தமிழகத்தில் இஸ்ரோவின் புதிய ஏவுதளம்

0
96

ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள செயற்கை கோள்கள் ஏவுதளத்தைப் போன்றதொரு ஏவுதளம் தமிழகத்தில் அமையவுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது (திருச்செந்தூர் அருகில் உள்ளது) ஏவுதளம் அமைத்திட 2,400 ஏக்கர் நிலம் தேவைப் படுகிறது. இதுவரை 2,000 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள நிலமும் இவ்வருட நவம்பருக்குள் கையகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ₹ 700 கோடி. இங்கு ஏவுதளம் அமைவதனால் ஶ்ரீஹரி கோட்டாவின் பணிச்சுமை குறைந்திடும் என்று இஸ்ரோ முன்னாள் சேர்மன் சிவன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்தி :-ஶ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளம் தொடங்கு வதற்கு முன்பு இதே குலசேகரப்பட்டினத்தைத்தான் தேர்வு செய்தனர். அப்போதைய கழக அமைச்சர் ஒருவர் கேட்ட லஞ்சத் தொகையால் இடம் மாறி ஶ்ரீஹரிகோட்டா விற்குச் சென்று விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here