Audio Book தமிழ் – VSKDTN News https://vskdtn.org Wed, 08 Dec 2021 12:33:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 “நூற்றாண்டுகாணும் மாப்ளா கலவரம்”(1921 ஆண்டு கேரளாவில் நடைபெற்ற ஹிந்து இனப்படுகொலை) https://vskdtn.org/2021/12/06/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3/ https://vskdtn.org/2021/12/06/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3/#respond Sun, 05 Dec 2021 23:00:41 +0000 https://vskdtn.org/?p=9477 ஒலி புத்தகம்(Audiobook)

“நூற்றாண்டுகாணும் மாப்ளா கலவரம்”(1921 ஆண்டு கேரளாவில் நடைபெற்ற ஹிந்து இனப்படுகொலை)

எழுத்து: கோ.ஸ்தாணுமாலயன் ||அகில பாரத இணை பொதுச்செயலாளர்||விஹெச்பி||

முன்னோட்டம்

பகுதி: 1

பகுதி: 2

பகுதி: 3

பகுதி: 4

பகுதி: 5

பகுதி: 6

பகுதி: 7

பகுதி: 8

பகுதி: 9

முற்றும்

புத்தகம் வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம்-சென்னை

நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்

]]>
https://vskdtn.org/2021/12/06/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3/feed/ 0
வாழ்வு கொடுத்த குணவதி https://vskdtn.org/2021/07/22/valvu-kodutha-kunavathi/ https://vskdtn.org/2021/07/22/valvu-kodutha-kunavathi/#respond Thu, 22 Jul 2021 10:27:12 +0000 https://vskdtn.org/?p=7817 Audio வடிவில் 

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி சுவாமிமலை முருகன் சன்னிதியில் 15 வயது மதிக்கத்தக்க பெண் முருகனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்கிறாள். என்னுடைய அம்மா நல்ல உடல் நிலையையும் அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். நான் எப்படியாவது கல்லூரி படித்து ஏதாவது அரசாங்க வேலை செய்து ஏழைகளுக்கு தொண்டு செய்யனும் என்னுடைய தம்பி நல்ல பழக்கவழக்கம் ஏற்படனும், படிக்கணும் என்றெல்லாம் பிரார்த்தனை செய்கிறாள்.

பக்கத்தில் ஒரு அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறாள். திடீரென்று மனதில் இந்த வயதில் இவ்வளவு கஷ்டமா? படிக்க வழி இல்லையா அந்த குழந்தைக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் , ஏதாவது உதவி செய்யலாமா என்றெல்லாம் தோன்றுகிறது. திடீரென்று பார்த்தாள் அந்த குழந்தையை காணவில்லை அவளுக்கு ஏதாவது உதவி செய்யணும் என்ற எண்ணம். ஆனால் முகவரி தெரியாது எப்படி தொடர்பு கொள்ளுவது என்றெல்லாம் தோன்றுகிறது இப்படி ஒரு மாதம் ஆகிவிட்டது திடீரென்று ஒரு நாள் மாலையில் மறுபடியும் அந்த பெண் கோவிலுக்கு வருகிறாள் பிரார்த்தனை செய்கிறாள்.

இதை அந்த அம்மா பார்க்கிறாள் அருகில் செல்கிறாள் குழந்தை உன்னுடைய பெயர் என்ன? வனஜா. உனக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமா? நான் உன்னை படிக்க வைக்கிறேன். நீ கவலைப்படாதே நான் எப்பொழுதும் இங்கு தான் இருப்பேன். நீ எப்பொழுது வந்தாலும் என்னை பார்க்கலாம் என்றாள் வனஜாவுக்கு மனதிற்குள் சந்தோசம் நேராக அம்மாவிடம் சென்று சொல்கிறாள் என்னை ஒரு பாட்டி படிக்க வைக்கிறேன் என்றார் எந்த பாட்டி என்று கேட்கிறாள்.

கோவில் படி அருகில் இருக்கக்கூடிய அம்மா என்றாள் வனஜா. அம்மாவிற்கு மனதில் அந்த பிச்சை எடுக்கக்கூடிய பாட்டியா? அவர்களால் எப்படி படிக்க வைக்க முடியும். அவர்களே சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கிறாள். உன்னை எப்படி படிக்க வைப்பார் வனஜா? என்றார். அதெல்லாம் எனக்கு தெரியாது படிக்க வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்றாள். ரிசல்ட் வந்தது வனஜா 90% மார்க்கில் தேர்ச்சி பெற்றாள். கோவிலுக்கு செல்கிறாள். பாட்டியை பார்க்கிறாள் நான் 90% மார்க்கில் வெற்றி பெற்றேன் என்றாள். சரி எந்த ஸ்கூலில் படிக்கப் போகிறாய் என்ன குரூப் என்றெல்லாம் கேட்கிறார். பக்கத்தில் அரசாங்க பள்ளிக்கூடம் இருக்கிறது நான் அங்கு சென்று படிக்கிறேன் என்றாள். உடனே பாட்டி சரி நாளை நல்ல நாள் கும்பகோணத்தில் இருக்கிற சரஸ்வதி பள்ளியில் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய். போய் படி என்றாள் தயங்கி தயங்கி பைசா அதிகம் ஆகுமே! என்ன செய்வது அதைப் பற்றி நீ கவலைப்படாதே நான் படிக்க வைக்கிறேன் என்று கூறி பணம் கொடுத்து படிக்க வைக்கிறாள்.

எனக்கு ஒரே ஒரு உத்தரவாதம் தரவேண்டும். நன்றாக படிக்கணும் நல்ல மார்க் வாங்கணும். அப்பா அம்மாவை கடைசி வரைக்கும் பாதுகாக்க வேண்டும். என்றாள். சரி என்றாள் வனஜா நன்றாக படிக்கிறாள் வீட்டில் மின்சாரம் இல்லை. தெருவில் உள்ள விளக்கில் படிக்கிறாள் வீட்டில் நிம்மதி இல்லை. பல நாட்கள் சமையல் இல்லை அப்பா மது அருந்திவிட்டு வந்து அம்மாவை அடிப்பது, குழந்தைகளை அடிப்பது, ஆகையால் சமையல் இல்லை. அம்மா அக்ரஹாரத்தில் இருக்கிற சாவித்திரி மாமி வீட்டில் வேலை செய்கிறாள்.

அவர்களுடைய வீட்டில் இருந்து மீதி வருகிற உணவு கொண்டு வருவாள் அம்மா, வனஜா, தம்பி மூன்று பேரும் சாப்பிடுவார்கள். சில நாள் இரவில் உணவு இல்லை. இருந்தாலும் படிப்பில் கவனம். நன்றாக படிக்கிறாள் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவிலுக்கு வருவார் பாட்டியை பார்த்து பேசிவிட்டு செல்வாள். பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் நல்ல மார்க். பாட்டியை பார்க்க வருகிறாள் நீட் தேர்வு எழுத பாட்டி சொல்கிறாள். வேண்டாம் பாட்டி என்று சொல்கிறாள். பாட்டி திட்டுகிறாள். வேறுவழியில்லாமல் படிக்கிறாள் 91 ஆவது ரேங்க்.

சென்னை மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறது. தஞ்சையில் படிப்பதா? சென்னையில் படிப்பதா? என்ற குழப்பம். தஞ்சையிலே படிக்கலாம் என்று முடிவு செய்து படிக்கிறாள். இப்பொழுதும் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி பெறுகிறாள். இவளுடைய ஊரில் இவர்தான் முதல் டாக்டர். ஊரே சந்தோஷ படுகிறது. ஊர் தலைவருக்கு ஆச்சரியம். அப்பா குடிகாரர். அம்மா சாவித்திரி மாமி வீட்டில் வேலை செய்கிறாள். யார் இவளை படிக்க வைத்தது. சோற்றுக்கே வழி இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படித்து டாக்டர் ஆகிவிட்டாள். அவளை கௌரவிக்க முடிவு செய்கிறார்.

ஊரில் நடக்கக்கூடிய பொங்கல் திருவிழா போட்டிகளில் பரிசு கொடுக்கும் போது கௌரவிக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள் மட்டற்ற மகிழ்ச்சி. பொங்கல் திருவிழா. போட்டி நடக்கிறது இவளை கௌரவிக்கம் அன்றைய தினம் பாட்டியை அழைத்து செல்ல விரும்புகிறாள் வனஜா. பாட்டி முடியாது என்றாள். நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். இப்பொழுது நான் சொல்வதை நீங்கள் கேட்கணும். இல்லை என்றால் நான் அங்கு போக மாட்டேன் என்றாள் மறுக்கமுடியாமல் பாட்டி போகிறார். வனஜாவை கௌரவப்படுத்துகிறார்கள். இதை பார்த்தவுடன் பாட்டி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். நான் டாக்டர் ஆவதற்கு காரணம், அதோ அங்கு இருக்கிற பாட்டி தான் என்னை படிக்க வைத்தார், என்று அறிமுகப்படுத்தி பாட்டியை எழுந்து நிற்கச் சொல்கிறாள் பாட்டி எழுந்து நிற்கிறாள் மீண்டும் கண்ணீர் வடிக்கிறார் – இவர்களை பார்த்தவுடன் தலைவர் இவர்களா? இந்தப் பாட்டி பிச்சை எடுக்கக் கூடியவள் ஆனால் தினசரி காலையில் கோவிலின் முன் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு தெருவில் நிற்கக்கூடிய பூக்களை பறித்து மாலை கட்டி முருகனுக்கு தினசரி கொடுப்பார்கள். கோவிலில் கிடைக்கக்கூடிய பிரசாதம் சாப்பிட்டு கோவில் திண்ணையிலேயே படுக்கக் கூடியவள் என்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.

கண்டிப்பாக ஏதாவது பேச வேண்டும் என்று தலைவர் அழைக்கிறார் மீண்டும் டாக்டர் வனஜா வந்து அழைத்துச் செல்கிறாள் மேடைக்கு. பாட்டி எனக்கு பேசத் தெரியாது என்று கூறி பேச ஆரம்பித்தாள் என்னுடைய பெயர் கோமதி. சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி. நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள் என்னுடைய கணவர் இறந்த பிறகு மகனுடன் வசித்து வந்தேன். ஒரு ஏக்கர் நிலமும் அதில் ஒரு வீடும் இருக்கிறது. மருமகள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தாள் பக்கத்து வீட்டுக்காரர் அதிகமாக சம்பாதிக்கிறார் நீங்களும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று பிரச்சனை.

நான் ஏதாவது பேசினால் என்னையும் திட்டுவாள் வீட்டில் எனக்கும் பையனுக்கும் நிம்மதி இல்லை உன் தலையெழுத்து நீ எப்படியாவது சமாளித்துக் கோ நான் ராமேஸ்வரம் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு ராமேஸ்வரம் ரயில் வண்டியில் ஏறி புறப்பட்டேன் வண்டி கும்பகோணம் வந்தவுடன் தண்ணீர் பிடிக்கலாம் என நினைத்து கீழே இறங்கினேன். கூட்டமாக இருந்தது. நான் தண்ணீர் பிடித்து வருவதற்குள் வண்டி புறப்பட்டது.

எங்கு போவது என்று தெரியவில்லை பஸ் ஸ்டாண்டிற்க்கு நடந்து வந்தேன். சுவாமிமலை பஸ் நின்றது. அதில் ஏறி முருகனை தரிசனம் செய்யலாம் என்று நினைத்து இங்கு வந்தேன். சுவாமியை வழிபட்டு இங்கேயே தங்கினேன். அப்பொழுதுதான் ஒருநாள் இவள் அழுது கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் என் பேத்தி ஞாபகம் வந்தது. இவளுக்கு உதவி செய்வோமே என நினைத்து உதவி செய்தேன் அவ்வளவுதான் அவளுடைய முயற்சி, உழைப்பு, நம்பிக்கை, அவளை மருத்துவர் ஆக்கிவிட்டது.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/07/22/valvu-kodutha-kunavathi/feed/ 0
விடுதியும் விருதும் https://vskdtn.org/2021/07/20/viduthiyum-viruthum/ https://vskdtn.org/2021/07/20/viduthiyum-viruthum/#comments Tue, 20 Jul 2021 11:39:04 +0000 https://vskdtn.org/?p=7774 ஆடியோ வடிவில்;

வசந்த காலம் தெருக்களில் மரங்கள் பூத்து குலுங்குகின்றன. மாணவ மாணவிகள் பட்டப்படிப்பிற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அன்னை சாரதா கல்லூரியில் மாணவிகள் புதிதாக சேருகிறார்கள். வெவ்வேறு துறையை சேர்ந்த மாணவிகள் ரமா, விமலா , கீதா மூன்று பேரும் மாணவிகள் விடுதியில் ஒரே அறையில் தங்கி படிக்கிறார்கள். விடுமுறை நாளில் மூன்று பேரும் தங்களுக்குள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். நேரம் போவதே தெரியாது. ரமா மற்றும் விமலா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். கீதா வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். விமலாவும் கீதாவும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். ரமா அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாள். கீதா எப்பொழுதும் விலை உயர்ந்த ஆடை அணிவாள்.

ஒரு விடுமுறை நாளில் ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்கோவில், சமயபுரம் கோவில்களுக்கு சென்றுவரும் வழியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஐாதி மறுப்பு கூட்டம் நடந்தது. அந்த பேச்சுக்களை இவர்கள் பேருந்தில் ஏறுவதற்காக நிற்கும் போது கேட்டார்கள். விடுதியில் வந்த உடன் கீதா விமலாவிடம் அவர்கள் பேச்சு சரியாகத்தான் தோன்றுகிறது. கருவறைக்குள் பிராமணர்கள் மட்டும்தானே உள்ளே போக முடிகிறது. மற்ற ஜாதிக்காரர்கள் போக முடியாதே என்றெல்லாம் பேச்சு நடக்கும் ரமா அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாள். விமலா பதில் கூறுவாள். எல்லா பிராமணர்களும் கருவறைக்குள் போகமுடியாது. அதற்கு சில வழிமுறைகள் உண்டு. அவர்கள் மட்டும்தான் போக முடியும். கீதா இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இப்படியாக இவர்களுடைய கல்லூரி வாழ்க்கை இரண்டு வருடம் முடிந்து விட்டது.

மூன்றாம் வருடம் நடந்து கொண்டிருக்கிறது. சில சமயம் அவர்களுக்குள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள். கீதா நான் திருமணம் பண்ணாமலேயே சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவேன். என்னுடைய வீட்டில் என் தங்கை இருக்கிறாள். அவள் வேண்டுமானால் திருமணம் பண்ணட்டும் நான் பண்ணமாட்டேன் என்பாள். ரமாவும் விமலாவும் வீட்டில் பெற்றோர் பார்த்துவைக்கும் வரனைத்தான் திருமணம் செய்வோம் என்பார்கள். விமலா நன்றாக ஓவியம் வரையக்கூடியவள். மாவட்ட அளவில் முதல் பரிசுகளைப் பெறுவாள். ஓவியத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பாள். ரமா அமைதியாக இருப்பாள். பிறருக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் உடையவள். ஆனால் மூன்று பேரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்துவிட்டது. விடுதியை காலி செய்ய போகிறார்கள்.

மூன்று பேரும் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டார்கள். விமலாவும், கீதாவும் ஒரே ரயிலில் கோவை நோக்கி போகிறவர்கள். ரமா மதுரை நோக்கி போகிறவள். கோவைக்கு இரவு 8.30மணிக்கு ரயில், ரமாவிற்கு இரவு 10.30 மணிக்கு. மாலை 5.00 மணிக்கு விமலாவும் கீதாவும் பொருட்கள் வாங்க பஜார் செல்கிறார்கள். வழியில் ஒரே கூட்டம், ஒரு பிச்சைக்காரி இறந்து கிடக்கிறாள். அருகில் 2வயது சிறுவன் அம்மா இறந்தது தெரியாமல் பசியோடு பால் குடிக்க அம்மாவின் சேலையை இழுத்துக்கொண்டு இருக்கிறான், 3வயது சிறுமி அம்மாவை கட்டிபிடித்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த உடன் விமலா உடனே அருகில் இருக்கிற கடையில் இருந்து பேப்பர் வாங்கி அந்த காட்சியை படம் வரைந்தாள். பிறகு இருவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இதைப்பற்றி ரமாவுடன் பேசுகிறார்கள். இதைக் கேட்டவுடன் ரமாவிற்கு அங்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். உடனே புறப்பட்டு அந்த இடத்திற்கு செல்கிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் அகிலபாரத அளவில் ஓவியப்போட்டி. தெரு எங்கும் விளம்பரம். ரமா டில்லியில் வந்து இறங்குகிறாள். ஓவியப்போட்டி விளம்பரம் பார்க்கிறாள். நடைபெறுகின்ற கல்லூரி வளாகத்திற்கு போகிறாள். வரிசையாக ஓவியங்களை பார்க்கிறாள். ஒரு இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து அங்கே செல்கிறாள். முதல்பரிசு பெற்ற படம் வைக்கப்பட்டுள்ளது. விமலா அங்கே நிற்கிறாள். பார்த்த உடன் 5 வருடத்திற்கு பிறகு பார்த்த சந்தோசத்தில் இருவரும் கட்டிப்பிடிக்கிறார்கள். பிறகு விமலா ரமாவிடம் இந்த குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறாள். ரமா உடனே ஓவியத்தை காண்பித்து சைகை மூலம் இவர்கள்தான் இந்த குழந்தைகள் என்றாள். விமலாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ரமா நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான் என்ன நடந்தது என்று கேட்கிறாள். விமலா மனதிற்குள் ஓவியம் மூலம் நாமும் ஏதாவது உதவி செய்யலாமே என்ற் எண்ணம் தோன்றுகிறது. உடனே ரமா அன்றிலிருந்து இன்றுவரை நடந்த விசயத்தை விமலாவிடம் கூறுகிறாள்.

நான் அங்கே போயிருந்தேன். எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே. தங்களுக்குள் இந்த குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒரு தம்பதி நமக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. இந்த குழந்தையை எடுத்துச் செல்லலாமா? என்று மனைவி கணவரிடம் கேட்கிறாள். இரண்டு குழந்தையையும் எப்படி எடுத்து செல்வது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பிச்சைக்கார குழந்தையை எடுத்து வந்திருக்கிறார்கள் என்று ஏளனமாக பேசுவார்கள் என்றார். இன்னொரு நபர் இந்த குழந்தைகளை நாம் எடுத்துச்செல்வோம். ஏதாவது பிச்சைக்காரர்களுக்கு விற்றுவிடுவோம். நமக்கு காசு கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் கேட்ட உடன் நான் நேராக சென்றேன். இரண்டு குழந்தையையும் என்னுடனேயே அழைத்துவந்துவிட்டேன். அம்மாவை மாநகராட்சிகாரர்கள் எரியூட்டினார்கள்.

இரவு 9.00 மணி ஆகிவிட்டது. நீங்கள் சென்றுவிட்டீர்கள். முகவரி வாங்கி கொள்ளவில்லை. விடுதிக்கு வந்த உடன் இரண்டு குழந்தையையும் குளிப்பாட்டி புதிய ஆடை அணிந்து என்னுடன் அழைத்து சென்றேன். ரயில் வந்தது. ரயிலில் மூன்று பேரும் ஏறினோம். இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. வீட்டிற்கு போனவுடன் அம்மா அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வது இதே இறந்து கிடக்கிறாள். அருகில் 2வயது சிறுவன் அம்மா இறந்தது தெரியாமல் பசியோடு பால் குடிக்க அம்மாவின் சேலையை இழுத்துக்கொண்டு இருக்கிறான், 3வயது சிறுமி அம்மாவை கட்டிபிடித்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த உடன் விமலா உடனே அருகில் இருக்கிற கடையில் இருந்து பேப்பர் வாங்கி அந்த காட்சியை படம் வரைந்தாள். பிறகு இருவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இதைப்பற்றி ரமாவுடன் பேசுகிறார்கள். இதைக் கேட்டவுடன் ரமாவிற்கு அங்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். உடனே புறப்பட்டு அந்த இடத்திற்கு செல்கிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் அகிலபாரத அளவில் ஓவியப்போட்டி. தெரு எங்கும் விளம்பரம். ரமா டில்லியில் வந்து இறங்குகிறாள். ஓவியப்போட்டி விளம்பரம் பார்க்கிறாள். நடைபெறுகின்ற கல்லூரி வளாகத்திற்கு போகிறாள். வரிசையாக ஓவியங்களை பார்க்கிறாள். ஒரு இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து அங்கே செல்கிறாள். முதல்பரிசு பெற்ற படம் வைக்கப்பட்டுள்ளது. விமலா அங்கே நிற்கிறாள். பார்த்த உடன் 5 வருடத்திற்கு பிறகு பார்த்த சந்தோசத்தில் இருவரும் கட்டிப்பிடிக்கிறார்கள். பிறகு விமலா ரமாவிடம் இந்த குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறாள். ரமா உடனே ஓவியத்தை காண்பித்து சைகை மூலம் இவர்கள்தான் இந்த குழந்தைகள் என்றாள். விமலாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ரமா நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான் என்ன நடந்தது என்று கேட்கிறாள். விமலா மனதிற்குள் ஓவியம் மூலம் நாமும் ஏதாவது உதவி செய்யலாமே என்ற் எண்ணம் தோன்றுகிறது. உடனே ரமா அன்றிலிருந்து இன்றுவரை நடந்த விசயத்தை விமலாவிடம் கூறுகிறாள்.

நான் அங்கே போயிருந்தேன். எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே. தங்களுக்குள் இந்த குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒரு தம்பதி நமக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. இந்த குழந்தையை எடுத்துச் செல்லலாமா? என்று மனைவி கணவரிடம் கேட்கிறாள். இரண்டு குழந்தையையும் எப்படி எடுத்து செல்வது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பிச்சைக்கார குழந்தையை எடுத்து வந்திருக்கிறார்கள் என்று ஏளனமாக பேசுவார்கள் என்றார். இன்னொரு நபர் இந்த குழந்தைகளை நாம் எடுத்துச்செல்வோம். ஏதாவது பிச்சைக்காரர்களுக்கு விற்றுவிடுவோம். நமக்கு காசு கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் கேட்ட உடன் நான் நேராக சென்றேன். இரண்டு குழந்தையையும் என்னுடனேயே அழைத்துவந்துவிட்டேன். அம்மாவை மாநகராட்சிகாரர்கள் எரியூட்டினார்கள்.

இரவு 9.00 மணி ஆகிவிட்டது. நீங்கள் சென்றுவிட்டீர்கள். முகவரி வாங்கிகொள்ளவில்லை. விடுதிக்கு வந்த உடன் இரண்டு குழந்தையையும் குளிப்பாட்டி புதிய ஆடை அணிந்து என்னுடன் அழைத்து சென்றேன். ரயில் வந்தது. ரயிலில் மூன்று பேரும் ஏறினோம். இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. வீட்டிற்கு போனவுடன் அம்மா அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வது இதே அவனிடம்‌ ‌தன்னை‌ ‌இழந்து‌ ‌விட்டேன்.‌ ‌திருமணம்‌ ‌செய்ய‌ ‌வேண்டும்‌ ‌என‌ வற்புறுத்துகிறான்.‌ ‌விதவிதமாக‌ ‌பைக்கில்‌ ‌என்னை‌ ‌வெளியே‌ ‌அழைத்துச்‌ செல்வான்.‌ ‌

இந்த‌ ‌நேரத்தில்‌ ‌வீட்டில்‌ ‌திருமண‌ ‌பேச்சு‌ ‌வந்தது.‌ ‌நான்‌ ‌அவனைத்தான்‌ திருமணம்‌ ‌செய்வேன்‌ ‌என்றேன்.‌ ‌முடியாது‌ ‌என்றார்கள்‌ ‌ஒரு‌ ‌நாள்‌ ‌அவனோடு‌  ஓடிவிட்டேன்.‌ ‌அவன்‌ ‌என்னை‌ ‌அழைத்துக்கொண்டு‌ ‌போலீஸ்‌ ‌ஸ்டேசனிற்கு‌ சென்று‌ ‌எங்கள்‌ ‌இருவருடைய‌ ‌உயிருக்கும்‌ ‌ஆபத்து‌ ‌இருக்கிறது‌‌என்று‌ ‌மனு‌ கொடுத்தான்‌ ‌என்னுடைய‌ ‌அப்பா‌ ‌அம்மா‌ ‌இருவரையும்‌ ‌கைது‌ ‌செய்து‌ ‌போலீஸ்‌ ஸ்டேசனுக்கு‌ ‌அழைத்து‌ ‌வந்தார்கள்‌ ‌என்னுடைய‌ ‌அம்மா‌ ‌என்னுடைய‌ ‌காலில்‌  விழுந்து‌ ‌அவனை‌ ‌விட்டுவிடு‌ ‌நம்முடைய‌ ‌குடும்ப‌ ‌மானம்‌ ‌போய்விட்டது.‌ ‌அவன்‌ வேறு‌ ‌சமுதாயத்தைச்‌ ‌சேர்ந்தவன்.‌ ‌அதைக்‌ ‌கூட‌‌நான்‌ ‌ஏற்றுக்கொள்கிறேன்.‌ ஆனால்‌ ‌அவன்‌ ‌நல்லகுடும்பத்தில்‌ ‌பிறந்தவன்‌ ‌இல்லை.‌ ‌படிப்பும்‌ ‌இல்லை.‌

வெளியூராக‌ ‌இருந்தாலும்‌ ‌பரவாயில்லை.‌ ‌திருட்டு‌ ‌குடும்பம்.‌ ‌நம்முடைய‌ தோட்டத்தில்‌ ‌வேலை‌ ‌செய்தவனின்‌ ‌மகன்‌ ‌என்று‌ ‌கூறி‌ ‌அவன்‌ ‌வேண்டாமென்று‌ கதறி‌ ‌அழுது‌ ‌நான்‌ ‌இறந்து‌ ‌விடுவேன்‌ ‌என்று‌ ‌கூறினாள்.‌ ‌நீ‌ ‌வேண்டுமானால்‌  இறந்து‌ ‌போ‌ ‌நான்‌ ‌அவனோடு‌ ‌தான்‌ ‌இருப்பேன்‌ ‌என்றேன்.‌ ‌எனக்கு ‌உன்னுடைய‌ சொத்து‌ ‌எதுவும்‌ ‌தேவை‌ ‌இல்லை, ‌அவன்‌ ‌மட்டும்‌ ‌போதும்‌ ‌என்றேன்.‌ ‌நீ‌ ‌நாசமா‌ ‌ போ, ‌நீ‌ ‌பின்னாடி‌ ‌வருத்தப்படுவாய்‌ ‌என்று‌ ‌சாபம்‌ ‌விட்டு‌  ஸ்டேசனில்‌ ‌எழுதி‌  கொடுத்து‌ ‌சென்று‌ ‌விட்டார்கள்.  ‌ ஒரு‌  மாதம் ‌கழிந்தது.  ‌வீட்டில்‌  இருந்து‌ ‌பணம்‌ ‌வாங்கி‌ ‌வா.‌  சொத்தை‌ ‌எழுதி‌ ‌வாங்கி‌ ‌வா‌ ‌என்று‌ ‌கூறி‌ ‌என்னை ‌அடிக்க‌ ‌ ஆரம்பித்தான்.‌ ‌தினசரி‌  மது‌ ‌அருந்திவிட்டு ‌வருவான். ‌ஏதாவது‌  கேட்டால்‌ ‌அடிப்பான்.‌ ‌இரவில்‌ ‌தூங்கவே‌ ‌முடியாது,‌ ‌நரக‌ வேதனை‌ ‌அனுபவித்தேன்.‌ ‌அவனுடைய‌‌ சகோதரி‌ ‌கூட‌  திட்டுவாள்.‌ ‌எனக்கு‌ ‌விறகு‌ ‌அடுப்பில்‌ ‌சமைக்கவே‌ ‌தெரியாது.‌  விறகே‌ ‌இருக்காது.‌ ‌எங்கேயாவது‌ ‌போய்‌ ‌விறகு‌ ‌கொண்டு‌ ‌வந்து‌ ‌

சமைத்து‌ ‌கொடு‌ ‌என்பார்கள்.‌ ‌இந்த‌ ‌செய்தி‌ ‌எல்லாம்‌ அம்மாவிற்கு‌ தெரியவருது.‌ ‌குடும்பத்திற்கு‌ ‌அவமானம்‌  ஏற்படுத்தி‌ ‌விட்டாள்‌ ‌வெளியே‌ ‌இறங்க‌ ‌முடியவில்லை‌ ‌காரணம் பக்கத்து‌  தெரு‌  வேறு.‌  அவமானம்‌  தாங்கமுடியாமல்‌ வீடு‌  மற்றும் ‌சொத்துக்கள்‌ ‌எல்லாம்‌  அருகில ‌உள்ள‌  மாரியம்மன்‌ கோவிலுக்கு‌ ‌எழுதி‌ ‌வைத்துவிட்டு ‌மூன்று‌ ‌பேரும்‌  விசம்‌ ‌அருந்தி‌ தற்கொலை‌ ‌செய்து‌ ‌கொண்டார்கள்.‌ பின்னால்‌  விஜய்‌  ரௌடியாக‌ ‌மாறுகிறான்.‌ ‌தினசரி‌ ‌வீட்டில்‌ ‌போலீஸ்‌ வரும். பணத்திற்காகவும், பெண்ணிற்காகவும்‌ பல‌ ‌பேர்களை ‌கொலை‌ செய்தான். வேறு ‌வழியில்லாமல் ‌போலீஸ் ‌என்கவுண்டர்‌ ‌செய்தார்கள்.‌

இப்பொழுது‌ ‌எனக்கு‌ ‌வீட்டிற்கும்‌ ‌போகமுடியாது.‌ ‌இங்கேயும்‌ ‌இருக்க‌ முடியாத‌ ‌நிலைமை‌ ‌என்ன‌ ‌செய்வது‌ ‌என்னுடைய‌ ‌தலையெழுத்து.‌ ‌நீங்கள்‌ இருவரும்‌ ‌அப்பொழுதே‌ ‌சொல்வீர்கள்‌ ‌இந்த‌ ‌அமைப்பை‌ ‌நம்பாதே‌ இவர்களிடம்‌ ‌பேச்சு‌ ‌மட்டும்‌ ‌தான்‌ ‌இருக்கும்.‌ ‌இதுவரைக்கும்‌ ‌அவர்கள்‌ சமுதாயத்திற்காக‌ ‌எதுவுமே‌ ‌செய்ததில்லை‌ ‌காசு‌ ‌வசூல்‌ ‌செய்து‌ மேடையில்‌ ‌பேசுவார்கள்.‌ ‌மது‌ ‌அருந்துவார்கள்.‌ ‌சமுதாயத்தை‌ முன்னேற்றுவதற்காக‌ ‌எதுவுமே‌ ‌செய்யமாட்டார்கள்.‌ ‌சமுதாயத்தில்‌ எப்பொழுதும்‌ ‌ஜாதி‌ ‌பெயர்‌ ‌சொல்லி‌ ‌கலவரத்தை‌ ‌ஏற்படுத்துவார்கள்‌ என்று‌ ‌கூறியும்‌ ‌நான்‌ ‌கேட்கவில்லை.‌ ‌அன்றே‌ ‌கேட்டிருந்தால்‌ ‌எனக்கு‌ இன்று‌ ‌இந்த‌ ‌நிலை‌ ‌வந்திருக்காது‌ ‌என்று‌ ‌அழுதாள்.‌ ‌டீ‌ ‌கூட‌ ‌போட்டுக் கொடுக்க‌ ‌முடியவில்லையே,‌ உடனே ரமாவும் விமலாவும், கீதா நீ கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம். சரி அது இருக்கட்டும் உங்களைப்பற்றி விசாரிக்கவில்லையே என்றாள் கீதா. ரமா உனக்கு எத்தனை குழந்தைகள் என்றாள். எனக்கு இரண்டு குழந்தைகள் என்று கூறினாள் ரமா. விமலா எனக்கும் ஒரு குழந்தை என்று கூறி தன்னைப்பற்றியும் நாங்கள் இருவரும் சந்தித்தது பற்றியும் கூறினார்கள்.

நான் அன்று திருமணம் செய்யமாட்டேன், புரட்சி ஏற்படுத்துவேன் என்றேன். ஆனால் நீயோ எதுவுமே கூறாமல் அமைதியாக இருந்து எந்த பெண்ணாலும் செய்ய முடியாததை நீ சாதித்து விட்டாயே என்றாள் கீதா. உடனே ரமா எனக்கு வீட்டில் பிரச்சனை ஏற்பட்டபோது என்னுடைய பெரியப்பா மகன் கேசவன் (அண்ணன்). ஜாதி வேறுபாடு பார்க்காமல் தன்னுடைய சொந்த வேலை முடிந்த பிறகு எப்பொழுதும் சமுதாய வேலையில் ஈடுபடுவான். நாட்டிற்காக உயிர்விடுவதை விட நாட்டிற்காக வாழ்ந்து காட்டுவதே மேல் என்று கூறுவான் அவனால்தான் நான் நம்பிக்கையோடு வேலை செய்கிறேன் என்றாள் ரமா. செலவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு நான் அமெரிக்கா செல்வதற்குள் வந்து போகிறேன் என்று கூறி இருவரும் திரும்பிவிட்டார்கள்.

ஒரு மாதம் கழித்து இரண்டு பேரும் வருகிறார்கள். தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து. அங்கே கீதாவை தங்கவைத்து மாதாமாதம். பணம் கொடுத்து உதவி செய்கிறாள். கீதா சேரி பகுதியில் உள்ள மக்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கிறாள். அக்கம் பக்கத்து தெருவில் உள்ளவர்கள் வந்து படிக்கிறார்கள் ஊரில் மரியாதை ஏற்படுகிறது. பஞ்சாயத்து தேர்தல் வருகிறது. ஊர் மக்கள் தேர்தலில் போட்டியிட சொல்கிறார்கள், சுயேட்சையாக போட்டியிடுகிறாள். எதிர்த்து வேறுயாரும் நிற்கவில்லை. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறாள். பாரதத்தில் முன்னுதாரணமான பஞ்சாயத்தாக மாற்றுகிறாள். இரண்டு வருடம் கழித்து அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளுக்கு ஐனாதிபதி விருது வழங்க இருக்கிறார். நீங்களும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி டில்லி வரவேண்டும் என்று இருந்தது. அன்றைய தினம் சிறந்த ஓவியத்திற்காகவும், அதிகமான நபர்களுக்கு இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்ததற்காகவும் விமலாவிற்கு அழைப்பு வந்தது. இருவரும் டில்லி செல்கிறார்கள். விருது வாங்குகிறார்கள். அதே நாளில் அமெரிக்காவில் சிறந்த சேவை செய்ததற்கான விருதை அங்குள்ள அதிபரிடம் ரமாவும் வாங்குகிறாள். இவ்வாறு வாழ்கையில் மூன்று பேரும் விருது வாங்குகிறார்கள். விடுதியில் ஏற்பட்ட நட்பு விருது வாங்குவதில் முடிந்தது.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/07/20/viduthiyum-viruthum/feed/ 2
தாயன்பு https://vskdtn.org/2021/07/18/thaynbu/ https://vskdtn.org/2021/07/18/thaynbu/#respond Sun, 18 Jul 2021 08:21:17 +0000 https://vskdtn.org/?p=7710 ஆடியோ வடிவில்.

வேலம்மா, வேலம்மா என்ன ரொம்ப சந்தோசமாக இருக்கிறாய். இல்ல வசந்தி மாமி சனி ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் பெங்களூரில் வேலை பார்க்கும் என் பொண்ணை பார்க்க போறேன். போகக்கூடிய நேரத்தில் அவளுக்கு பிடித்த ஓமபொடி செஞ்சிட்டு போறேன் ஆகையால் இன்று சீக்கிரமாக பாத்திரம் கழுவி விட்டு போகிறேன் மாமி என்று கூறிவிட்டு புறப்படுகிறாள். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வசந்தி மாமி வீட்டிற்குள் வேலம்மா போகிறாள். மாமி ஆச்சரியத்தோடு பார்க்கிறாள். என்னம்மா இரண்டு நாள் விடுமுறை கேட்டுட்டு போனாய் ஒரு மாதிரியா முகம் இருக்கு என்ன ஆயிற்று.

ஒன்றும் இல்லை அம்மா. நீ பல நாள் பட்டினியாக இருந்தபோது கூட வெளியே காட்டிக்காம சந்தோசமாக இருப்பாய், சொல்லு. ஏன் வருத்தத்தோடு இருக்கிறாய் சொல் என்றாள் மாமி. நான் வெள்ளிக்கிழமை மாலை இங்கிருந்து வீட்டிற்குப் போய் பலகாரம் செஞ்சிட்டு, காலை சீக்கிரம் திருச்சியிலிருந்து புறப்பட்டு பெங்களூர் போனேன். மதியம் ஒரு மணி பஸ் ஸ்டாண்டில் இருந்து இறங்கி ஐடி கம்பெனிக்கு போனேன். வழியில் மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்று சாப்பிடலாம் என்ற எண்ணத்தோடு போனேன். வாசலில் செக்யூரிட்டி தடுத்து நிறுத்தினான். யாரைப் பார்க்கப் போகிறீர்கள். இங்கு வேலை பார்க்கிற மகேஸ்வரியை பார்க்க போகிறேன். இந்த புக்கில் கையெழுத்து போட்டுட்டு போங்க என்றார். நான் படிக்கவில்லை. எனக்கு கையெழுத்து போட தெரியாது கைநாட்டு வைத்துவிட்டு உள்ளே போனேன்.

அலுவலகத்தின் அறைக்கு வெளியே நாற்காலியில் உட்கார்ந்து இருந்தேன். அங்கு இருந்தபோது வழியில் இரண்டு மூன்று பேர் விசாரிக்கிறார்கள். மகேஸ்வரியை பார்க்க வேண்டும் என்றேன். சரி அம்மா உட்காருங்க. நாங்க போய் சொல்கிறோம் என்றார்கள். இதற்கிடையில் வெயிலில் நடந்து போனதால் தண்ணீர் தாகம். அங்கு விசாரித்து அதோ அங்கே இருக்கிறது. போய் குடிங்க அம்மா என்றார். ஜன்னல் பக்கம் போனேன். அங்கே இரண்டு பேர் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆகையால் அங்கே நின்று கொண்டிருந்தேன். ஜன்னலின் மறுபுறம் மகளின் பேச்சு கேட்டது. மகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அப்பொழுது ஒரு பெண் அவளிடம் உன்னை பார்க்க ஒரு அம்மா வந்திருக்கிறார்கள். அம்மாவா அவர் எப்படி இருப்பாள் என்றாள் மகேஸ்வரி. அவர்கள் பாவம் முகத்தில் தீக்காயம் பட்டு, முகம் ஒரு மாதிரியா இருக்கிறது என்றாள். ஓ அவளா? எங்க சொந்தக்காரங்க என்றாள்.

இவள் ஏன் இங்கு வந்தாள் என்று புலம்புகிறாள். இருப்பிடத்தை விட்டு எழுந்தாள். உடனே இன்னொரு அம்மா மகேஸ்வரி உன்னைத்தேடி ஒரு அம்மா வெளியே உட்கார்ந்து இருக்கிறாள் என்றாள். அவங்க என் பக்கத்து வீட்டு அம்மா. ஏதோ இங்கு வந்த இடத்தில் என்னை பார்க்க வேண்டும் என்று வந்திருப்பார்கள். மகேஸ்வரி மெல்ல நடந்து வருகிறாள் வழியில் ஒரு பையன் சொன்னான். உன்னை விசாரித்து ஒரு அம்மா வந்திருக்கிறாள் என்றான். அவர்களா? எங்க வீட்டு வேலைக்காரி. எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியவில்லை. போய் பார்க்கிறேன் என்று வருகிறாள். இதெல்லாம் கேட்டு விட்டு தண்ணீர் குடித்து விட்டு வாசல் பக்கம் வந்தேன். உடனே மகேஸ்வரி சொல்லிவிட்டு வர வேண்டியதுதானே, ஏன்? இங்கு வந்தாய் எனக்கு இரண்டு நாள் இங்கு வேலை அதிகம்.

உங்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லை. கேன்டீன் போய் சாப்பிட்டு விட்டு போ என்றாள். கையில் இருந்த பொட்டலத்தையும் கொடுத்துவிட்டு எனக்கு பசிக்கவில்லை என்று கூறி விட்டு புறப்பட்டு போய்விட்டாள். எனக்கு பசி தாங்க முடியவில்லை ஆதலால் அங்குள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். மனதில் தீக்காயம் ஏற்பட்டது நினைவிற்கு வந்தது. அவளுடைய அப்பா இறந்து ஒரு மாதம் ஆனது. வீட்டில் நானும் அவளும் மட்டும் தான் இருந்தோம். அவளுக்கு அப்போது ஆறு வயது இருக்கும். பார்ப்பதற்கு என்னைப் போல அழகாக இருந்தாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணியிருக்கும் அவளுக்கு இருந்த சாதம் ஊட்டிவிட்டு நான் தண்ணீர் குடித்துவிட்டு படுத்திருந்தேன்.

திடீரென்று அலறும் சத்தம் கேட்டது பார்க்கும் போது எரிந்துகொண்டிருந்த சிம்னி விளக்கு சாய்ந்து கிடக்கிறது. அங்கிருந்து மண்ணெண்ணெய் கீழே சிந்தி, அதுவும் எரிந்து மகேஸ்வரி பாவாடை எரிந்து கொண்டிருந்தது. உடனே தீயை போராடி அணைத்தேன் ஆனால் அந்த தீ என் மீது பட்டு நான் எரிந்து கொண்டிருக்கிறேன். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தீயை அணைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள். அவளை காப்பாற்ற போனதில் என்னுடைய முகம் எல்லாம் எரிந்து நான் இன்று இப்படி அருவருப்பாக இருக்கிறேன். நான் இவளை விட அழகாக தான் இருந்தேன். எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தேன். தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலம் ஆண்டாள் கல்லூரியில் எம் எஸ்சி படிக்க வைத்தேன். எத்தனையோ நாள் அவளுக்கு உணவு கொடுத்துவிட்டு சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட மகள் இன்று இப்படி சொல்லி விட்டாளே. தீக்காயத்தினால் இப்படி அழகில்லாமல் இருக்கிறேன் அவளுக்கு அம்மா என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது. நான் யாருக்காக வாழ்கிறேன். எங்கேயாவது போய் இறந்து விடுவோமா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பக்கத்து மரத்தடியில் ஒரு ஆண், பெண் பேசிக்கொண்டிருந்தார்கள். தீபக், போரடிக்கிறது நாளைக்கு விடுமுறை நாம் இன்று ஜாலியாக வெளியே எங்கேயாவது போவோம். ஹோட்டல் போய் சாப்பிட்டு விட்டு தங்கிவிட்டு திங்கள் காலையில் வேலைக்கு போவோம் என்றாள். அவனோ வேண்டாம் மகேஸ்வரி, என்றான். வலுக்கட்டாயமாக நீ வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தினாள்.

என்னிடம் காசு இல்லை என்றான். அவள் நான் உன்னிடம் காசு கேட்டேனா என்றாள். சரி என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் போகிறார்கள். இதைக் கேட்டவுடன் எனக்கு பசி நீங்கியது. கடவுளே! இதற்காகத்தான் இவளை கஷ்டப்பட்டு வளர்த்தேனா? என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டு, நேராக வீட்டிற்கு இரவே வந்து சேர்ந்தேன். இரவில் தூக்கம் இல்லை. என்ன வாழ்க்கை இது. ஏன்? வாழ வேண்டும் என்று தோன்றுகிறது மாமி என்றாள். காலம் மாறிவிட்டது அப்படித்தான் இருக்கும். என்றைக்காவது அவளுக்கு புத்தி வந்து வருந்துவாள் என்றாள் மாமி. வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் வேலம்மாள். சிறிது நேரத்தில் மாமி வீட்டிற்கு போன் வந்தது. உங்கள் வீட்டில் வேலை செய்யக்கூடிய வேலம்மாள் மகள் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டாள். பெங்களூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐசியூவில் இருக்கிறாள் என்று சொல்லி கட் பண்ணினாள். இந்த செய்தி வேலம்மாளிடம் தெரிவிக்கப்படுகிறது. அதுவரைக்கும் மகள் மீது பயங்கரமான கோபத்தில் இருந்தாள். செய்தி கிடைத்தவுடன் பெங்களூரு இரவோடு இரவாக புறப்படுகிறாள். அங்கே செல்கிறாள். மரத்தடியில் நேற்று பார்த்த பையன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவள், அவனிடம் விசாரித்தாள். நாங்கள் இருவரும் பைக்கில் போய்க் கொண்டு இருந்தோம். ஸ்பீட் பிரேக்கில் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தாள். பின்னால் வந்த வண்டி ஏறி இறங்கி வலது கைவிரல் இரண்டு துண்டாகி விட்டது மற்றும் தலையிலும் அடிப்பட்டது. அதனால் ஐசியூவில் இருக்கிறாள் 24 மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும் என்றார்.

வேலம்மாள் எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள். கடவுள் அருளால் நினைவு வந்தது. 10 நாளில் டிஸ்சார்ஜ் ஆகி திருச்சிக்கு வந்தாள். மீண்டும் பழைய ஓலைக் குடிசையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. அடிக்கடி கம்பெனி ஞாபகம் வருகிறது. அம்மா அன்று என்னை பார்க்க வந்தபோது, அம்மா அழகாக இல்லையே என்று, சக ஊழியரிடம் உறவினராகவும், பக்கத்து வீட்டுக்காரியாகவும். அதைவிட வேலைக்காரியாகவும் தவறுதலாக சொல்லிவிட்டேனே, என்று அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

இது எல்லாம் கடவுள் தண்டனை. எனக்கு இப்பொழுது வலது கையில் இரண்டு விரல் இல்லாமல் ஆகிவிட்டது என்று மீண்டும் அழுகிறாள். அம்மா, நீ கவலைப்படாதே நான் அதை அன்றே மறந்து விட்டேன். நீ உன் உடம்பை கவனித்து வேலைக்கு போய் நன்றாக இரு, என்றாள். இல்லை அம்மா, நான் இனி உயிரோடு இருக்கும் வரை நீ என்னோடு தான் இருக்க வேண்டும். எனக்கு திருமணம் ஆனாலும் நீ எங்களோடு தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெங்களூரில் வீடு பார்த்து அம்மாவையும் அழைத்து செல்கிறாள்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/07/18/thaynbu/feed/ 0
டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு https://vskdtn.org/2021/06/14/dr-ji-history-audio-book/ https://vskdtn.org/2021/06/14/dr-ji-history-audio-book/#comments Mon, 14 Jun 2021 12:42:59 +0000 https://vskdtn.org/?p=6622  

]]>
https://vskdtn.org/2021/06/14/dr-ji-history-audio-book/feed/ 2