சுதந்திரப் போராட்டத்தில் தன்னுடைய இளமை முதிர்ச்சி அடையும் முன்பே பல பாலர்களும் கிஷோர்களும் தங்களுடைமைகள் அனைத்தும் தேசத்திற்கு அர்ப்பணித்து இருக்கிறார்கள். அம்மாதிரிபட்ட புரட்சி பலிதானிகளின் கதைகளை கேட்டு அந்த கதைகளை நாம் கூறாமல் இருந்தால் சுதந்திரப் போராட்ட வரலாறு முழுமை அடையாது. இந்தக் கதையை நாம் அறிந்து கொள்வதற்காக இது போன்ற வீர கதைகளின் தொகுப்புகளை, அதில் உள்ள நிகழ்ச்சிகளை நாம் கூற வேண்டும். இந்த நிகழ்வானது மற்ற மாணவ புரட்சியாளர்களுக்கு ஒரு உந்துதலாக அமையும். இது நாம் கூற வேண்டிய அவசியம் என்னவென்றால் சமூகத்திற்காக தங்களை தாங்களே பலிதானம் செய்து கொண்டவர்கள் தருண வயது அடைந்தவுடன் பலிதான மைதானத்தில் கேட்ட அறை கூவலை செவிமடுத்து வீர விளையாட்டுக்கு முன்னோக்கிச் சென்றனர். அந்த வீரர்களின் வயது நாம் பிரித்துப் பார்க்க முடியாது துப்பாக்கி குண்டுகள் வயதுகளை கேட்டு அதன்பின் நெஞ்சை துளைப்பதில்லை.