சீதா பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் சீர்வரிசை வருகை

0
82

அயோத்யா ஶ்ரீ ராம் ஜன்ம பூமிக்கு சீதாதேவி பிறந்த நேபாளத்தில் இருந்து 1,100 பெட்டிகளில் திருமண சீர்வரிசைப் பொருட்கள் வந்துள்ளன.
பெட்டிகளில் ஏராளமான தங்க & வெள்ளி நகைகள், உயர்தரமான ஆடைகள், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள், உலர் பழங்கள் மற்றும் அரிசி ஆகியவை நேபாளத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
நேபாளத்தில் பாயும் 16 நதிகளிலிருந்து புனித நீரும் அனுப்பி வைத்துள்ளனர். அவைகள் அயோத்யாவை வந்தடைந்துள்ளன.
பாரதப் பாரம்பரிய வழக்கத்தில் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண்ணிற்கு கொடுத்து அனுப்பும் சீர்வரிசையைப் போன்றது இது என நேபாள ராம பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here