75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஜனாதிபதி முர்மு வழங்கினார்

0
125

புதுடில்லி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை நாடு முழுதும் தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. நாடு முழுதும் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த, 12 ஆசிரியர்கள் என மொத்தம், 75 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுடில்லியில் நேற்று விருது வழங்கி கவுரவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here