388 இந்தியர்களை மீட்ட பிரான்ஸ் ராணுவம்

0
183

சூடானில் சிக்கியிருந்த 388 நபர்களை பிரான்ஸ் நாட்டு தூதரகம் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது.ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் – புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது. சூடானில் வசிக்கும் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சூடானில் சிக்கியிருந்த 388 நபர்களை பிரான்ஸ் நாட்டு தூதரகம் மீட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை சார்ந்தவர்களை ராணுவ விமானம் மூலம் மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here