மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் – தேர்தல் ஆணையம்

0
204

சில மாதங்களில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சாரம் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்து வருகின்றன.தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முக்கியமாக, மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது.இந்நிலையில், நாடு முழுவதும் 47 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட 96 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here