பாரதம் முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலம்

0
48

தமிழகத்தில் சென்னையில் உள்ள தீவுத்திடலில் மக்கள் ஒன்று கூடி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி பாடல் போட்டி நடனமாடி மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் மஹாராஷ்டிராவில் உள்ள ஜூகு கடற்கரையில் காலை முதலே பொது மக்கள் தங்களின் குடும்பங்களுடன் சென்று குழந்தைகளுடன் ஹோலி பண்டிகையை வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடிவருகின்றனர்.
புனேவில் குழந்தை அனைவரும் ஒன்றாக கூடி ஹோலி பண்டிகையை விளையாட்டுகளுடன் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். ஒருவர் மேல் ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், தண்ணீர் துப்பாக்கியில் வண்ண தண்ணீரை கொண்டு ஒருவர் மீது ஒருவர் அடித்து ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளும் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். அதேபோல் அசாம் மாநிலத்தில் பெண்கள் ஒருவர் மீது ஒருவர் பூக்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here