இந்திய கடற்படை ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

0
275

இந்திய கடற்படை வி.எல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனை செய்தது. இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகனை அழித்தது. சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here