உதய்பூர் படுகொலை: கைதான இஸ்லாமிய பயங்கரவாதிக்கு பாகிஸ்தான் தொடர்பு ; டிஜிபி தகவல்

0
172

தையல்காரர் கன்ஹையா லாலை படுகொலை செய்த கொலையாளிகளில் ஒருவரான கவுஸ் முகமது 2014 முதல் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு சென்று வருகிறார் என்றும் கடந்த 2-3 ஆண்டுகளாக அவர் போன் செய்து வந்தார் என்றும் ராஜஸ்தான் உள்துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய காவல்துறை இயக்குநர் எம்.எல்.லாதர், கராச்சியில் உள்ள தாவத்-இ-இஸ்லாமி அலுவலகத்தைப் பார்வையிடுவதற்காக கவுஸ் சென்றதாகவும், அது 1981 இல் முஹம்மது இலியாஸ் அட்டர் காத்ரி என்கிற பாகிஸ்தானில் நிறுவப்பட்ட சுன்னி இஸ்லாமிய மதமாற்றக் குழு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள 8 முதல் 10 தொலைபேசி எண்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்கள் செய்த குற்றம் சாமானியர் செய்த குற்றமல்ல. எனவே என்ஐஏ வழக்குப்பதிவு செய்து அவர்களின் நெட்வொர்க் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here