என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

0
194
தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்பிருப்பதாக தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட சதி செய்ததாக கூறி அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், சோதனையின்போது சில பென்டிரைவ்கள், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here