”தமிழ்மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி; ஆர்.என்.ரவி!

0
59

தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமி மற்றும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி இணைந்து, ‘உலகளாவிய அரங்கில் இந்தியா’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கத்தை, சென்னை அரும்பாக்கத்தில் நேற்று நடத்தின.

விழாவில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:

தமிழ் மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி; அதை கற்றுக் கொண்டு இருக்கிறேன். தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது என் விருப்பம்; விரைவில் தமிழில் பேசுவேன்.

தமிழ் பட்டயப் படிப்பை துவங்குவதற்காக, கவுகாத்தி பல்கலையை தொடர்பு கொண்டுள்ளேன். அனைத்து மாநிலங்களுக்கும், தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டும். தமிழ் பத்திரிகைகளை வாசிக்கிறேன்; யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறேன்.

உலகின் வேகமாக வளரக்கூடிய பொருளாதார நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here