நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி கேந்திர திட்டம்

0
175

ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி கேந்திரங்களை அமைக்கும். இத்திட்டம் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த திட்டத்திற்காக 50 இரயில் நிலையங்களின் பட்டியலை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இதன் மூலம் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் ஜனௌஷதி தயாரிப்புகளை எளிதாகப் பெற முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் தொழில்முனைவோருக்கு ஜனௌஷதி கேந்திரங்களை திறப்பதற்கான வழிகளையும் உருவாக்கும். ரயில்வே கோட்டங்களால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் உரிமம் பெற்றவர்களால் இந்த கேந்திரங்கள் அமைக்கப்பட்டு இயக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here