சிக்கிமில் திடீர் வெள்ளம்

0
138

சிக்கிமில் திடீர் வெள்ளம்; 23 ராணுவ வீரர்கள் காணவில்லை காங்டாக், அக்டோபர் 4 : வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென மேகம் வெடித்ததால், லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் புதன்கிழமை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் 23 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். முகாம்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவரங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://x.com/prodefgau/status/1709396653059551741?s=20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here