கோயம்புத்தூர் – VSKDTN News https://vskdtn.org Wed, 16 Feb 2022 10:27:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கோவையில் பணியாற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சம் :15 நாட்களில் 4 தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம் https://vskdtn.org/2022/02/16/coimbatore-ias-officer/ https://vskdtn.org/2022/02/16/coimbatore-ias-officer/#respond Wed, 16 Feb 2022 10:27:19 +0000 https://vskdtn.org/?p=11960 கோவை மாநகராட்சி தேர்தலில், அரசியல் ரீதியான மோதலும், அதன் தொடர்ச்சியாக பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களில் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒரு புறம் ஆளும்கட்சி, மற்றொரு புறத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் என, இரண்டு தரப்பினருக்கும் இடையில் அதிகாரிகள் சிக்கி, விழிபிதுங்கி நிற்கின்றனர். யாருக்கு சாதகமாக நடந்தாலும் பிரச்னை என்பதால், செய்வதறியாது தவிக்கின்றனர். இங்கு தேர்தல் பார்வையாளராக பணிக்கு வருவதற்கே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், 15 நாட்களுக்குள் நான்கு தேர்தல் பார்வையாளர்கள் கோவையில் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், கோவையில் அரசியல் கட்சியினரிடையே மோதலும், பதற்றமும் அதிகரித்து வருகிறது. அதனால் புதிய பார்வையாளரும் தேர்தல் முடியும் வரை தாக்குப்பிடிப்பாரா என்பது கேள்வியாக உள்ளது.

]]>
https://vskdtn.org/2022/02/16/coimbatore-ias-officer/feed/ 0
ரத்ததான சேவை https://vskdtn.org/2021/11/23/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88/ https://vskdtn.org/2021/11/23/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88/#respond Tue, 23 Nov 2021 05:46:53 +0000 https://vskdtn.org/?p=9349 சேவாபாரதி கோவை மஹாநகர் சார்பில் கே.ஜி மருத்துவமனைக்கு மேமாதம் 2020 முதல் அக்டோபர் 2021வரை 775 யூனிட் ரத்தம் தலசீமியா குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பாராட்டி அந்த மருத்துவமனை சான்றிதழ் வழங்கியது.

]]>
https://vskdtn.org/2021/11/23/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88/feed/ 0
ஸ்ரீ நாரதர் விருது கோவை https://vskdtn.org/2021/10/22/sri-naradhar-award/ https://vskdtn.org/2021/10/22/sri-naradhar-award/#respond Fri, 22 Oct 2021 13:16:37 +0000 https://vskdtn.org/?p=9031 விஸ்வ ஸம்வாத் கேந்திரம், தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றன.

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் முன்னாள் முதன்மை எழுத்தாளரான திருமதி ராதா வெங்கடேசன் அவர்களுக்கும்,ஹிந்து தமிழ் திசை நாளிதழின் பொது மேலாளர் ஸ்ரீ ராஜ்குமார் அவர்களுக்கும், சமுதாய சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஸ்ரீ ஜோதி கணேசன் ஆகியோர்களுக்கும் ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் . கோயமுத்தூர் தினமலர் நாளிதழின் முதன்மை ஆசிரியர் ஸ்ரீ K.விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ ஸ்ரீராம் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் ஒலி வடிவ புத்தகம் வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில்
கோவை மாநகர ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ ராஜா ஜி,
தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/10/22/sri-naradhar-award/feed/ 0
குடிசை வாரிய வீடு தி.மு.க தகராறு https://vskdtn.org/2021/09/20/kudisai-vaariya-veedu/ https://vskdtn.org/2021/09/20/kudisai-vaariya-veedu/#respond Mon, 20 Sep 2021 05:32:42 +0000 https://vskdtn.org/?p=8638

கோவை மாவட்டம் கிட்டசூராம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 35 கோடி ரூபாய் மதிப்பில் 512 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வீடுகளை ஒதுக்கித்தர கோரி தி.மு.க ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் மாணிக்கராஜ், தி.மு.க நகர தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் விவேக் ஆகியோர் விண்ணப்பங்களுடன் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்றனர். யாருக்கு வீடுகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள், காவலர்கள் தலையிட்டு தி.மு.கவினரை சமாதானப்படுத்தினர். இந்த செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டல் விடுத்தனர்.

Source by; Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/20/kudisai-vaariya-veedu/feed/ 0
விநாயகர் சதுர்த்தியை தடுக்க கிறிஸ்தவர்கள் சதி https://vskdtn.org/2021/09/01/vinyakar-sathurthiyai-thadukka-kirusthuvarkal-sathi/ https://vskdtn.org/2021/09/01/vinyakar-sathurthiyai-thadukka-kirusthuvarkal-sathi/#respond Wed, 01 Sep 2021 07:13:21 +0000 https://vskdtn.org/?p=8258 கோவையை சேர்ந்த செயிண்ட் பால் கல்லூரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் சார்பாக அதன் தலைவர் டேவிட் கடந்த 16-08-2021ல் கோவை வாழ் கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று, கிறிஸ்தவர்கள் அவரவர் பகுதியில் வாகனங்களில் சென்று ஜெபம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2017ல் 200 வாகனங்களில் 100 வார்டுகளில் சென்று ‘கோவையில் விக்கிரக ஆராதனை இருக்ககூடாது’ என அவர்கள் ஜெபித்தனர்.

அதன் விளைவாக, கலெக்டர் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்ககூடாது, சிலையின் உயரம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வருடமும் இதனை சிறப்பாக நடத்த வேண்டும் என கிறிஸ்தவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஹிந்து விழாக்களை தடுக்கும் விதத்திலும் அவர்களது மனதை புண்படுத்தும் விதத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அக்கல்லூரியின் தலைவர் டேவிட்டை கைது செய்வதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு கோவைப் பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

Source By; Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/01/vinyakar-sathurthiyai-thadukka-kirusthuvarkal-sathi/feed/ 0
கோவை ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் முன்பு வெற்றி வேல் வீரவேல் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு கண்டனம். https://vskdtn.org/2021/07/17/covai-ranuva-pirivu/ https://vskdtn.org/2021/07/17/covai-ranuva-pirivu/#respond Sat, 17 Jul 2021 11:49:16 +0000 https://vskdtn.org/?p=7687 ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் முன்பு வெற்றி வேல் வீரவேல் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரி தொண்டு நிறுவனத்துக்கு தொடர்ந்து வலுக்கிறது கண்டனம்.


இடதுசாரி தன்னார்வ தொண்டு நிறுவனமான National Confederation of Human Rights Organizations (என்.சி.ஹெச்.ஆர்.ஓ), சமீபத்தில், பாரத ராணுவம், கோவை, மதுக்கரையில் உள்ள தனது படைப்பிரிவு தலைமையகத்தின் வாசலில், தமிழர்களின் வீரமான போர் முழக்கமான ‘வெற்றி வேல் வீர வேல்’ என எழுதியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அலுவலர், “இந்த முழக்கம் பல ஆண்டுகளாக மதுக்கரை ராணுவப் படைப்பிரிவில் உள்ளது. ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பிரிவிலும் இதுபோன்ற தனித்துவமான போர் முழக்கங்கள் உள்ளன. ‘வெற்றி வேல், வீர வேல்’ என்பது மதுக்கரை ரெஜிமென்ட்டால் பயன்படுத்தப்படுகிறது. இதில் வேறு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/07/17/covai-ranuva-pirivu/feed/ 0
கோயம்புத்தூரில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலங்களை சில நபர்கள் ஆக்கிரமித்ததை மீட்டது இந்து அறநிலையத்துறை. https://vskdtn.org/2021/07/08/coimputhur-bhala-thanapani-suvami/ https://vskdtn.org/2021/07/08/coimputhur-bhala-thanapani-suvami/#respond Thu, 08 Jul 2021 09:23:00 +0000 https://vskdtn.org/?p=7451 கோயம்புத்தூரில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலங்களை சில நபர்கள் ஆக்கிரமித்ததை மீட்டது இந்து அறநிலையத்துறை.


கோயம்புத்தூர் சுக்ரவார்பேட்டை சாலையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 909 சதுர அடி பரப்பளவை ஆக்கிரமித்து உணவகம் ஒன்று கட்டப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது. கோயில் நிலங்களை அரசு மீட்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இக்கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு உறுதியானது.

அதனால், இடத்தை உடனடியாக காலி செய்ய இந்து அறநிலையத் துறையினர் உணவகத்தை அறிவுறுத்தி 30 நாள் கால அவகாசம் கொடுத்தனர். எனினும் அவர்கள் அந்த இடத்தை காலி செய்யாததால், உணவகக் கட்டிடத்தை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் காவல்துறை உதவியோடு அகற்றினர்.

]]>
https://vskdtn.org/2021/07/08/coimputhur-bhala-thanapani-suvami/feed/ 0
இரத்த தானம் செய்த மேட்டுபாளையம் ஸ்வயம்சேவகர்கள் https://vskdtn.org/2021/06/18/blood-donars-at-kovai/ https://vskdtn.org/2021/06/18/blood-donars-at-kovai/#respond Fri, 18 Jun 2021 09:43:18 +0000 https://vskdtn.org/?p=6812 கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் ரத்தம் பற்றாக்குறையை சமாளிக்க ஆர்எஸ்எஸ், சேவாபாரதி மூலம் இரத்த தான முகாம் நடந்தது.

பொதுவாக குரோனா கால சூல்நிலையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மூலம் இரத்த தானம் செய்ய முடியாத சூழ்நிலையால் மருத்துவமனைகளில் இரத்தம் இருப்பு குறைந்து வருகிறது. அதனை சமாளிக்க RSS, சேவாபாரதி மற்றும் பிரகதி அறக்கட்டளை சார்பாக நேற்று (17. 6. 2021) மேட்டுப்பாளையம் நகர் முத்துமாரியம்மன் கோயில் மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவர் திரு சரவணன் தலைமையில் செவிலியர்கள் ரத்ததான முகாமை நடத்திக் கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் சேர்ந்த ஸ்வயம்சேவகர்கள் பங்குபெற்று ரத்ததான செய்தனர்.

]]>
https://vskdtn.org/2021/06/18/blood-donars-at-kovai/feed/ 0