மணிப்பூரில் 25 பயங்கரவாதிகள் கைது

0
111

மணிப்பூரின் பாதுகாப்பு நிலவரத்தை பார்வையிடவும் ராணுவத்தினர் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு கார் ஒன்றை மடக்கிய போது, அதில் இருந்து நால்வர் இறங்கி தப்பி ஓடினர். அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டி பிடித்தனர். காரில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. கிழக்கு இம்பால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தவும், வீடுகளுக்கு தீ வைக்கவும் திட்டமிட்ட 25 பயங்கரவாதிகளை, ராணுவம் நேற்று கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், சீன கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையால் மிகப் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here