ஆகஸ்ட் 15 வீடுகள் தோறும் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

0
103

நாட்டின் 75 ஆவது சுதந்திர நாள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75 ஆவது சதந்திர நாளை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், சுதந்திர நாளை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாட்டு மக்கள் ஊங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here