சிறுதானியங்கள் மாநாடு

0
68

டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ‘சிறுதானியங்கள்
திறன் ஊட்டச்சத்து உணவு’ என்ற மாநாட்டில் மத்திய அமைச்சர்
பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கிறார். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) வாயிலாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், சிறுதானியங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023’ நிகழ்வின் முன்னோட்டமாக இம்மாநாடு அமையும். இதில், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பெருவாரியாக கலந்து கொள்வார்கள். பாரத சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் கண்காட்சியும், வர்த்தகர்கள் அளவிலான கூட்டமும் நடைபெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here