விமான நிலையத்தில் சுயஉதவிக் குழு மையம்

0
371

சுயஉதவிக் குழுக்களை வலுப்படுத்த மத்திய அரசு உருவாக்கிய பல அம்ச உத்திகள் அவர்களது பொருளாதார நலனில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக திறன் பயிற்சி பெற்ற கைவினைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு உருவாக்கியுள்ள அவ்சார் (AVSAR) திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலையத்தில், சுயஉதவிக் குழுவினரால் நடத்தப்படும் விற்பனை மையம் ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று அடிப்படையில், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 100 முதல் 200 சதுர அடி இடம் ஒதுக்கப்பட உள்ளது. எனவே இங்கு விற்பனை அமைக்க விரும்பும் சுயஉதவிக் குழுவினர் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் இணையதளமான https://www.aai.aero/en/node/add/shg-user-detail வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சென்னை விமான நிலைய மக்கள் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here