குஜராத் கடற்கரையில் ரூ.200 கோடி மதிப்பு போதை பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்த கடலோர காவல்படை

0
281

கட்ச்: இந்திய கடலோர காவல்படைமற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ போதை பொருட்களுடன் பாக்., படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய கடலோர காவல்படையின் அதிவேக படகுகள், ஜகாவு கடற்கரையில் இருந்து 33 நாட்டிகல் மைல் தொலைவில் பாகிஸ்தான் படகை பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். படகில் இருந்த பாகிஸ்தான் குழுவினர் விசாரணைக்காக ஜகாவு அழைத்து வரப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here