காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

0
307

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடந்த மோதலில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் யூசூப் கண்ட்ரோ சுட்டு கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்களை சுட்டு கொன்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here