கத்தியைக்காட்டி ஒட்டு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் கைது

0
427

ஸ்ரீபெரும்புதுாரில் கத்தியைக்காட்டி ஒட்டு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன், ஸ்ரீபெரும்புதுார் நகர காங்., நிர்வாகி. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட, பூபாலன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.தி.மு.க., கூட்டணியில் காங்.,குக்கு மூன்று இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதால், பூபாலனுக்கு ‘சீட்’ கிடைக்கவில்லை. இதனால் பூபாலன், தன் மனைவி தனலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட வைத்துள்ளார். தனலட்சுமிக்கு தண்ணீர் குழாய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மனைவிக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டியதாக கூறி ஸ்ரீபெரும்புதுார் போலீசார், பூபாலனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here