சென்னை விமான நிலையத்தில் நவராத்திரி கொலு

0
339

புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும்.இந்த நாட்களில், கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து, தினமும் பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதன்படி, நேற்று முன்தினம் நவராத்திரி கொலு வழிபாடு துவங்கியது.இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை முனையத்தில், ஐந்து படிகளுடன் கூடிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.இந்த கொலுவுக்கு பின், மிகப் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விமானப் பயணியர் இந்த கொலுவை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here