ஜி -20 இந்தியாவுக்கு வெற்றி : இந்திய-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மாநாடில்  அமெரிக்க தூதர் பாராட்டு

0
177

டில்லியில் 13வது இந்திய-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேசியது: இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுடனான உறவில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. நாங்கள் இரு நாடுகளின் மீதும் அக்கறை கொள்கிறோம். இருவருடனும் எங்கள் உறவு உறுதியானது. இருநாட்டு இறையாண்மை, பாதுகாப்பு என்பது முக்கியமானது. இதனை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இதுவரை இல்லாத வகையில், ஜி20யை வெற்றிகரமாக நடத்தி இந்தியா நிரூபித்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். அமெரிக்கா 25 சதவீத வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் இருந்து மட்டும் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் 1 மில்லியன் விசா விண்ணப்பத்தை அடைய உள்ளோம். இது ஒரு புத்தம் புதிய சாதனையாகவும் இருக்கும். என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here