ஆதிசங்கராச்சார்யார்

0
235

முப்பததிரண்டேவயதிற்குள்  பாரதத்தை  மும்முறை வலம் வந்து, சீடர்கள் பலரை உருவாக்கி, கவியாக பலநூல்கள் படைத்து, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை போன்ற மகாகாவியங்களுக்கு விளக்க உரைஎழுதி, பலநூற்றாண்டுகள் கடந்து விட்டபின்னரும் தலைசிறந்த துறவியாக, சிறந்த ஒருங்கிணைப்பாளராக, ஒப்பற்ற ஞானகுருவாக போற்றப்படுகின்ற புண்ணிய புருக்ஷர்ஶ்ரீ ஆதிசங்கரர்.சங்கரரின் அவதாரம்மிகவும் தேவையான காலகட்டத்தில் நிகழ்ந்தது. மக்கள் அறியாமை என்னும் இருளில் மூழ்கி, வேதநெறியிலிருந்து விலகி, புதுப்புது தெய்வங்களைகண்டுபிடித்து  கொண்டாடிவந்தனர். இவர்காலத்தில் பாரதம் முழுவதும் 72 சமயங்கள் இருந்தன. அதனை மீட்க அவர், பயங்கரமான வழிபாடுகளையும்,  இந்திரியவேகத்தையும் மக்கள்மனதிலிருந்து அகற்றி, இறைவனை, ஈசன், அம்பிகை, நாராயணன், விநாயகர், முருகன், ஆதித்யன் முதலான ஆறுவிதசாத்வீக (சண்மத) வழிபாட்டு முறைகளை கொண்டு வணங்கும் முறையைவகுத்தார்.கேரளாவில்  திருச்சூருக்குத் தென்கிழக்கே 32 மைல் தொலை விலுள்ளகாலடி என்னும் கிராமத்தில் சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற அந்தணதம் பதியினருக்கு, சிவகுருவின் கனவில் ஈசன் உரைத்ததுபோல், குறைந்த ஆயுளுடன் வைகாசிவளர்பிறை பஞ்சமியில் சங்கரர்பிறந்தார். சங்கரர் மூன்றுவயதிலேயே அனைத்துசாஸ் திரங்களையும் படித்துதேர்ந்தார். நான்குவயதிலே யேதந்தையை இழந்த அவர், கல்வி பயிலகுருகுலத்தில் சேர்க்கப்பட்டார். தன்குருவின் தேவைகளை குறிப்பறிந்து நிறைவேற்றினார். தினமும் பிக்ஷயில் சேர்த்த பொருளை குருவிடம் சமர்பிப்பார்.ஒருநாள்  பிக்ஷக்கு சென்ற  இடத்தில், பரமஏழைப்பெண், அந்தஏழ்மைநிலையிலும் தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையே எனவருந்தினாள். வீட்டில் ஒரேயொரு நெல்லிக்கனி இருப்பதைக்கண்டும கிழ்ச்சியுடன் அதை சங்கரருக்கு அளித்தாள். இதனை கண்டசங்கரர் அப்பெண்ணின் வறுமையைபோக்க எண்ணினார். மஹாலக்ஷ்மியை நினைத்துதுதிக்க ஆரம்பித்தார். மஹாலஷ்மி தங்கநெல்லிக்கனியை மழையாக பொழிந்தாள். இந்த ஸ்துதி ‘கனகதாராஸ்தோத்திரம்’ என அழைக்கப்படுகிறதுஆதிசங்கரர் முறைப்படி கோவிந்த பகவத்பாதரிடம் சன்னியாசம் பெறவிரும்பி, குருவைத்தேடி நர்மதாநதிக்கரையை அடைந்தார். நர்மதை பெருவெள்ளமாகமிகுந்த சீற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அவர்தன் அபூர்வசக்தியால் நதியின்சீற்றத்தை அடக்கி, மக்கள் உபயோகிக்கும்படி செய்தார். இப்படி சிறுவயதிலேயே பலபல அற்புதங்களை  நிகழ்த்தினார்.நர்மதாநதிக்கரையின் குகையிலிருந்த  கோவிந்தபகவத் பாதரிடம் துறவறம் ஏற்றுசீடரானார். குருகோவிந்தர் அத்வைத சித்தாந்தத்தை சங்கரருக்கு உபதேசித்தார்.   உலகெங்கும் அத்வை தசித்தாந்தத்தை பரப்பசங்கரருக்கு ஆணையிட்டார்.முதலில் காசிக்குச் சென்று அத்வைதசித்தாந்தத்தை பிரசாரம் செய்தார். பலர் இவரின் புலமையை கண்டு ஆதிசங்கரரின் சீடரானார்.சங்கரர் ஒருமுறை கங்கை கரையில் வயதான ஒருவர் ‘டுக்ருஞ் கரணே’ என இலக்கணத்தை படித்துக்கொண்டிருப்பதை பார்த்து, ‘பஜகோவிந்தம்’ எனத் தொடங்கும் இந்தபிரசித்தி பெற்றபாடலை சங்கரர்பாடியதாக கூறப்படுகிறது. இந்தநூல் உலகத்தின் நிலையற்ற தன்மையைபற்றியும், குருவினிடத்திலும், கடவுளிடத்திலும் பக்தியை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. கடவுளை உன்னிடத்தில்தேடு, கடவுளின்தன்மையைஅறிந்துகொள்,கடவுளைவழிபடு, கடவுளிடத்தில் அன்புசெய் என்பதாக இந்நூல் அமைந்துள்ளது. ‘மரணம் நெருங்கிவரும் தருவாயில் இலக்கணமா  உன்னைகாப்பாற்றபோகிறது’ என்பதாக ஆரம்பிக்கிறது.இவ்வாறாக பலபக்திநூல்களை இவர்  இயற்றியுள்ளார்.  காட்டில் வசித்தவேடன் கண்ணப்பர்தலை சிறந்தபக்தர்களில் ஒருவன் எனசிவானந்தல கரியில் ஆதிசங்கரர் பக்தியின்தன்மையைகூறும் பொழுது ஓரிடத்தில், (ஸ்லோகம் #63) குறிப்பிடுகிறார்.தன்அன்னை ஆர்யாம்பாளின் ஆயுள்முடியும் தருணத்தை உணர்ந்த சங்கரர், அன்னைக்கு கொடுத்தவாக்குறுதியின்படி, காலடி சென்று அன்னைக்காக ‘மாத்ருகாபஞ்சகம்’ பாடினார். தாயின்வயிற்றில் பிள்ளைகருவாகி, பிறந்து, வளரும் எல்லாநிலைகளிலும்,  தாயின்தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் எடுத்துக்கூறி தாயின் மேன்மையை இந்தநூல் மூலம் உலகறியச்செய்தார்.கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்துலிங்கங்களை பசுபதிநாத், பூரி, சிருங்கேரி, காஞ்சி, காசி ஆகிய ஐந்துதிருத்தலங்களுக்கு அளித்தார். சௌந்தர்யலஹரி, சுப்ரமண்யபுஜங்கம் முதலிய அரும்பெரும் பொக்கிஷங்களை நமக்கு கிடைக்கச்செய்தார்.‘க்வாண்டம்பிஸிக்ஸ்’ இன்று அறிந்திருப்பவை அனைத்துமே ஆதிசங்கரரின் அத்வைத்தத்துவத்தின் ஒருபகுதியே. ’பிரஹ்மம்சத்யம் ஆதிசங்கரர்:  இந்த உலகம் ஒருமாயத் தோற்றம்.(ஜகத்மித்யா)க்வாண்டம்பிஸிக்ஸ்:  நாம்பார்க்கும் மற்றும் உணரும் உலகம் உண்மையல்ல, மனதினால் உருவாக்கப்பட்ட வெறும் 3D உருவங்களே.II ஆதிசங்கரர்: (ப்ரஹ்மசத்ய) ப்ருஹ்மமே இறுதியான உண்மைக்வாண்டம்பிஸிக்ஸ்:(கான்சியஸ்)பிரக்ஞையே உண்மைIII ஆதிசங்கரர்: (ஜீவாப்ரஹ்மைவநாபர) பிரம்மாண்டம் என்பது உருவாக்கப்பட்டு, பரப்பிரம்மத்தில் கரைந்துபோனது. ஜீவாத்மாபரப்பிரம்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனேதவிரவேறல்ல. அதுபிரம்மத்துடன்சேர்தல்வேண்டும், அதுவேமோட்சம்.க்வாண்டம்பிஸிக்ஸ்: அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்துகிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்களாயின. சிலகாலம் கழித்துப்ரஞையுடன் ஒன்றிப்போயின. ஒவ்வொருவரும் பிரக்ஞையின் ஒருபகுதியாக இருந்துபிரிக்கப்பட்டனர். பின்னர்பிரக்ஞையுடன் இணையவேவேண்டும். ஒருவன்பிரக்ஞையை உணர்ந்துவிட்டால் அப்போதுதேசம், காலம், மனம் எதுவுமேயல்லை.மனத்தினாலே யேஜீவன் தன்னை உண்மை யெனநம்புகிறான். புலன்களால்ப்ரஹ்மத்தை உணர முடியாது ஏனெனில் அவை ஒரு எல்லைக்கு உட்பட்டவை.பேனாமுனையால் மட்டும்கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்ட போரினைவெல்ல முடியாது என்பதை உணர்ந்துமக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டார். சுயநலமில்லாததுறவி, பாரததேசத்தின் அருமை, பெருமைகளை உணரவைத்து அதற்கேற்றார் போல்வாழும் வாழ்வினை போதித்தார். இந்த செயல்திட்டம் நிறைவேறபாரத மெங்கும்மடங்களையும், கோவில்களையும், கல்விநிலையங்களையும்,அதற்காகசிலசட்டவழிமுறைகளையும்ஏற்படுத்தினார்.ஆதிசங்கரர் அவதாரத்துக்கு முன்வைதிகமதம் ஆட்டம் கண்டபோது, மதத்தில் நம்பிக்கைபோனால், அந்தமதப்பண்டிகைகளையார் கொண்டாடுவார்கள். வேததர்மத்துக்கு ஆபத்து வந்தபோது, அம்மதப்பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்துவந்துவிட்டது. அப்போது ஶ்ரீசங்கரஜயந்தி நிகழ்ந்ததால்தான், அந்தபுண்ணியகாலங் களெல்லாம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன. ஶ்ரீசங்கர ஜெயந்தி நிகழ்ந்திராவிட்டால், ஶ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்ரி, நவராத்ரி போன்ற புண்ணியதினங்கள் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம் என்கிறார் காஞ்சிப் பெரியவர்.இவ்வாண்டு மே  6 2022 (வெள்ளிக்கிழமை) அன்றுநாம் அனைவரும் விமர்சையாக சங்கரஜெயந்தியை கொண்டாடுவோம்.

                                                                                            – திருமதி. ராஜேஸ்வரி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here