இந்திய வெளியுறவு அமைச்சர் – இலங்கை நிதியமைச்சர் சந்திப்பு

0
187

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதால், பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. பெட்ரோல், டீசல் விற்பனை மையங்களில் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் சூழலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று, மார்ச் 30 வரை பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.அந்த வகையில், இன்று (மார்ச் 28) இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்த ஜெய்சங்கர், பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியா அளிக்கவுள்ள உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here