பீஷ்மாஷ்டமி

0
156

“தன்னுடைய உடலாலும், மனதாலும் செய்வது மட்டுமே பாவம் அல்ல. தன் எதிரில் நடைபெறும் குற்றத்தை, தனக்கு அதிகாரம் இருந்தும், ஆற்றல் இருந்தும் தடுக்காமல் இருப்பதும் பாவம்தான்! அதற்கான தண்டனையைத்தான் உன்னுடைய உள்ளம் அடையும் வேதனையால் பெற்றுக்கொண்டிருக் கிறாய்” என்றார் பத்தாம் நாள் யுத்தத்தில் அம்புகளால் சரிந்து மரணத்தை விரும்பியும் அடையாத பீஷ்மரைப்பார்த்து வேத வ்யாசர்.

இப்போது பீஷ்மருக்கு புரிந்தது. துரியோதன சபையில், திரவுபதி அவமதிக்கப்பட்டபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் இதற்கு காரணம்! என்று பின்னர் இதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரிடமே கேட்க..

“ஒருவர் தான் செய்தது மகா பாவம் எது? என்று உணர்ந்தி வருந்தினாலே அவர்களது பாவம் அகன்றுவிடுவதாக வேதம் சொல்கிறது! நீயும் வருந்தியவுடன் உன்னுடைய பாவமும் நீங்கிவிட்டது. இருப்பினும் திரவுபதி, துரியோதன சபையில் தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காதது போல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் தட்டிக்கேட்காத உன்னுடைய வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்” என்று கூறிய வியாசர், அதில் இருந்து விடுபடுவதற்காக வழியைக் கூறினார்.

“பீஷ்மா.. உன்னுடைய பாவங்களை பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கே உண்டு. சூரியனுக்கு உகந்தது எருக்கம் இலை. அதற்கு ‘அர்க்கபத்ரம்’ என்று பெயர். ‘அர்க்கம்’ என்பதற்கு ‘சூரியன்’ என்றும் பொருள் உண்டு. அந்த இலைகளைக் கொண்டு உன்னு டைய அங்கங்களை அலங்கரிக்கப்போ கிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று கூறிய வியாசர், அதன்படியே செய்தார்.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பீஷ்மாஷ்டமி தினமாகும். பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார் என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அதுபற்றி வியாசரிடம் கேட்கவும் செய்தான்.

அதற்கு வியாசர், “தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வருஅதன்படிம் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும், அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here