ஆம்பூர் அருகே வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் சிவலிங்கம்

0
173

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரகோத்துமன், 45. விவசாயி. இவர் அதே பகுதியில் வீடு கட்டுவதற்காக இன்று மாலை 5:00 மணிக்கு ஆட்களை வைத்து பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தார். அப்போது கல் சிவலிங்கள் சிலை ஒன்று பள்ளத்தில் இருந்தது தெரியவந்தது.சிவலிங்கத்தை  அங்குள்ள மரத்தடியில் வைத்தனர். தகவல் அறிந்த மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here