பாரா ஒலிம்பிக் போட்டி – பதக்கப்பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறிய பாரதம் !

0
21
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆண்களுக்கான வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங், போலந்து வீரர் லூகாஸ் சிசெக்கை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம், பாரா ஒலிம்பிக் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் ஹர்வீந்தர் சிங் படைத்துள்ளார். இதேபோல, ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 போட்டியில், இந்திய வீரர் தரம்பிர் 34 புள்ளி 92 மீட்டர் தூரம் வீசி தங்கத்தை கைபற்றினார்.
அதன்மூலம், 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதோடு, பதக்கப்பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 13-வதுஇடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here