குப்பையில் தேசியக்கொடி-விசாரணை துவக்கம்

0
238

கேரளா,கொச்சி : கேரளாவில் தேசியக் கொடி மற்றும் கடலோர காவல் படையின் கொடி ஆகியவை குப்பையில் கிடந்தது குறித்து விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளத்திலிருக்கும் இரும்பனத்தில் உள்ள சுடுகாட்டுக்கு அருகில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடந்தன. அதில், நம் தேசியக் கொடி மற்றும் கடலோர காவல் படையின் கொடி ஆகியவையும் இருந்தன. அந்த வழியாக சென்ற முன்னாள் ராணுவ வீரர் அந்தக் கொடியை எடுத்து அதற்குரிய மரியாதையை செலுத்தி உள்ளூர் போலீசிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து, எர்ணாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளும் விசாரணையை துவக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here