சிவபெருமானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள் யாவை?

0
228

சிவபெருமானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள் யாவை? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.


சக்தி, பெருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன.

கீழே உயிர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

சிங்கம் – திருநல்லூர்.

யானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி.

காளை – திருவையாறு.

பசு – ஆவூர், செய்யாறு, ஆவடுதுறை, கரூர், பட்டீஸ்வரம்.

குதிரை – சீயாத்தமங்கை.

ஆடு – திருவாடானை.

பன்றி – சிவபுரம்.

கழுதை – கரவீரம்.

குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்.

முயல் – திருப்பாதிரிப் புலியூர்.

நாரை – நாரையூர், மதுரை.

கரிக்குருவி – மதுரை, வலிவலம்.

மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்.

கருடன் (ஜடாயு) – வைத்தீஸ்வரன், சிறுகுடி.

நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்.

வண்டு – திருசைலம், திருண்டுறை, வாழ்கொளிபுத்தூர்.

தேனீ – நன்னிலம்.

ஆமை – திருமணஞ்சேரி.

எறும்பு – திருவெறும்பூர்.

பாம்பு – காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம்.

சிலந்தி – ஆனைக்கா.

எலி – திருமறைக்காடு.

ஈ – திருஈங்கோய் மலை.

ஆகவே ஓர் அறிவு முதல் ஆறு அறிவு பெற்றவர்கள் வரை சிவப்பரம்பொருளை வணங்கி பேறு பெற்றிருக்கிறார்கள்.

திருச்சிற்றம்பலம்.

தில்லைக்கரசி
kvthillai@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here