விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றன.

0
431

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக நாகர்கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், கவிஞர் Dr. சுதே கண்ணன் ஆசிரியர் ஆனந்தம் மாத இதழ் மற்றும் குமரி டிவி, ஸ்ரீ I அருள் கண்ணன்  நிருபர் பாலிமர் டிவி , ஸ்ரீ M. ஜெயபோஸ் கட்டுரையாளர் & எழுத்தாளர் ஸ்ரீ N. சுவாமிநாதன் பத்திரிகை எழுத்தாளர் ஹிந்து காமதேனு.  ஸ்ரீ M.N ஹரிஷ் YouTuber ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் . ஆல் இந்தியா ரேடியோ நாகர்கோயில் ஸ்ரீ மங்காவிளை D. ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.   அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் ஸ்ரீ Dr. S. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்  ஆர்எஸ்எஸ் தென்பாரத சேவை பொறுப்பாளர் ஸ்ரீ பத்மகுமார் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து “விஜயபாரதம்” தீபாவளி மலர்  வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில்  தென்பாரத ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ  ஸ்ரீ ராம் ஜி, தென்தமிழக ஊடகத்துறை  பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here