ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்

0
93

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு இன்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது. காலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் செப்பு தேரில் எழுந்தருளினர். அங்கு அனிருத் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் காஸை 7:20 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் செப்பு தேரினை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர் . கோயில் யானை முன் செல்ல நான்கு ரத வீதிகளிலும் தேர் சுற்றி வந்தது. இன்று இரவு 7 மணிக்கு ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here