பிரச்னைக்கு வன்முறை தீர்வாகாது – பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங்

0
78

மிசோரம் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.
மிசோரத்தில் தேர்தல் பிரசாரத்தில் : கடந்த ஒன்பது ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். நான் வட கிழக்கு மாநிலங்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் மேற்கொண்டு வருகிறேன். இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. புதிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பொதுமக்கள் விரும்புகிறார்கள் . என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here