தூத்துக்குடி – VSKDTN News https://vskdtn.org Fri, 23 Jul 2021 11:34:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 உப்பு சத்தியாகிரக தியாகிகள் நினைவு கல்வெட்டை புதுபிக்க வேண்டி இந்து முன்னணி வி.பி.ஜெயக்குமார் கோரிக்கை https://vskdtn.org/2021/07/23/uppu-sathyagraha-thiyakikal/ https://vskdtn.org/2021/07/23/uppu-sathyagraha-thiyakikal/#respond Fri, 23 Jul 2021 11:34:49 +0000 https://vskdtn.org/?p=7848 உப்பு சத்தியாகிரக தியாகிகள் நினைவு கல்வெட்டை மீண்டும் அமைக்க வேண்டும் என இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அரசுக்கு கோரிக்கை.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியில் 1942 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்திஜி அவர்களின் அழைப்பை ஏற்று உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் குலசேகரப்பட்டினம் உப்பளம் பகுதியில் அப்போது உதவி உப்பு ஆய்வாளராக இருந்த லோன் துரை என்ற வெள்ளைக்கார அதிகாரி, காசிநாதன் ராஜகோபால் உள்ளிட்ட 11 சுதந்திர போராட்ட வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குலசேகரப்பட்டினம் சதி வழக்கு என சொல்லப்படுகிறது.

இந்த வழக்கில் ராஜகோபால் என்பவருக்கு தூக்கு தண்டனையும் மற்றவர்களுக்கு வெவ்வேறு தண்டனையும் வழங்கப்படுகிறது. பின்னர் இந்தியா விடுதலை பெற்ற பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் தூக்குமேடை வரை சென்றதால் அவர் தூக்கு மேடை ராஜகோபால் என்று பின்னாளில் அழைக்கப்பட்டார். அந்த விடுதலை போராட்ட வீரர்கள் 11 நினைவாக குலசேகரப்பட்டினத்தில் பெருமாள் கோவில் எதிரில் அவர்களது பெயர் தாங்கிய கல்வெட்டு மற்றும் சிறிய மணிமண்டபம் இருந்தது. ஆனால் தற்போது அந்த மணி மண்டபத்தில் இருந்த கல்வெட்டுகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனைக்குரியது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அவமரியாதை ஆகும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் 75வது ஆண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடும் வேளையில் மீண்டும் அதே இடத்தில் அந்த குலசேகரப்பட்டினம் உப்பளம் போராட்டத்தில் பங்கேற்ற 11 பேரின் பெயர் தாங்கிய கல்வெட்டுக்களை அமைத்து, அவர்களுக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளார் வி.பி.ஜெயக்குமார் அவர்கள்.

]]>
https://vskdtn.org/2021/07/23/uppu-sathyagraha-thiyakikal/feed/ 0
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து செயல்படுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி அமைச்சர்களிடம் மனு… என்ன செய்யும் திமுக அரசு. https://vskdtn.org/2021/07/21/sterlite-factory-thodarnthu-seyalpaduthi/ https://vskdtn.org/2021/07/21/sterlite-factory-thodarnthu-seyalpaduthi/#respond Wed, 21 Jul 2021 10:21:14 +0000 https://vskdtn.org/?p=7786 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அமைச்சர்களிடம் மனு அளித்தனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.


தமிழக மக்கள் நலன் காக்க, தமிழக அரசு ஒத்துழைப்புடன், ஸ்டெர்லைட் ஆலை இதுவரை, 1,882.74 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது. இதன் வழியே, ஒப்பந்த தொழிலாளர்கள், 300 பேருக்கு வேலை கிடைத்து, அவர்களின் வாழ்வாதாரம் சற்று உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று, மூன்றாம் அலை வாயிலாக பரவ தயாராகி வருகிறது. தமிழக மக்களின் உயிர் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்டெர்லைட் ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து இயங்க, தாங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளார். தற்போது அந்த தொழிற்சங்க நிர்வாகிகளே அதனை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது திமுக தான் அரசியல் செய்வதற்காக ஆலையை மூடுமா? இல்லை ஆலையை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்குமா?

]]>
https://vskdtn.org/2021/07/21/sterlite-factory-thodarnthu-seyalpaduthi/feed/ 0
தன்னார்வ பணி செய்தவர்களை பாராட்டிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். https://vskdtn.org/2021/07/15/dhannavarkalai-paniyarriya-paaratiya/ https://vskdtn.org/2021/07/15/dhannavarkalai-paniyarriya-paaratiya/#respond Thu, 15 Jul 2021 10:37:07 +0000 https://vskdtn.org/?p=7622 குரோனா இரண்டாம் அலை காலத்தில் தூத்துக்குடி நகரில் களப்பணியாற்றிய அரசு சாரா தன்னார்வ அமைப்பான சேவாலயா அறக்கட்டளைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார்கள். சேவாலயா அறக்கட்டளை தலைவர் திரு. ராஜேந்திரன் மற்றும் செயலர் திரு.ராஜாகாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும் அறக்கட்டளை வேண்டுகோளின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 17 முதியோர் இல்லங்களில் உள்ள பெரியவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாததால் குரோனா தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் அவர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை ஏற்பாடு செய்து தடுப்பூசி செலுத்தப் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தார்.

]]>
https://vskdtn.org/2021/07/15/dhannavarkalai-paniyarriya-paaratiya/feed/ 0
வாஞ்சிநாதனுக்கு ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் அஞ்சலி. https://vskdtn.org/2021/06/17/vanjinathan-with-vanji-maniyachi-ninaivu/ https://vskdtn.org/2021/06/17/vanjinathan-with-vanji-maniyachi-ninaivu/#comments Thu, 17 Jun 2021 10:35:10 +0000 https://vskdtn.org/?p=6761

ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் வாஞ்சிநாதன் நினைவை போற்றி வாஞ்சி மணியாச்சி ரயில்நிலையத்தில் நினைவுஅஞ்சலி செலுத்தினர்.

ஆர்எஸ்எஸ் பேரியக்கம் பாரதம் முழுவதும் உள்ள தியாகிகளின் வீர வரலாற்றை சொல்லி நல்ல தேச பக்தர்களை உருவாக்கி வருகின்றது. மேலும் எந்த ஒரு தேசபக்தர்களின் வரலாறும் சமுதாயத்தில் மறுதலிக்காமல் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்று வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுகொன்று விட்டு தன்னையும் மடித்து கொண்ட தினம். அதன் நினைவாக ஸ்வயம்சேவகர்கள், ஆர்எஸ்எஸ் சார்பில்  தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

]]>
https://vskdtn.org/2021/06/17/vanjinathan-with-vanji-maniyachi-ninaivu/feed/ 1