கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை

0
84

அரபிக்கடலில், அல் நயீமி என்ற மீன்பிடி கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதமேந்திய சோமாலிய கொள்ளையர், மீன்பிடி கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்த 19 பேரையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். கப்பலில் இருந்தவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் கடற்படையின், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பலையும், 19 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றியது.
கடந்த 28ம் தேதி இரவு, சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில், ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலையும், 17 பேரையும், சோமாலியா கொள்ளையர் கடத்தினர். இந்த கடத்தல் முயற்சியையும், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here