையே என்று கேள்வி எழுப்புகிறார்.

இன்று அம்பேத்கரின் ஜனநாயக, சமத்துவ அரசியல் சாசனத்தின் மூலம் இடைநிலை, கடைநிலை ஜாதிகளின் செல்வாக்கே இந்திய அரசியல் புலத்தில் வலிமையுடன் திகழ்கிறதென்பது வேறு விஷயம். ஆனால் அன்று அப்படி இல்லை.

தீண்டப்படாதவர்களுக்கு எந்தவொரு அரசியல் சலுகையையும் தருவதற்கு எதிர்ப்புக் காட்டும் திரு. காந்தி, இஸ்லாமியர்களுக்கு மட்டும் வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்துப்போட்டுக் கொடுக்கத் தயாராகத்தானே இருக்கிறார்? சூத்திரர்கள், தீண்டப்படாதவர்களுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதைவிட இஸ்லாமியர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவே அவர்கள் இருக்கிறார்கள். எனவே, ஹிந்து சமூகத்தின் ஜனநாயகத் தன்மை பற்றிப் புகார் சொல்லும் தார்மிக உரிமை முஸ்லிம்களுக்கு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது என்று சொல்லி, தனி நாடு கோரிக்கை அவசியமே இல்லை என்கிறார்.

சிறுபான்மை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கு கனடாவிலும் சிறுபான்மை ஆங்கிலேயர்களுக்கு தென் ஆஃப்ரிக்காவிலும் சிறுபான்மை ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் இத்தாலியர்களுக்கும் ஸ்விட்சர்லாந்திலும் கிடைத்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைவிடக் கூடுதலாக பிரிட்டிஷ் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உரிமைகளும் அதிகாரங்களும் தரப்பட்டிருக்கின்றன என்பதுதானே உண்மை? சிறுபான்மை என்பதால் ஒடுக்கப்படுகிறார்கள் என்று முஸ்லிம்கள் சொல்வதில் எந்த நியாயமும் இல்லையே என்று இன்னொரு இடத்தில் கேட்கிறார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் ஹிந்து ராஜ் வர வாய்ப்பே இல்லை என்பதால், பாகிஸ்தான் என்ற தேசம் அவர்களுக்கு அவசியமே இல்லை. அவர்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களில் நிலைமை மேலும் மோசம். ஏனென்றால் பாகிஸ்தான் உருவானாலும் உருவாகாவிட்டாலும் அவர்கள் ஹிந்து ராஜின் கீழ்தான் இருந்தாகவேண்டியிருக்கும். முஸ்லிம் லீகின் இந்த அரசியலைப் போல் தேவையற்ற ஒன்று இந்த உலகில் வேறு ஏதேனும் இருக்கமுடியுமா என்று கேட்கும் கேள்விக்கு ஜின்னாவிடம் என்ன பதில் இருந்திருக்கும்?

பிரிவினை தொடர்பான விவாதங்களில் இந்தப் புத்தகத்தை காந்தியும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். ஜின்னாவும் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். இதிலிருந்தே இந்த நூல் எந்த அளவுக்கு ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் என்பது, முற்றிலும் வேறொன்றில் இருக்கிறது. இந்துத் தரப்பு வாதங்கள், இஸ்லாமியத் தரப்பு வாதங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிவிட்டு, கடைசியில் பிரிவினைதான் ஒரே வழி என்ற முடிவையும் முன்வைப்பவர், அந்தப் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பவைதான் மிகவும் முக்கியமானவை.

அது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் முன்வைத்திருக்கும் யோசனைகள் எல்லாம் ஒரு மாமேதை, ஒரு தீர்க்கதரிசி சொன்ன ஆலோசனைகளாக இருக்கின்றன. சற்று உணர்ச்சி மேலிடச் சொல்வதென்றால், மாபெரும் ரிஷி கண்டு சொன்ன வேத வாக்கியங்கள் போல் இருக்கின்றன.

உலகின் ஏதாவது ஒரு சரித்திர நிகழ்வை மாற்றியமைக்க இறைவன் வாய்ப்புக் கொடுத்தால், இந்தியப் பிரிவினையை டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருக்கும் வழியில் செய்துகாட்ட வேண்டும் என்றே ஒட்டுமொத்த உலகமும் ஒரே குரலில் சொல்லும்.

மிகவும் அடிப்படையான விஷயங்களைத்தான் அவர் பேசியிருக்கிறார். அன்று அதைக்கூட யாரும் பேசவில்லை என்பதுதான் நம் மாபெரும் துரதிஷ்டம்.

ஏதோ முஸ்லிம் லீக் தனி நாடு வேண்டும் என்று கேட்பதால் எடுத்துக் கொடுத்துவிடக் கூடாது. அந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவர்கள் இந்துஸ்தானிலேயே இருக்க விரும்பினால் பிரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்கிறார்.

ஜின்னாவோ மக்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கப் பயந்து, பிரிட்டிஷாரே பிரித்துக் கொடுத்து விடட்டும் என்று சொல்கிறார். அதுவே நடக்கவும் செய்தது.

”கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற ஒன்றை உருவாக்கவேண்டும். பாகிஸ்தான், இந்துஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் ஒத்திசைவான அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பத்து ஆண்டுகள் பொதுவான அரசாங்கம் ஒன்றின் கீழ் இருந்து, ஹிந்துக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டு அதன் பின் முஸ்லிம்கள் முடிவெடுக்கலாம்…

சிறுபான்மையினர் தங்களை நம்பலாம் என்ற உத்தரவாதத்தைத் தர ஹிந்துக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஹிந்து ராஜ்ஜியம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான முஸ்லிம்களின் பயங்களெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கும் அந்தக் கால அவகாசம் உதவும்….

இதில் இன்னொரு சாத்தியக்கூறும் இருக்கிறது. பாகிஸ்தான் என்றொரு தனி நாட்டைக் கேட்டு வாங்கிச் சென்ற பின்னர் சில காலம் கழித்து பாகிஸ்தான் அரசின் மூலம் அதிருப்தியுற்று மீண்டும் ஹிந்துஸ்தானுடன் சேர்ந்து ஒரே அரசியல் சாசனத்தின் கீழ் இணைந்து வாழ விரும்பவும் கூடும்….

பாகிஸ்தான் என்ற தனி நாடு எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை முஸ்லிம்கள் பெற வேண்டும்; அதன் பின்னர் இந்தியாவுடன் இணைந்தால் அந்த இணைப்பு மிகவும் வலிமையானதாக, நீடித்து இருப்பதாக இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.

பாகிஸ்தான் என்ற நாடு பிரிக்கப்படும்போது அந்தப் பிரிவினையானது முழுமையானதாக, முற்றிலும் துண்டாடியதாக இருக்கக் கூடாது. பாகிஸ்தானுக்கும் ஹிந்துஸ்தானுக்கும் இடையில் தொடர்புகள் நீடிக்க வேண்டும். பின்னர் சேர்ந்துகொள்ள முடியாமல் போகும்படியான தடைகள், பிளவுகள் எதுவும் இருக்கக் கூடாது. அதனால்தான் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற ஒன்றை முதல் கட்டச் சட்டத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது ஒரு வாய்ப்பு பாகிஸ்தானிய மக்களுக்குத் தந்தால் ராணுவ ஆட்சியை அனுபவிக்கும் அந்த மக்கள் நிச்சயம் இந்துஸ்தானுடன் மீண்டும் வந்து சேருகிறேன் என்றுகூடச் சொல்லக் கூடும்.

பொது அரசாங்கமெல்லாம் வேண்டாம். உடனே இரண்டாகப் பிரிப்பதென்று முடிவு செய்துவிட்டால், முஸ்லிம் பகுதிக்கு பாகிஸ்தான் (மேற்கு பாகிஸ்தான் – கிழக்கு பாகிஸ்தான்] என்று பெயர் சூட்ட வேண்டும். இந்து பகுதிக்கு ஹிந்துஸ்தான் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஹிந்துஸ்தானில் இருந்து 20 பேர்; உருவாகவிருக்கும் பாகிஸ்தானில் இருந்து 20 கொண்ட குழு அமைக்கப்பட்டு எல்லை வரையறை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், பிரிட்டிஷாரோ வரைபடத்தில் ரத்தத்தால் ஒரு கோட்டை வரைந்து அந்தப் பக்கம் பாகிஸ்தான்; இந்தப் பக்கம் இந்தியா என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

இரு நாட்டு மக்களின் இடப்பெயர்ச்சிக்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் தர வேண்டும். இடம்பெயரும் மக்களுடைய சொத்துக் கணக்கு, சம்பளக் கணக்கு, இடம்பெயர பேருந்து வசதி, காவல் பாதுகாப்பு என அனைத்தையும் செய்து தர வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். (இவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.)

ஐரோப்பியப் போர்களுக்குப் பிறகு கிரேக்கம் பல்கேரியா, துருக்கி கிரேக்கம் நாடுகளுக்கு இடையிலான மக்கள் பரிமாற்றமானது முழு வெற்றி பெற்றிருக்கிறது. உலகின் வேறொரு நாட்டில் கிடைத்த வெற்றி இந்தியாவிலும் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று ஆதாரபூர்வமாக, அப்பாவியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பிரிட்டிஷ் அயோக்கியர்களின் கணக்கோ வேறொன்றாக இருந்திருக்கிறது. ‘எங்களை வெளியேறு என்று சொன்னீர்களல்லவா, சாகுங்கள்’ என்று சபித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பாகிஸ்தானென்ற தனி நாட்டைப் பெறுவதைவிட அதைப் பெறும் வழிமுறைக்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டும். பிரிவினைக்குப் பின்னரும் பாகிஸ்தானும் ஹிந்துஸ்தானும் நட்புறவுடன் நல்லுறவைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் அதில்தான் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று மன்றாடியிருக்கிறார் மகாத்மா அம்பேத்கர்.

”ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது பெற்ற வெற்றியாகவும் இன்னொருவருக்கு அவமானகரமானதாகவும் அது இருக்கக் கூடாது. இரு தரப்பினருக்கும் மரியாதை தருவதாகவும் நல்லுறவுடனும் அது நடந்தேற வேண்டும். மக்களின் பொது வாக்கெடுப்பு அல்லாமல் இந்த நல்ல முடிவு கிடைக்க வேறு எந்த வழியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை….

எது மிகச் சிறந்த வழிமுறை என்று நான் என் ஆலோசனையை மிகத் தெளிவாகவே முன்வைத்திருக்கிறேன். பிறர் அவர்களுடைய ஆலோசனைகளை முன்வைக்கலாம். எனது ஆலோசனைதான் மிகவும் சிறந்தது என்று நான் சொல்லவில்லை. எந்தத் தீர்மானமாக இருந்தாலும் நல்லெண்ணம் மற்றும் பொறுப்புணர்வு கொண்டதாக இல்லையென்றால் ஆறாத காயத்தையே ஏற்படுத்தும்” என்று மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன், மிகுந்த நம்பிக்கையுடன், ஒரு வரம் போல் நமக்கு வழி காட்டியிருக்கிறார்.

ஆனால், நல்லோர்களின் வரம் நமக்குக் கிடைத்திருக்கவில்லை. அயோக்கியர்களின் சாபமே நமக்குக் கிடைத்தது. நாம் செய்த தவம் அப்படி.

நடந்து முடிந்த ஒரு பேரழிவை எப்படித் தடுத்திருக்கலாம் என்பதைச் சொல்லும் புத்தகம் மட்டுமேயல்ல. இனி அப்படி ஒன்று நடக்காமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறது. இந்த விஷயத்தில் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றைத் தாண்டி நாம் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை.

படித்துப் பார்த்தே புரிந்துகொண்டு விடுவோம்.

         –பி.ஆர்.மகாதேவன்

]]>
https://vskdtn.org/2022/04/29/virtue-temple-worship-pakistan-partition-of-india-introduction-to-the-book/feed/ 0
சைவதூஷன பரிகாரம் – புத்தக விமர்சனம். https://vskdtn.org/2021/07/17/savathoosana-parikaaram/ https://vskdtn.org/2021/07/17/savathoosana-parikaaram/#respond Sat, 17 Jul 2021 13:14:10 +0000 https://vskdtn.org/?p=7693 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் புண்ணிய பூமியாம் பரத கண்டத்தின் தென்னகத்தே உள்ள ஈழத்து மண்ணில் யாழ்ப்பாணம் நல்லூரில் பொது சகாப்தம் 1822ம் ஆண்டு முதல் 1879ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.

இளமையிலேயே சைவ சித்தாந்த நூல்கள் அனைத்தையும் கற்றுணர்ந்தவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். ஆலயங்களில் வாரந்தோறும் பிரச்சாரம் செய்யும் முறையை ஏற்படுத்தியவர். “வித்தியாநுபாலன யந்திர சாலை” எனும் அச்சகத்தை நிறுவி மிகத் தேர்ந்த அச்சுப்பணி மூலம் தாம் எழுதிய மற்றும் மறுபதிப்பாக எழுபத்தி நான்கு நூல்களையும் அச்சிட்டவர். கிறிஸ்தவரின் மதமாற்றத்தைத் தடுக்க “சைவ வித்யா பிரகாச சாலை” என்னும் தமிழ் பாடசாலையை ஆரம்பித்ததுடன், சுதேச தர்மத்தைக் காக்கும் அரணாய் பல கல்வி சாலைகள் அமைய வழிகோலியவர். தனது பிரசுரங்களின் மூலம் சமய எழுச்சிக்கு வித்திட்டவர். மதமாற்றத்தைத் தடுக்க அரும்பணி செய்தவர். மதம் மாறியவர்களை மீண்டும் தாய்மதம் திருப்பியவர். ஈழத்தில் பன்னிரு திருமுறைகளின் பக்தி ஒலி இன்றும் ஒலிக்கக் காரணமானவர். சுவடே இல்லாமல் கிறிஸ்தவர்கள் அழித்த திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற பாடல்பெற்ற சிவாலயங்களை மீண்டும் எழுப்பியவர். இப்படி இம்மகானின் பல்துறை பேராற்றல் நிறைந்த பணிகளை நினைத்துப் பார்க்கும்பொழுது இவர் ஓர் அவதாரம் என்றும் ஐந்தாம் குரவர் என்றும் ஈழத்து இந்து சமயிகள் போற்றியது பொறுத்தமானதே.

“சைவதூஷண பரிகாரம்” என்னும் இந்நூல் தமிழ், சமஸ்கிருதம், சமய விசாரங்கள், சமயநெறிகள் ஆகியவற்றில் நாவலரின் ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகின்றது. கிறிஸ்தவ சமயத்தின் துர்பிரச் சாரங்களை மறுதலித்து, செழுமை வாய்ந்த தனது தர்க்கத்தினாலே வசவநெறியின் மாண்பினை நிலைநாட்டிட நாவலர் அருளிய அரும்பெரும் பொக்கிஷம் இந்நூல்.

1854ம் ஆண்டு நாவலரால் இயற்றப்பட்ட இந்நூலின் பிரதிகள் கமபோது இல்லை என்பது மாற்று மதத்தவரின் சதியோ என எண்ணத் தோன்றுகிறது.

நாவலரின் புகழை உலகமெங்கும் பரப்பி வருவதோடு இந் காலை வெளியிட ஊக்கமளித்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வ

தேச செயலாளர் சுவாமி விக்யானானந்தா அவர்களுக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பழந்தமிழ் பண்பாட்டில் உறைந்துள்ள சமய மேன்மையை நன்கு ஆழ்ந்து கற்றவர். நவீனம் கலந்த மரபுசார் நெறிகளைக் காக்கும் ஊடகவியலாளராக கிறிஸ்தவத் தின் போலி முகத்திரையை கிழித்தெறியும் தனது படைப்புகள் மூலம் நாவலரின் பணியைத் தொடரும் இவருடைய பொருத்தமான முன்னுரை இந்நூலுக்கு அணியாய்த் திகழ்கிறது. அன்னாருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

சிதம்பரத்திலே நடராஜ பெருமானது திருவருளோடு நாவலரின் வெளியீடுகளை பாதுகாத்து பிரச்சாரம் செய்துவரும் “நாவலர் அறக் கட்டளைக்கும்”, நல் ஆலோசனைகளை வழங்கிய அதன் தலைவர் திரு சா.அருள்மொழிச்செல்வன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

இந்நூலை சிறந்த முறையில் சிரத்தையோடு கணினி தட்டச்சு’ செய்த திருமதி கௌரி ரமேஷ் அவர்களுக்கும், இந்நூலினைப் பிழை திருத்தம் செய்துதவிய திரு. எஸ்.பரமசிவம், திரு சௌ.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், நூலுக்கு மெருகூட்டும் வகையில் அட்டைப் படத்தை வடிவமைத்த திரு ரா.ராஜேஷ்வர பிரதீப் அவர்களுக்கும்! எம் நன்றிகள்.

இதனை சிறந்த முறையில் அச்சிட்டுத்தந்த மாதவமுத்ரா அச்சகத் திற்கும் நன்றிகள்.

இந்நூலிற்கு அனைத்து விதமான நல் ஆலோசனைகளை வழங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் திரு நா.சடகோபன் அவர்களுக்கு மன மார்ந்த நன்றிகள்.

2022 நாவலரின் இருநூறாவது ஆண்டுவிழாவினை நெருங்கும்! இத்தருணத்தில் சமய, சமூக ஆர்வலர்களின் விருப்பத்தையேற்றே இதனை வெளியிடுகின்றோம். ஈழத்து இந்துக்கள் மட்டுமல்லாது தமிழகம் மற்றும் உலகமெங்கும் வாழும் தமிழ்கூறும் நல்லுலகம் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கெதிரான நாவலரின் நற்பணியினை அவரின் ஆன்மீக வழித்தோன்றல்களாய் முன்னெடுத்துச் செல்ல இந்நூல் சிறந்ததோர் வழிகாட்டியாய் அமையும் என்பது திண்ணம். – “வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க”

போற்றி ஓம் நமசிவாய! –

நாவலர் இந்து பண்பாட்டுப் பேரவை, சென்னை

நூல் கிடைக்கும் இடங்கள்;
சென்னை -63813 27516
திருச்சி – 0431 2761333
திருப்பூர் – 0421 2214222
சிதம்பரம் – 94863 88797
கோவை – 0422 2232422
திருவாரூர் – 93604 74555

]]>
https://vskdtn.org/2021/07/17/savathoosana-parikaaram/feed/ 0
நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் – புத்தக விமர்சனம் https://vskdtn.org/2021/07/15/mapla-kalavaram-book-review/ https://vskdtn.org/2021/07/15/mapla-kalavaram-book-review/#comments Thu, 15 Jul 2021 07:41:29 +0000 https://vskdtn.org/?p=7619 இன்றைய நிகழ்வு நாளைய சரித்திரம், நேற்றைய சரித்திரம் நாளைய பாடம். எனவே சரித்திரம் திரிக்கப்படாமல் உண்மையாகச் சொல்லப்படவேண்டும். 1921 ஆகஸ்டு 21 ம்தேதி துவங்கிய மாப்ளா கலவரம் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி என்று காங்கிரசும் நிலச்சுவான்தாரர்களை எதிர்த்து கூலித்தொழிலாளர்கள் நடத்திய கிளர்ச்சி என்று கம்யூனிஸ்டுகளும் அவரவர் கண்ணோட்டத்தில் கூறிவந்த நிலையில் மாப்ளா கலவரத்தின் சரியானப் பின்னணியை அலசி ஆராய்ந்து திரு. ஸ்தாணுமாலயன்ஜி ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். பாராட்டுக்கள்.

தெய்வத்தின் சொந்த நாடான கேரளாவில் அப்பாவி இந்து பெரும்பான்மையினருக்கு எதிராக இஸ்லாமிய சிறுபான்மையினர் கட்டவிழ்த்துவிட்டதுதான் மாப்ளா கலவரம் என்பதை சரித்திர ஆதாரங்களோடு ஆசிரியர் நிரூபித்துள்ளார். மாப்ளா கலவரத்தின் மீது கிலாபத் இயக்கம் ஏற்படுத்திய தாக்கமும் பொருத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதமாற்ற முயற்சியின்போது இந்து கோயில் இடிப்பு, பசுவதை, கற்பழிப்பு, சொத்துக்கள் சூறையாடல் ஆகிய நிகழ்வுகளால் ஹிந்துக்கள் அனுபவித்த சொல்லவொண்ணாத் துயரங்களை உருக்கமாக விவரித்த நூலாசிரியர் கலவர சமயத்தில் சொத்துக்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து தவித்த ஹிந்துக்களுக்கு பாரதத்தின் பல பகுதியிலிருந்து ஈரநெஞ்சோடு மக்கள் அளித்த உதவிகளையும் அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரத்தின்போது கேரள மக்களின் மனதில் ஏற்பட்ட ரணங்களையும், உண்மை செய்திகளையும் தமிழக மக்கள் உணரவேண்டும் என்பதே ஆசிரியரின் உண்மையான நோக்கம். கலவரம் ஓய்ந்தபின் மதம் மாற்றப்பட்டவர்களை தாய்மதம் திருப்பும் ஆரிய சமாஜத்தின் முயற்சிகளும் பாராட்டப்பட்டுள்ளன. ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி, அனைவருள்ளும் ஒரே இறைவன் குடிகொண்டுள்ளான் என்கிற இந்து தர்மத்தின் விசாலமானப் பார்வையை புத்தகத்தின் நிறைவு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது நல்ல முடிவுரையாகும். சிரிய விஷயங்களை எளிய நடையில் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் திரு. ஸ்தாணுமாலயன்ஜி அவர்களின் எழுத்துத்திறன் அமைந்துள்ளதை போற்றுகிறேன். சங்கரன் நாயர் எழுதிய Gandhi and Anarky. ராம்கோபால் எழுதிய Indian Muslims, லி.பி. குல்கர்னி எழுதிய India & Pakisthan, Dr. Ambedkar எழுதிய Partition and Pakisthan மேலும் Bloodiest Episode in Histroy ஆகியப் புத்தகங்கள் இவருக்கு சரியான செய்திகளை வழங்கியுள்ளன.

மதம், ஜாதி, மொழி ஆகிய வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஒற்றுமையாக வாழ்ந்து தேச நலனில் நாட்டம் கொள்வோம் என்ற உணர்வை இப்புத்தகம் வாயிலாக உணர்வோமாக!

டாக்டர் கே. குமாரசாமி,
மாநிலத் தலைவர்
ஆர்.எஸ்.எஸ். வட தமிழ்நாடு

]]>
https://vskdtn.org/2021/07/15/mapla-kalavaram-book-review/feed/ 1