ஆகாஷ் ஆயுத அதிகாரம் ஒப்படைப்பு

0
226

ஆகாஷ் அமைப்பை ஆயுத உருவாக்கிய ஆராய்ச்சி மேம்பாட்டு பாதுகாப்பு மற்றும் நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ), ஹைதராபாத்தில் உள்ள ஏவுகணை அமைப்புகளின் தர உறுதி முகமைக்கு (எம். எஸ்.க்யூ.ஏ.ஏ), இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் ஆகாஷ் ஆயுத அமைப்பின் சீல் செய்யப்பட்ட விவரக்குறிப்பு அடங்கிய அதிகாரப் பொறுப்பை ஒப்படைத்தது. இதில் ஆகாஷ் ஆயுத அமைப்பின் தொழில்நுட்பம், தர ஆவணம் மற்றும் முழுமையான செயல்பாடுகள் தொடர்பான விவரக்குறிப்புகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ, இந்திய ராணுவம் மற்றும் தொழில்துறைக்கு வாழ்த்துத் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல் பரிமாற்ற நிகழ்வு எதிர்கால முக்கிய சேவைகளின் தேவையை இது பூர்த்தி
செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முக்கிய நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்த மத்திய பாதுகாப்புத் துறையின் செயலரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், எதிர்கால ஏவுகணை திட்ட அமைப்புகளுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கி இருப்பதாகவும், இதன் மூலம் பல்வேறு மேம்பாட்டு செயல்பாடுகள் புதிய வடிவம் பெறும் என்றும் கூறினார். ஆகாஷ் ஏவுகணை என்பது அதிவேக வான் இலக்குகளை இடைமறித்து தாக்கும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை ஏவுகணையாகும். இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து செயல்படுத்தியுள்ள ரூ. 30,000 கோடி மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம், சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ளது. இது, நமது வான்வழி பாதுகாப்பை திறம்பட செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here