கேடுகெட்ட விடியல் ஆட்சியில் அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் அவதி.

0
358

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 வகுப்பில் வணிகவியல் பிரிவில் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப்பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறு பாடங்கள் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வணிகவியல் பிரிவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மூன்று பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீதமுள்ள மூன்று பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவரை எந்தவிதமான வகுப்புகளும் நடத்தப்படவில்லை. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.மழையூர் அரசுப் பள்ளி மாணவர்கள் அளித்த கோரிக்கை மனுவின் மாவட்ட கலெக்டர் கவிதாராமு உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தியை அழைத்து இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here