அரங்கசாமிநாயக்கர் சான்றோர்தினம்

0
2485

அரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். இவர் புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு வட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தார்.பிரெஞ்சிந்தியா என அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர், தமிழறிஞர். ‘பிரெஞ்சிந்திய காந்தி’ என்று அழைக்கப்பட்டவர்.திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்க ஈடுபாட்டால் தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர்.அரங்கசாமி நாயக்கரும் அவர்தம் நண்பர்களும் இணைந்து பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிக்கை என்னும் இதழை வெளியிட்டனர். அதில் விடுதலைப் போராட்டச் செய்திகளும் தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றன.

=
#ArangasamyNaicker #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here