7 உலக நாடுகளில் உலகின் குருவாக மாறும் பாரதம்

0
375

IITகள் நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனங்களான உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதன் வளாகங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், உலக அளவில் செல்லத் தயாராகி வருகிறது. மத்திய அரசு மோடி தலைமையின் கீழ், ஏழு உலக நாடுகளில் இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் பெயரிடப்படும் இந்திய நிறுவனங்கள் வர இருப்பதற்கு மத்திய குழு தற்போது முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியைத் தொடரக்கூடிய உலகளாவிய வளாகங்களைக் கொண்டிருக்கும்.
IITகளுக்கான உலகளாவிய வளாகங்களை அமைப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த, மத்திய அரசு 17 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. IIT கவுன்சில் நிலைக்குழு தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு, IITகளின் வெளிநாட்டு வளாகங்களை அமைப்பதற்கான பரிந்துரையை பகிர்ந்து கொண்டது. மேலும் இந்த குழு இதுவரை வெளிநாட்டில் தங்களுடைய வளாகங்களை திறப்பதற்கு எத்தகைய நாடுகள் ஒத்துழைப்பு தருகின்றன என்பதற்கான அங்கிருக்கும் இந்திய தூதரங்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.
ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளில் IIT இந்திய வளாகங்களை வைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அந்த குழு தற்போது பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவின் IIT வளாகங்களை திறப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here