2 கோடி இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை

0
322

“நம் நாட்டில், 15 – 18 வயதுக்கு உட்பட்ட, இரண்டு கோடி இளைஞர்களுக்கு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு, ‘டோஸ்’களும் போடப்பட்டுள்ளன,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார்.
நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
முதலில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி முதல், 15 – 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது.
15 – 18 வயதுக்கு உட்பட்ட இரண்டு கோடி பேருக்கு, இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
”உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நடவடிக்கையை, நம் நாட்டின் இளைஞர்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்,” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here