ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விண்ணை பிளந்த ‘கோவிந்தா..கோவிந்தா’ கோஷம்

0
1602

திருச்சி , ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணியளவில் டிசம்பர் 23ம் தேதி)வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் பக்தர்களால் போற்றப்படுகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணிக்கு விமர்சையாக நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here