ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

0
482

திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்றார். பஞசகரையில் இருந்து கோவிலுக்கு சென்ற வழியில் திரண்டிருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ராமானுஜர், சக்கர்த்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here