உத்தரகண்ட் சட்டசபைக்கு முதல் பெண் சபாநாயகர்

0
450

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. சபாநாயகருக்கான தேர்தல் நேற்று நடந்தது. பா.ஜ., சார்பில் ரிது கந்துாரி, வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை, ரிது கந்துாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தற்காலிக சபாநாயகர் பன்ஷிதர் பாகத் அறிவித்தார்.உத்தரகண்ட் சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றுள்ள ரிது, கோட்வார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here