வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும் – கனடாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

0
53

ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்தியா உள்ளிட்ட ஐ.நா உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. அதில் இந்திய தூதர் முகமது ஹூசைன் கலந்து கொண்டார். அப்போது கனடாவில் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும். வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு அரசியலமைப்பை பலப்படுத்த வேண்டும். என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here