இந்தியா உறுதியாக தனது தேசியக் கொடியை கீழே இழுப்பதை ஏற்காது- ஜெய்சங்கர்

0
99

தார்வாட் (கர்நாடகா), ஏப். 2 வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை, இந்தியா தனது தேசியக் கொடியை யாரோ கீழே இழுப்பதைப் பொறுத்துக்கொள்ளும் நாடு அல்ல; அது “மிகவும் உறுதியாக” இருப்பதுடன் “மிகவும் பொறுப்பாகவும்” இருக்கிறது என்று கூறினார்.
கடந்த மாதம் லண்டனில் பிரிவினைவாத காலிஸ்தானி கொடிகளை ஏந்தியவாறும், காலிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியும் போராட்டக்காரர்கள் குழு ஒன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் மீது பறக்கவிடப்பட்ட மூவர்ணக்கொடியை கீழே இழுத்த சம்பவத்தை குறிப்பிட்ட அவர், கட்டிடத்தின் மீது உடனடியாக அதைவிட பெரிய கொடி ஏற்றப்பட்டது காலிஸ்தானியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் விடப்பட்ட செய்தியாகும் என்று கூறினார்.
“கடந்த சில நாட்களாக லண்டனில் நடந்த சில சம்பவங்கள், கனடாவில், ஆஸ்திரேலியா மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த சில சம்பவங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்… இது யாரோ ஒருவர் தனது தேசியக் கொடியை கீழே இழுப்பதை ஏற்றுக்கொள்ளும் இந்தியா அல்ல” என்று ஜெய்சங்கர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here