கச்சத்தீவு தொடர்பாகக் கடந்த 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான தகவலை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பரப்பி வந்தது. – நிர்மலா சீதாராமன்

0
59

சென்னை பல்லாவரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவு தொடர்பாகக் கடந்த 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான தகவலை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பரப்பி வந்தது.

கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்வின் ஓர் அங்கம். நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கச்சத்தீவை பற்றி பேசக்கூடாது என்றால் எப்படி. உரிமை இருப்பதால்தான் பேசுகிறோம்.

கச்சத்தீவு ஒரு தொல்லை என்று முன்னாள் பிரதமர் நேரு தெரிவித்தார். இந்திரா காந்தியோ கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றார்.

இது தொடர்பாக, 1974 -ம் ஆண்டு வெளியுறவு செயலாளர் எடுத்துக் கூறியும், அன்றைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொது மக்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதற்காகவே இதை வெளியிடுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here