அப்பா – VSKDTN News https://vskdtn.org Mon, 14 Jun 2021 12:58:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விவசாயியின் வாழ்க்கை https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/ https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/#comments Mon, 14 Jun 2021 12:58:25 +0000 https://vskdtn.org/?p=6629 விவசாய கிராமம். தினசரி மக்கள் வானத்தை பார்த்துக்கொண்டிருப்பார்கள். மழை எப்பொழுது பெய்யும் என எதிர்பார்த்து இருப்பார்கள். மழை பெய்தால் தான் விவசாயம் செய்யமுடியும். விவசாயம் ஆரம்பித்தாலும் தண்ணிருக்காக காத்திருக்க வேண்டும். கிணறு தோண்டினாலும் தண்ணிர் தேவையான அளவு இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் மாடசாமி தம்பதிகள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் வயலிலே தான் இருப்பார்கள். ஒழுங்காக சாப்பிடுவதில்லை. மூன்று குழந்தைகள். வனஜா, குமார் மற்றும் ரவி மூன்றுபேரும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். படிக்க வைப்பதே கஷ்டமாக இருக்கிறது.

இந்த சூழலில் வனஜா நன்றாக படிக்கிறவள். 10ம் வகுப்போடு நின்றுவிடுகிறாள். அப்பா நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். தம்பிகள் படிக்கட்டும். இல்லை அம்மா நி 10ம் வகுப்பில் 90சதவிதம் மார்க் வாங்கியிருக்கிறாய். நாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நீ படியம்மா என்றார். வீட்டு சூழ்நிலையை புரிந்து கொண்டு பிடிவாதமாக படிக்க மறுத்து அப்பாவிற்கு விவசாயத்தில் உதவி செய்கிறாள். மூன்று பேரும் கஷ்டப்பட்டு இருவரையும் படிக்க வைக்கிறார்கள். சில நாட்களில் 2பேரும் குடும்ப கஷ்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். உடனே குழந்தைகள் அப்பா நாங்கள் பெரிய ஆள் ஆனபிறகு உங்கள் இருவரையும் கஷ்டப்படாமல் காப்பாற்றுவோம் என்பார்கள். இருவரும் படித்து அரசாங்க வேலை கிடைத்தது.

உடனே அக்காவிற்கு ஒரு விவசாயியை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள் அதே ஊரைச் சேர்ந்த விவசாயிக்கு. உழைத்து உழைத்து அப்பா, அம்மா உடம்பு பலகீனமாகிறது. இருந்தாலும் மனதில் ஒரு சந்தோஷம். பசங்க இரண்டு பேருக்கும் வேலை கிடைத்ததே என்று. பெரிய பையன் குமாருக்கு வேலைக்கு ஏற்றவாறு பணக்கார வீட்டில் பெண் கிடைக்கிறது. ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்பா என் மனைவிக்கு இந்த வீட்டு சூழ்நிலை பிடிக்கவில்லை. நாங்கள் தனிக்குடித்தனம் போகிறோம் என்றார். சரி பரவாயில்லை. நீ சந்தோஷமாக இரு என்றார்.

ஒரு வருடம் முடிந்தது. ரவிக்கு திருமணம் ஏற்பாடு. பெண் பார்க்கும் வேலை ஆரம்பித்தது. அண்ணனுக்கு பெரிய இடத்தில் திருமணம் நடந்தது. அவா;கள் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்கள். நம்ம அளவில் பார்ப்போமே என்றார். ரவி பேங்கில் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்கிற பெண்ணையே திருமணம் செய்ய முடிவு செய்கிறார். வீட்டில் பேசி திருமணம் நடக்கிறது. வீட்டில் இருந்து வேலைக்கு போவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஆதலால் பேங்க் அருகிலேயே வீடு பார்ப்போம் என்று ஒரு வாரத்திலேயே. இந்த சூழலில் சொத்தை பாகப்பிரிவினை செய்து கேட்கிறார்கள். அப்பா வேண்டாம் என்றார். அம்மா பரவாயில்லை நம்ம பிள்ளைகள் தானே என்றாள். விருப்பம் இல்லாமல் பிரித்து கொடுக்கிறார். மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆள் வைத்து விவசாயம் செய்து வருமானத்தை அவரவர்கள் பிரித்து எடுக்கிறார்கள். சாப்பிட வழியில்லை. இரண்டு மகன்களும் ஒருவேளை கூட அம்மா அப்பாவிற்கு உணவு கொடுக்க தயாரில்லை.

இந்த நேரத்தில் அம்மா வருத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள். ஆடம்பரமாக வெளி உலகிற்கு தெரியும் படி இறுதிசடங்குகள் மற்ற சடங்குகள் நிறைவு பெறுகிறது. அவா;கள் இருவரும் சென்றுவிட்டார்கள். உணவிற்கு வழியில்லை. வனஜா கூப்பிடுகிறாள். அப்பா என்னுடைய வீட்டிற்கு வாருங்கள். நாங்கள் சாப்பிடுவதில் ஒரு பங்கு உனக்கு தருகிறேன். அப்பா கவலைப்படாதே என்னுடன் வாருங்கள் என்றாள். பரவாயில்லை அம்மா நீ அழைத்ததே சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டார். குமார் மற்றும் ரவி கவலைப்படவில்லை. ஆனால் வனஜாவிற்கு வருத்தம். எப்படி கஷ்டப்பட்டு பலநாள்கள் அவர்கள் சாப்பிடாமலே எங்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள் என்று பள்ளிப்பருவத்தை நினைத்து பார்க்கிறாள். ஒரு வருடம் ஆகிவிட்டது.

பலபேர்கள் அப்பாவை கேரளத்தில் பார்த்தேன். கோவிலில் பிச்சை எடுக்கிறார் என்று செய்தி மகன்களுக்கு கிடைக்கிறது. மேலும் 6 மாதம் ஆகிவிட்டது. கேரளா பம்பர் லாட்டரி பிச்சைக்காரனுக்கு 10 கோடி பரிசு கிடைத்தது என்ற செய்தி விசாரித்து குமார் மற்றும் ரவி இரண்டு பேரும் கேரளம் செல்கிறார்கள். விசாரிக்கிறார்கள். கோவிலில் இருந்த பிச்சைக்காரன் இப்பொழுது அங்கு இல்லை. எங்கு போயிருக்கிறான் என்று தெரியவில்லை. 6 வருடம் கழித்து கையில் ஒரு கமண்டலத்தோடு வருகிறார். தோளில் ஒரு தோள்பை. எங்கு சென்றாலும் இந்த இரண்டையும் யாரிடமும் கொடுக்கமாட்டார். பக்கத்து தோட்டக்காரன் விட்டிற்கு போகிறார். அவர்கேட்கிறார். உங்களுக்கு கேரளா பம்பா; லாட்டரி பரிசு 10 கோடி கிடைத்ததா? பேப்பரில் செய்தி வந்தது என்றார். அப்படியா நடந்த விவரத்தை சொன்னார் மாடசாமி. நான் கேரளாவிற்கு போனது உண்மைதான் கோவிலில் இருந்தேன். ரிஷிகேஷில் இருந்து ஒரு சன்னியாசி வந்தார். அவர்என்னை அழைத்து சென்றார். நான் ஆஸ்ரமத்தில் இருந்தேன். சன்னியாசியிடம் என்னுடைய வாழ்க்கையைப்பற்றி சொன்னேன். நீ கவலைப்படாதே நான் ஒரு கமண்டலம் தருகிறேன். அதை நீ எங்கு சென்றாலும் கொண்டு செல்ல வேண்டும். யாரிடமும் கையில் கொடுக்கக்கூடாது என்றார். நீ ஊருக்கு போய்வா என்றார். அதன்படி வந்தேன் என்றார். அப்பா வந்த செய்தி மகன்கள் காதிற்கு எட்டுகிறது. அப்பாவைத்தேடி வருகிறார்கள். அப்பாவிடம் பேசுகிறார்கள். என்னுடன் வாருங்கள் என்றான் குமார். ரவி என்னுடன் வாருங்கள் என்றான். இரண்டு மகன்களும் பேசி ஒரு மாதம் ஒரு வீட்டில், ஒரு மாதம் இன்னொரு விட்டில் இருங்கள். நாங்கள் உங்களை கவனிக்கிறோம் என்றார்கள். பக்கத்து தோட்டக்காரரிடம் போய் சொல்கிறார். அவர்கள் விருப்பப்படியே போகிறேன். ஆனால் நான் இறந்தபிறகு என்னுடைய இறுதி சடங்கு எல்லாம் முடிந்த பிறகு ஊர் தலைவன் முன்னிலையில்தான் இந்த கடிதத்தை பிரிக்க வேண்டும் என்ற கண்டிசனோடு போகிறார்.

மாதத்தில் ஒரு நாள் மகள் வீட்டிற்கு போவார். மகன்கள் கொடுக்கக்கூடிய காசை சேமித்துவைத்து மகளுக்கு கொடுப்பார். திடீரென்று ஒரு நாள் இறந்து விடுகிறார். காரியங்கள் முடிந்துவிட்டது. ஊர் கூடியது. கமண்டலம் இரண்டு கவா; இருக்கிறது. ஒன்று வனஜாவிற்கு. இன்னொன்று குமார் மற்றும் ரவிக்கு. ஊர் தலைவருக்கு ஒரு கடிதம். அதில் இதைத்தான் முதலில் பிரிக்க வேண்டும். இன்னொன்று பொதுவாக எல்லோர் மத்தியிலும் வாசிக்க வேண்டும் என்று அதன்படி வனஜாவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அவள் பிரித்து தனியாக மனதுக்குள் படிக்கிறாள். வனஜா நீ கவலைப்படாதே நீ ஏழ்மையானாலும் என்னை, அப்பா என் வீட்டில் இருங்கள் நான் உங்களை காப்பாற்றுகிறேன் என்றாயே. அந்த வார்த்தையே நீ என்னை காப்பாற்றியது போல் ஆகிவிட்டது. உனக்கு கடவுள் எல்லா ஆசியும் அளிப்பார்.

உனக்காக ஒரு 20 ஆயிரம் காப்பீட்டு பத்திரம் பக்கத்து தோட்டக்காரரிடம் கொடுத்திருக்கிறேன். அதை நீ வாங்கிக்கோ என்று எழுதியிருந்தார். கடிதத்தை மூடிக்கொள்கிறாள் அமைதியாக இருக்கிறாள். ஊர் மத்தியில் இன்னொரு கடிதம் பிரிக்கப்பட்டு வாசிக்கப்படுகிறது. ஊர் மக்களுக்கு ஒரு செய்தி எனக்கு ஏற்பட்ட ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. எந்த காரணத்தைக்கொண்டும் உயிரோடு இருக்கும்போது சொத்தை பிரித்துக்கொடுக்ககூடாது. எதுவாக இருந்தாலும் தங்களுடைய காலத்திற்கு பிறகு தான் கொடுக்கவேண்டும். ஆகையால் இந்த கமண்டலத்தில் உள்ளதை குமார் மற்றும் ரவிக்கு சமமாக பிரித்து கொடுக்கவும். அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி ஒரு வேளை உணவுகூட கொடுக்கவில்லை என்றாலும் கடைசிநேரத்தில் அவா;களுக்காக சம்பாதித்து கமண்டலத்தில் வைத்திருக்கிறேன். இருவருக்கும் கொடுக்கவும் என்று எழுதியிருந்தது. மருமகள்கள் மாறிமாறி பார்க்கிறார்கள். நாம் எவ்வளவு கொடுமைபடுத்தியும் நமக்காக அவருக்கு கிடைத்த லாட்டரி தொகையை நிதியாக மாற்றி கமண்டலத்தினுள் வைத்து இருக்கிறார் என்று சுத்தியல் கொண்டு வரப்படுகிறது. கமண்டலத்தின் வாய் பகுதி வெட்டி திறக்கப்படுகிறது. அதில் கங்கை தீர்த்தம் வைக்கப்பட்டுள்ளது. தலைவர் எடுத்து குமாருக்கும் ரவிக்கும் கொடுத்துவிட்டு ஊர் மக்கள் கலைந்து செல்கிறார்கள். இரண்டு மருமகளும் சேர்ந்து மாமனாரையும் கணவனையும் குடும்பத்தையும் திட்டிவிட்டு கோவத்தில் வீட்டில் இருந்து வெளியே போகிறார்கள். குமாரும், ரவியும் சிரிக்கிறார்கள். வனஜா கேட்கிறாள். என்ன தம்பி சிரிக்கிறாய் என்று, உடனே குமார் சொன்னான். அக்கா நாங்கள் அப்பா கேரளாவில் பிச்சை எடுக்கிறார் என்ற செய்தி கேட்ட அன்று எனக்கு இரவில் தூக்கமே இல்லை. அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நம்மை வளர்த்தார். நாம் இப்படி ஆயிட்டோமே என்ற வருத்தம் இரவில் தூக்கம் வரவில்லை. மறுநாள் காலையில் ரவிக்கு போன்செய்து நாம் அப்பாவை போய் பார்ப்போம் என்றேன்.

அவனும் சம்மதித்தான். இரண்டு பேரும் கேரளா சென்றோம். அங்கு அப்பா கோவிலில் உட்கார்ந்திருந்தார். இதை பார்த்ததும் இரண்டு பேரும் அப்பாவை கட்டிப்பிடித்து அழுதோம். எங்களுக்கு குடும்பத்தில் நிம்மதியாக இருக்கமுடியாது. அதனால் தான் மனைவி சொன்னதை கேட்டு உங்களை துரத்தி விட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள் அப்பா என்றார்கள். நீ அக்கா விட்டில் இருங்கள். நாங்கள் செலவிற்கு காசு தருகிறோம் என்றோம். அதனால் என்ன? பரவாயில்லை அப்பா. நீங்கள் மூவரும் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். நான் தீர்த்த யாத்திரை முடித்துவிட்டு வருகிறேன. எனக்கு எப்பொழுது காசு தேவைப்படுமோ அப்பொழுது நான் கேட்கிறேன் என்றார். அவர்கையில் ஒரு போன் கொடுத்துவிட்டு திரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து போன் வந்தது. நான் இந்த ஆஸ்ரமத்தில் இருக்கிறேன் என்றார்.

அதன்படி நாங்கள் அடிக்கடி போன் செய்து விசாரிப்போம். தேவையான காசு அனுப்பி கொடுப்போம். ஒரு நாள் உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. டிக்கெட் எடுத்து அனுப்பு என்றார். நாங்களும் அனுப்பி வைத்தோம். நாங்கள் சொன்னபடிதான் அப்பா இங்கு வந்து கமண்டலத்தையும் பையையும் கீழே வைக்காமல் இருந்தார். நாங்கள் உனக்கு காசு கொடுப்பதற்கு அப்பாவிற்கு பணம் கொடுப்போம். அதைத்தான் அப்பா உன்னிடம் வந்து கொடுப்பார். இப்பொழுது அப்பாவை கடைசிவரைக்கும் கவனித்த சந்தோஷம். வேறுயாருக்கோ கிடைத்த லாட்டரி பரிசுத்தொகையை அப்பாவிற்குதான் பரிசு கிடைத்தது என்று மனைவியை நம்ப வைத்தோம். அதனால் வீட்டில் நிம்மதி மட்டுமல்ல, காசுக்காக போட்டிபோட்டு கவனித்தார்கள் என்று கூறினார். குமார் ஏதோ நாம் மூவரும் சொன்னபடி அப்பாவை கடைசி வரைக்கும் கவனித்தோம். சந்தோஷம் என்று கூறி மூவரும் கிளம்பிவிட்டார்கள்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/06/14/vivasyi-valakkai/feed/ 2
படித்ததில் பிடித்தது 1 https://vskdtn.org/2021/06/14/paditathil-pidithathu-1/ https://vskdtn.org/2021/06/14/paditathil-pidithathu-1/#comments Mon, 14 Jun 2021 05:46:55 +0000 https://vskdtn.org/?p=6564 ஒரு நாள் ஒரு ஊருக்குச் சென்றபோது, இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது உண்டா? என்று கேட்டபோது, சுப்ரமணியன் என்பவரது வீட்டை காட்டினார்கள்.

”அதோ அந்த மாடி வீட்டுதான். நல்லவர், சாது, பக்தர். லட்சாதிபதி. நான்கு பிள்ளைகள்” அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியன் உடனே எழுந்தார். ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர்த்தினார், ஐயா, இங்கு உணவு அருந்தவேண்டும் ” என வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் யோகிக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணினார். பேச்சு கொடுத்தார்.

“உங்களிடம் எவ்வளவு செல்வம் உண்டு?” “சுவாமி! ரூபாய் 22,000/- உண்டு”

*குழந்தைகள் எத்தனை பேர்?”“சுவாமி! ஒரே புதல்வன் தான்”

“உமக்கு வயது என்ன?”

“சுவாமி! எனக்கு வயது 4 வருஷம்.

சாமியாருக்கு கோபம் வந்தது.

இவரைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே?”.

எனவே கோபத்தோடு பேசினார்.

“ எதற்கு ஒன்றுமில்லாத விஷயத்துக்கு புளுகுகிறீர்கள். நீர் பேசுவ தெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு பூசித்தால், அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் புசிப்பதில்லை.” சாமியார் எழுந்தார்.

சாமியார் காலில் விழுந்து, “ சாமி, நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து உண்மை உணரவேண்டும்” என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார்.

அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.

“முதலியார், உங்கள் கணக்குப் புத்தகமே ” உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டும்போது எப்படி நீங்கள் என்னிடம் 22,000 ரூபாய் என்று பொய் சொன்னீர்கள்.?
“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் எனதாகுமா? இதோ பாருங்கள், நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான்; செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து.” என்று சொன்னேன்.

சாமியார் ”ஆஹா என்று சந்தோஷமாக தலையாட்டினார். ‘ உங்களுக்கு நாலு பிள்ளைகள் இருக்கும்போது ஏன் ஒன்று என்று சொன்னீர்?. ”சுவாமி! எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். உண்மையில் ஒருவன் தான் என் பிள்ளை ” ”முதலியார் என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? “சுவாமி! இதோ விளக்குகிறேன். முதலியார் ” ” மகனே! நடேசா ” என கூப்பிட்டார். ”அப்பா நான் சீட்டு விளையாடுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்” என்று பதில் வந்தது. “மகனே! வடிவேலா” என முதலியார் குரல் கொடுத்தார். “ஏன் இப்படிக் கத்தறே , வாயை மூடிக்கொண்டிரு” என்று ஒரு குரல் பதிலாக வந்தது. “என் மகனே! சிவராஜா என்று ஒரு குரல் கொடுத்தார் முதலியார். ” உன்னோடு பேச என்னால் ஆகாது, என்று கோபமாக கத்துவது காதில் விழுந்தது. ”அப்பா குமரேசா ” என்று ஒரு முறை முதலியார் கூப்பிட்ட கணமே ஒரு பையன் ஓடிவந்தான். அப்பாவையும், எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான்.

முதலியார் சாமியாரிடம் “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பில் நான் செய்த பாவங்களின் உருவங்கள். இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன். ”முதலியார் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏன் உன் வயது விஷயத்தில் நம்பும் படியாக சொல்ல வில்லை? ” “சுவாமி! ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத / பேசாத நாள் எல்லாம், பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால், அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், ”எனக்குச் சொந்தமான வயது 4 வருஷம் தானே” சரியா ஐயா?

முதலியார் நீங்கள் சொன்னது அப்பட்டமான உண்மை.

1.தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.

2.தாய்-தந்தை கருத்தை / பேச்சை கேட்கின்றவர்களே மகன் / மகள்

3. இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.

உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார்.*

இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்

வாழ்க வளமுடன்!

]]>
https://vskdtn.org/2021/06/14/paditathil-pidithathu-1/feed/ 1
தர்மம் காத்த தனயன் https://vskdtn.org/2021/06/12/dharman-kaaththa-thanayan/ https://vskdtn.org/2021/06/12/dharman-kaaththa-thanayan/#comments Sat, 12 Jun 2021 13:09:14 +0000 https://vskdtn.org/?p=6485 ஆன்மீக குடும்பம், காலையில் சாமி கும்பிட்டுவிட்டு ராம்நாத் குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு போகிறார். சரியாக 10.35 மணிக்கு , தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் அருகிலுள்ள கனரா  பேங்கில் நுழைகிறார். மாற்றலாகி ஜாயின்ட்  செய்த முதல் நாளே ஐந்து நிமிடம் தாமதமாக வந்திருக்கிறாயே என்றார் மேனேஜர். சரியாக நாளையிலிருந்து வருகிறேன் என்றார் ராம்நாத். சரி என்றார் மேனேஜர். வேலையை சரியாகவும் வேகமாகவும் செய்கிறார் அதுமட்டும் அல்ல. சகஊழியர்க்கும் உதவி செய்கிறார்.

கணினியை கையாளுவதில் திறமைசாலி. ஒவ்வொரு நாளும் தாமதமாகத்தான் வருகிறார். மேனேஜர் ஒருமாதம் சொல்லி பார்த்தார் கேட்கவில்லை. 15 நிமடம் தாமதமாக வந்தால் அரைநாள் விடுமுறை. இப்படி மாதத்தில் 10 நாள் விடுமுறை ஆகிறது. பலநாள் சம்பளம் இல்லாத அரைநாள் விடுமுறை. பலநாட்கள் மதியம் சாப்பிடுவதில்லை. சக ஊழியர் ஏன் சார் உங்கள் மனைவி சமைத்து தரமாட்டாளா?. இல்லை அவள் அம்மாவீட்டிற்கு போகியிருக்கிறார். என்பார். மற்றும் பல நாட்கள் வெறும் சாதம் ஊறுகாய் மட்டும் தான் இருக்கும். அப்பொழுது சக ஊழியர் யாராவது கேட்கும் போதும் ஏதேதோ காரணம் சொல்வார்.

இப்படி 6 மாதம் மேல் ஆகிவிட, சகஊழியர் தேவகி அம்மா கேட்பார், உங்கள் வீட்டில் சார் யார் இருக்கிறார்கள் என்று. நான் மனைவி, அம்மா, குழந்தை. ஏன்சார் அம்மாவும் உங்களுக்கு உதவி செய்யமாட்டார்களா? அப்பொழுதும் ஏதேதோ காரணம் சொல்வார். தினசரி 5.30 மணிக்கு புறப்பட்டுவிடுவார். ஒரு நாள் 5 மணிக்கே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

அன்றைய தினம் மாலையில் பேங்க் பூட்டுவதற்கு முன்னால் ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சார் ராம்நாத் சார் மட்டும் எவ்வளவு சொல்லியும் தாமதமாகத்தான் வருகிறார். ஏதோ காரணம் இருக்கும் என்றார்கள் தங்களுக்குள். ஒருமாதத்தில் மூன்றுநாள் தொடர்ந்து விடுமுறை கேரளா சுற்றுலா போவதற்கு திட்டமிடுகிறார்கள். ராம்நாத் சாரிடம் கேட்கிறார்கள். அவர் சார் என்னுடைய அம்மாவினுடைய 84 வது பிறந்தநாள். அதனால் வரமுடியாது சார் என்றார். சரி பரவாயில்லை என்று சொல்கிறார் மேனேஜர். சுற்றுலா முடிந்து. குற்றாலத்தில் குளித்து வருவதாக திட்டம்.

மூன்றாம் நாள் குற்றாலத்திற்கு வந்த உடன் தேவகி அம்மா மேனேஜர் சாரிடம்: சார் ராம்நாத் சார் வீடு இங்கு பக்கத்தில்தான் இருக்கும். நாம் அவர் வீட்டுக்கு போய்விட்டு போகலாம், என கூறிவிட்டு ராம்நாத்திற்கு போன் செய்து சார் எங்கே இருக்கிறீக என்று கேட்டார் மேனேஜர். சார் நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்றார். அப்படியானால் நாங்கள் வரும் வழியில், உங்கள் வீட்டிற்கு வந்து டீ குடித்து செல்கிறோம் என்றார். இதை ராம்நாத் எதிர்பார்க்கவில்லை. சார் நாங்கள் கோவிலுக்கு போயிருக்கிறோம். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றார்.
உடனே சரி இன்னொரு நாள் வருகிறோம் என்றார்.

தேவகி அம்மா, மேனேஜர் சார் இரண்டு மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை. அவர் வீட்டிற்கு போய்தான் பார்ப்போம். இந்த இரண்டு மணி நேரத்தை அவர் வீட்டுபக்கம் ஏதாவது கோவில் இருக்கிறதா என்று கூகிள் சர்ச் (Google search) பண்ணுவோம் என்று கூறி தேவகி அம்மா செல்லில் பார்த்துவிட்டு, சார் அவருடைய வீட்டு முகவரி பக்கத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அங்கு போய்விட்டு அவருடைய வீட்டிற்கு போகலாம் என புறப்பட்டு அந்த தெருநோக்கி போகிறார்கள். அப்பொழுது கையில் பையுடன் தெருவில் ஒருவர் போய் கொண்டிருக்கிறார். வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது. திரும்பி பார்த்தவுடன் ராம்நாத் சார் தான் கையில் பையுடன் சென்று கொண்டிருக்கிறார். அவரை பார்த்ததும் வண்டி நிற்கிறது. சார் என்று கூறி வண்டி டோர் திறக்கிறார். உடனே ராம்நாத் சார் இது தான் என் வீடு என்று காட்டுகிறார். உடனே எல்லோரும் இறங்கி வீட்டிற்குள் போகிறார்கள். வீடு அமைதியாக இருந்தது. குழந்தை எங்கே சார் என்றுன் கேட்கிறார். ஒருவித தயக்கத்துடன் அறையை காண்பிக்கிறார். நான்கு வயது குழந்தை, அறைக்குள் படுத்துக்கிடக்கிற ஒரு அம்மாவிற்கு வாயில் உணவு ஊட்டுகிறாள்.

இதற்கிடையில் மேனேஜர் சார் உங்க அம்மாவிற்கு 84 வயது என்றீர், ஆசிர்வாதம் வாங்குகிறேன் என்றார். உடனே இன்னொரு ரூம் காட்டுகிறார். அங்கேயும் ஒரு முதுமை பெண் படுத்துகிடக்கிறாள். அங்கே போகிறார்கள். அங்கே பார்க்கிற காட்சி எலும்பும் தோலுமாக முதுகில் புண்ணுடன். மேனேஜர் விசாரிக்கிறார். ராம்நாத் 4 வருடமாக அம்மாவிற்கு பக்கவாதம். இடது கை, கால் அசைக்கமுடியாது. படுத்த படுக்கையிலே தான் சிறுநீரும் மலமும் கழிக்கிறார். நான்தான் தற்பொழுது எல்லாம் கவனிக்கிறேன் என்றார். நேரம் ஆகிவிட்டது. புறப்படுகிறார்கள்.

மறுநாளும் வழக்கம் போல் தாமதமாக வருகிறார். இப்பொழுது யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. வந்த உடன் வேலைக்கு போகிறார். மனதில் நேற்று வீட்டில் யாரும் இல்லை என்று மேனேஜரிடம் கூறியது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. மதியம் வழக்கம் போல் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சக ஊழியர் தேவகி அம்மா, மனைவியை பற்றி விசாரிக்கிறார்கள். அன்பான மனைவி திருமண நாள் அன்றே அவர்களுடைய அம்மா இனி ராம்நாத் அம்மா தான் உனக்கு அம்மா மாமியார் என்று பார்க்க கூடாது. அந்த வீட்டில் எந்த கஷ்டம் இருந்தாலும் நீ அங்குதான் இருக்கணும் உன்னுடைய வீடு அதுதான் என்று கூறி ஆசிவழங்கி அனுப்பி வைத்தார்கள்.

வழக்கம் போல் ஆரம்பத்தில் சிறுசிறு சண்டைகள் நடக்கும், அம்மா எப்பொழுதும் கண்டிப்பாக இருப்பாள். எந்த பொருளை எடுத்தாலும் திருப்பி அதே இடத்தில் வைக்கணும், சுத்தமாக இருக்கணும். இது தான் அம்மா எதிர்பார்ப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி ரொம்ப பாசமாகிவிட்டாள். அம்மா மாதிரி சரியாக இருப்பாள். சொந்த மகள் கூட இப்படி கவனிக்க மாட்டாள். அந்த மாதிரி நன்றாக கவனிப்பாள்.

ஆரம்பத்தில் என் அம்மாவின் சிறுநீர் மலம் மற்றும் துணிகள் சுத்தம் செய்வது அம்பாவை குளிப்பாட்டி உணவு ஊட்டுவது இதை எல்லாம் சந்தோஷமாக கவனித்து வந்தாள். எட்டுமாதத்திற்கு முன்பு சொந்தகாரர் வீட்டிற்கு போய்விட்டு வரும் போது பின்னால் வந்த கார் இடித்து இடுப்பு எலும்பு முறிந்து விட்டது, ஆஸ்பத்திரியில் காண்பித்தோம், டாக்டர் ஒருவருடம் ஆகும் சரியாவதற்கு. அசையாமல் படுத்து இருந்தால் போதும் தானாக எலும்பு சேர்ந்து விடும் என்றார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் என் அம்மா,மனைவி குழந்தையை குளிப்பாட்டி ஆடை மாற்றுவது சமைப்பது குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது எல்லாம் நான்தான்.

ஆரம்பத்தில் எனக்கு கஷ்டமாக தோன்றவில்லை. இரண்டு பேரையும் நன்றாக கவனித்து வந்தேன். திடீரென்று என்னை குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு மாற்றிவிட்டார்கள். அந்த நேரத்தில் தொழிற்சங்க தலைவர் செயலாளரிடம் போய் அழாத குறையாக சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை.

ஏதோ காசு வாங்கிகொண்டு என்னை தென்காசிக்கு மாற்றிவிட்டார்கள். இதனால் வீட்டையும் கவனித்து அலுவலகத்துக்கு வந்து போவதில் கொஞ்சம் சிரமம். சில நேரம் வீட்டு வேலையில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் அந்த பஸ்ஸை பிடிக்கமுடியாது. அடுத்த BUS-க்காக காத்திருந்து வரவேண்டியிருக்கிறது. அதனால் தான் இன்னும் தாமதமாக வருகிறேன். வேண்டுமென்று நான் தாமதமாக வரவில்லை. காலை 4.30 மணிக்கு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு 10 மணிவரைக்கும் தொடர்ந்து வேலை சார். இதெல்லாம் எப்படிதான் செய்கிறீர்கள் என்று கேட்க நான் கடவுளிடம் கடைசிவரைக்கும் உடல் நலமும் மனவலிமையும் தரவேண்டும் என்று வேண்டுவதாக சொல்லிக்கொண்டே பாத்திரம் கழுவ சென்றுவிட்டார். தேவகி அம்மா, நான் என் கணவரையே இப்படி கவனித்திருக்கமாட்டேன் என்று மேனேஜரிடம் கூறினார். உடனே மேனேஜர் என்னுடைய அம்மா அப்பா ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். இவ்வளவு வசதி இருந்தும் கவனிக்க ஆள் இல்லாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளேனே கூறி தேவகி அம்மாவிடம் என வருத்தப்பட்டார்.

சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com

]]>
https://vskdtn.org/2021/06/12/dharman-kaaththa-thanayan/feed/ 4